வெள்ளி, 8 மார்ச், 2019

தொழிலாளர் பணிக்கொடை 30 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு!

தொழிலாளர்களுக்கான பணிக்கொடை 10 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஸ் கோயல் தமது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

மேலும், பணியின்போது இறக்கும் பிஎஃப் சந்தாதாரர்களின் குடும்பத்துக்கான நிதியுதவி 6  லட்சம் ரூபாயாக உயர்த்தி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் முறைசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் 3,000 ரூபாயாத அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

மாதத்துக்கு ரூ.15 ஆயிரத்துக்கு கீழ் வருமானம் உள்ளோருக்கு புதிய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும். இத்திட்டத்தின்கீழ் மாதம் குறைந்தபட்சம் ரூ.55-லிருந்து ரூ.100 செலுத்தும் சந்தாதாரர்களுக்கு 60 வயதுக்கு மேல்  ஓய்வூதியம் அளிக்கப்படும் என்றும் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

Newstm Desk   | Last Modified : 01 Feb, 2019 12:33 pm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக