புதன், 27 மார்ச், 2019

கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க கூட்டம் - 2019

மறைமலைநகர், மார்ச் 24  17.2. 2-019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி அளவில் கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க துணைச் செயலாளர் கோ. கணேஷ் அவர்கள் 41 ஆண்டுகள் பணியாற்றி 23.2.2019இல் பணி ஓய்வு பெறுவதையொட்டி  கோத் ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் த.ரமேஷ் தலைமையிலும் செய லாளர் செ.ர. பார்த்தசாரதி முன் னிலையிலும் மறைமலை நகர் வள்ளுவர் மன்றத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட திரா விடர் கழக செயலாளர் பூ.சுந்தரம் அவர்கள் கோ.கணேஷ் அவர் களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். மறைமலைநகர் திராவிடர் கழக  நகர செயலாளர் துரை. முத்து அவர்களும் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தார். சங்க பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர்.
உடன் கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நல சங்கத்தின் 2019 ஆம் ஆண்டு புதிய பொறுப்பாளர் தேர்வும் நடைபெற்றது.
புதிய பொறுப்பாளர் பட்டியல்
தலைவர் - த.ரமேஷ். செய லாளர் - செ.ர.பார்த்தசாரதி, பொரு ளாளர் - கா.நாகராஜ், துணைத் தலைவர் - கோ.குமாரி
துணைச் செயலாளர்-  கோ.கணேஷ்,  ம.கருணாநிதி
செயற்குழு உறுப்பினர்கள் பா.இயேசுராஜா, வ.வசந்தி,  து.டில்லி
துணைத்தலைவர் கோ.குமாரி நன்றி கூறினார்.
மறைமலைநகர் நூலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு சங்கம் சார்பாக கோ.கணேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


- விடுதலை நாளேடு, 24.3.19

வெள்ளி, 8 மார்ச், 2019

தொழிலாளர் பணிக்கொடை பெறும் விதிமுறைகள்

தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை, அதைப் பெறுவதற்கான தகுதிகள், அதிகபட்சமாக வழங்கப்படும் பணிக்கொடை, பணிக்கொடை வழங்காத நிறுவனத்தினர் மீது தொழிலாளர் துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஈரோடு மாவட்ட தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் ஆர். மாதேஸ்வரன் விளக்குகிறார்.

தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு என்ன விதமான பணிப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது?

பணிக்கொடை, தொழிலாளர் காப்பீட்டுக் கழகம் மூலம் மருத்துவ வசதி போன்ற பணிப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பணிக்கொடையை பொறுத்தவரை பயிற்சி தொழிலாளர் நீங்கலாக பிற தொழிலாளர்கள் தகுதியுடையவர்களாவர். சம்மந்தப்பட்ட தொழிலாளர் பெறும் மாத ஊதியத்தை அடிப்படையாக கொண்டு, ஆண்டுக்கு 15 நாள் ஊதியத்தை பணிபுரியும் நிறுவனம் வழங்க வேண்டும். ஒரு நிறுவனத்தில் ஐந்தாண்டு தொடர்ச்சியாக பணிபுரியும் தொழிலாளர்கள் பணிக்கொடை பெற தகுதியுடையவர்களாவர்.

தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை எவ்வளவு ?

பணிக்கொடையை பொறுத்தவரை ஆண்டுக்கு 15 நாள் ஊதியம் வீதம் அதிகபட்சமாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வரை மட்டுமே நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும். ஊழியர்களுக்கான பணிக்கொடையை காப்பீட்டு நிறுவனங்களில் செலுத்த வேண்டும். இதுதொடர்பாக தொழிலாளர் துறை உதவி ஆணையர் நிலையில் நிறுவனங்களில் ஆய்வு செய்யப்படும். பணிக்கொடை தொழிலாளர்களுக்கு வழங்காதது கண்டறியப்பட்டால் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

அபராதத் தொகையை நிறுவனத்தினர் செலுத்தாதபட்சத்தில் தொழிலாளிக்கு பணிக்கொடையை பெற்றுத்தர என்னவிதமான நடவடிக்கை எடுக்கப்படும்?

தொழிலாளர் துறை உதவி ஆணையர் நிலையில் ஆய்வின்போது ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்காதது கண்டறியப்பட்டால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத்தொகையை செலுத்த குறிப்பிட்ட கால அளவு உள்ளது. அந்த கால கெடுவுக்குள் அபராதம் செலுத்தாதபட்சத்தில், நாளொன்று ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐ) பயன் என்ன?

அனைத்து விதமான தொழில் நிறுவனங்களுக்கும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக விதிமுறை பொருந்தும். அதன்படி தொழிலாளர் மாத ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அதனுடன் நிறுவன உரிமையாளர் குறிப்பிட்ட தொகை செலுத்துவர். அந்த தொகையை தொழிலாளர் மற்றும் அவரைச் சார்ந்த தொழிலாளர் குடும்பத்தினர் பெற தகுதியுடையவர்களாவர். தொழிலாளர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுதல், பெண் தொழிலாளர் மகப்பேறு காலம் போன்றவற்றுக்கு அந்தந்த நிறுவனத்தின் மூலம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை வழங்கப்படும்.

Published :  07 Sep 2014  10:51 IST

Updated :  07 Sep 2014  10:51 IST

- இந்து தமிழ் திசை

தொழிலாளர் பணிக்கொடை 30 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு!

தொழிலாளர்களுக்கான பணிக்கொடை 10 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஸ் கோயல் தமது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

மேலும், பணியின்போது இறக்கும் பிஎஃப் சந்தாதாரர்களின் குடும்பத்துக்கான நிதியுதவி 6  லட்சம் ரூபாயாக உயர்த்தி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் முறைசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் 3,000 ரூபாயாத அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

மாதத்துக்கு ரூ.15 ஆயிரத்துக்கு கீழ் வருமானம் உள்ளோருக்கு புதிய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும். இத்திட்டத்தின்கீழ் மாதம் குறைந்தபட்சம் ரூ.55-லிருந்து ரூ.100 செலுத்தும் சந்தாதாரர்களுக்கு 60 வயதுக்கு மேல்  ஓய்வூதியம் அளிக்கப்படும் என்றும் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

Newstm Desk   | Last Modified : 01 Feb, 2019 12:33 pm

கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்குக - கண்டன ஆர்ப்பாட்டம்

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இன்று (7.3.2019) சென்னை பெரம்பூர் அய்.சி.எப். பொது மேலாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்ட சிறப்புரையாற்றினார்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றிட மத்திய அரசை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்குக, உயர் ஜாதியினருக்கு பொருளாதார அடிப்படையிலான 10 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய், தமிழகத்தில், ரயில்வே உள்ளிட்ட அரசு - பொதுத்துறை பணி நியமனங்களில், தமிழ்நாட்டவர்க்கு முன்னுரிமை கொடு, பிற்படுத்தப்பட்டோருக்கு தனி அமைச்சகம் அமைத்திடு போன்ற கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி, துணைத் தலைவர் பார்த்தசாரதி மற்றும் அதன் நிர்வாகிகள் உள்ளிட்ட பெருந் திரளானோர் பங்கேற்றனர்.

- விடுதலை நாளேடு, 7.3.19

செவ்வாய், 5 மார்ச், 2019

ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் கடும் கண்டனம்

வாழ்வுரிமையை பறித்த மோடி

ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் கடும் கண்டனம்

சென்னை, பிப்.28- தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேள னம் சிஅய்டியு-வின் மாநிலக்குழுக் கூட்டம் சம்மேளனத் தலைவர் வி.குமார் தலைமையில் நடைபெற்றது.

சிஅய்டியு மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன், சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், பொருளாளர் ஏ.எல் மனோகரன், வட சென்னை மாவட்ட ஆட்டோ சங்கச் செயலாளர் வி.ஜெயகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சம்மேளனக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கி பொதுச் செயலாளர் எம்.சிவாஜி கூறியதாவது:-

மத்தியில் மோடி தலைமையில் பாஜக அரசு பதவியேற்றதிலிருந்து ஆட்டோ தொழிலாளர்கள் மீது பல்வேறு தாக்குதலை தொடர்ச்சியாக நடத்தி வந்துள்ளது.

இன்சூரன்ஸ் கட்டணம் ரூ.3054 இருந்தது தற்போது ரூ. 10500 ஆக உயர்த்தி கொள் ளையடிக்கப் படுகிறது.

மறுபுறம், மோட்டார் தொழிலையே கார்ப்பரேட்டுகள் வசம் ஒப்படைக்கும் விதத்தில் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை நிறைவேற்ற துடித்தது.

ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை, வாழ்வுரி மையை பறித்த மோடி அரசாங்கத்தை அப்புறப்படுத்த வேண்டியது ஒவ்வொரு ஆட்டோ தொழிலாளியின் கடமையாகும். எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகளின் பலத்தை அதி கரிக்கும் வகையில் கூட்டணியை வெற்றி பெறவைக்க கடுமையாக உழைப்பது என முடிவு செய்யப்பட்டது.

தருமபுரியில் ஆட்டோ சங்கத் தலைவர் ராஜகோபாலை தாக்கிய சமூக விரோதிகள் மீது உரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சிஅய்டியு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- விடுதலை நாளேடு, 28.2.19

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்க நிர்வாகிகள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் செயல்தலைவர் ஜே.பார்த்தசாரதி, பொருளாளர் எம்.இளங்கோவன் (அய்.அய்.டி),  அமைப்புச் செயலாளர் இராம.வேம்பையன் (சி.பி.சி.எல்), செயலாளர்கள் ஏ.ராஜசேகரன் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி), ஆர்.பிரபாகரன் (நியூ இந்தியா காப்பீடு), அன்புகுமார் (அய்.சி.எப்), ஆர்.முத்துக்குமரன், யூனியன் வங்கி கே.சந்திரன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் நிர்வாகிகள், 2.3.2019 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து, கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி அவர்களை, திராவிடர் கழகத்தின் வெளியுறவு செயலாளராக நியமனம் செய்தமைக்கு நன்றி தெரிவித்தனர். மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.பலராமன் அவர்கள், கோ.கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அணிவித்தார்.

- விடுதலை நாளேடு, 3.3.19

பி.எப். பிடித்தம்: உச்சநீதிமன்றம் புது உத்தரவு

புதுடில்லி, மார்ச் 3 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு

(பி.எப்.,) இனி அடிப்படை சம்பளத்துடன் சிறப்பு படிகளும் சேர்த்து கணக்கிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் பி.எப்., சேமிப்பிற்காக பிடித்தம் செய்யப்படும். இதே சதவீத தொகையை நிறுவனங்களும் அளிக்கும். சில நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்தை குறைத்து, சிறப்பு படிகளை அதிகரித்து மோசடி செய்தன.

இதன் மூலம் குறைவான தொகையை பி.எப்., பங்கிற்கு செலுத்தி வந்தன.இவற்றை தடுக்கும் விதமாக அடிப்படை சம்பளத்துடன் அனைத்து சிறப்பு படிகளையும் ஒட்டுமொத்தமாக கணக்கிட்டு பி.எப்., பிடித்தம் செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உதாரணமாக ஒருவர் அடிப்படை சம்பளம் ரூ. 10,000, சிறப்பு படிகள் ரூ. 5,000 சேர்த்து ரூ. 15,000 சம்பளம் பெற்றால், 10,000 ரூபாய்க்கு மட்டும் முன்பு பி.எப் பிடித்தம் செய்யப்படும். இனி சிறப்பு படிகள் சேர்த்து 15,000 ரூபாய்க்கு பி.எப்., பிடிக்கப்படும். இதன் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். அதே நேரத்தில் கையில் வாங்கும் சம்பளம் குறையும்.
- விடுதலை நாளேடு, 3.3.19