செவ்வாய், 5 மார்ச், 2019

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்க நிர்வாகிகள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் செயல்தலைவர் ஜே.பார்த்தசாரதி, பொருளாளர் எம்.இளங்கோவன் (அய்.அய்.டி),  அமைப்புச் செயலாளர் இராம.வேம்பையன் (சி.பி.சி.எல்), செயலாளர்கள் ஏ.ராஜசேகரன் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி), ஆர்.பிரபாகரன் (நியூ இந்தியா காப்பீடு), அன்புகுமார் (அய்.சி.எப்), ஆர்.முத்துக்குமரன், யூனியன் வங்கி கே.சந்திரன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் நிர்வாகிகள், 2.3.2019 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து, கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி அவர்களை, திராவிடர் கழகத்தின் வெளியுறவு செயலாளராக நியமனம் செய்தமைக்கு நன்றி தெரிவித்தனர். மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.பலராமன் அவர்கள், கோ.கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அணிவித்தார்.

- விடுதலை நாளேடு, 3.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக