வியாழன், 19 அக்டோபர், 2017

தமிழக அரசு ஊழியர்களுக்கு படி உயர்வு: அரசு ஆணை வெளியீடு

சென்னை, அக். 18- அரசு ஊழியர் களுக்கு மருத்துவப் படி, இடர் படி, பராமரிப்பு படி உள்ளிட்ட  படிகளை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளி யிட்டுள்ள ஆணை வருமாறு:
கடந்த 1995 ஏப்ரல் 21ஆம் தேதி மற்றும் அதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஊழியர்க ளுக்கு மருத்துவ செலவை திரும்பப் பெரும் திட்டத்தின் அடிப்படையில் தற்போது பெரும் மருத்துவச் செலவில் 15 சதவீதம் அதிகரிக்கப்பட் டுள்ளது. ஏற்கெனவே இருந்த படி ரூ.100லிருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குடும்ப நல திட்டத்தில் சீருடை படி யாக கிரேட் 1 நர்சு, கண்காணிப் பாளர்கள், கிரேட் 2 தியேட்டர் நர்சுகளுக்கு ரூ.1880லிருந்து ரூ.3600 ஆகவும், பேருகால உத வியாளர்கள், கிராமப்புற நர்சு கள், ஹெல்த் இன்ஸ்பெக்டர்க ளுக்கு ரூ.1000லிருந்து ரூ.2000மாக வும் ஹெல்த் விசிட்டர்களுக்கு ரூ.900லிருந்து ரூ.1800ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வாசிங் படியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர், சிறைத் துறை மற்றும் வனத்துறை ஊழியர்களுக்கு அனைத்து கிரே டுகளுக்கும் ரூ.500ஆக வாசிங் படி உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல், பொருட்களை பராமரித்தலுக்கும் படி உயர்த் தப்பட்டுள்ளது. அரசு வழக்கு ரைஞர்களுக்கு கோட், கவுன் பராமரிப்பு படியும் அதிகரிக் கப்பட்டுள்ளன. ஆரம்ப சுகா தார நிலையங்களில் உள்ள உதவி சர்ஜன், மருத்துவ அதி காரி (இந்திய மருத்துவம்) ஆகி யோருக்கும் படி அதிகரிக்கப் பட்டுள்ளது. மேலும், போஸ் மார்டம் அதிகாரி, போஸ்ட் மார்டம் உதவியாளர் ஆகியோ ருக்கும் படி அதிகரிக்கப்பட்டு உள்ளது. தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ அதிகாரிகளுக்கும், சிறப்பு உதவி அதிகாரிகளுக்கும், நர்சுகள் மற் றும் கண் காணிப்பாளர்களுக்கும் படி ரூ.2000மாக உயர்த்தப்பட்டு உள்ளது.
மலைப்பிரதேசங்களில் பணியாற்றும் அரசு ஊழியர் களுக்கு ரூ.1200லிருந்து ரூ.1500 வரை பனிக்கால படி அதிகரிக் கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தனி உதவியாளர்கள், தலை மைச் செயலக பிரிவு அலுவ லர்கள், ஆகியோருக்கும் சிறப் புப் படி உயர்த்தப்பட்டுள்ளது. டிஜிபி, தலைமைக் காவலர், கான்ஸ்டபிள், கிரேட் 1 மற்றும் கிரேட் 2 டிரைவர்களுக்கு இடர் படி அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாநில குற்ற ஆவண பிரிவு காவல்துறையினர், அதிரடிப் படை காவல்துறையினர், வெடி குண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர், கமாண்டோ பிரிவு காவல்துறையினருக்கும் படி உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.
வாடகைப்படி
அரசு வெளியிட்டுள்ள ஆணை வருமாறு: அரசுப் பணியில் ரூ.13,600 சம்பளம் பெறுபவர் களுக்கு வாடகைப் படியாக ரூ.1300ம் அதிகப்படியாக ரூ.64,201 சம்பளம் வாங்குப வர்களுக்கு ரூ.8300ம் மாத வாடகைப் படியாக உயர்த்தப் பட்டுள்ளது. அரசு குடியிருப் பில் வசிக்காத அரசு ஊழியர் களுக்கு இந்த தொகை 13,600 சம்பளம் பெறுபவர்களுக்கு வாடகைப் படியாக ரூ.1700ம், அதிகப்படியாக ரூ.64,201 சம்பளம் வாங்குபவர்களுக்கு ரூ.8200ம் மாத வாடகைப் படியாக உயர்தப்பட்டுள்ளது. கிரேட் 1 முதல் கிரேட் 4வரையிலான ஊழியர்களுக்கு அவர வர் வாங்கும் சம்பளத்திற் கேற்ப இந்த தொகை அதிகரிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணிகள் அடுத்த 3 மாதத்துக்குள்  நிறைவு பெறும்
சென்னை, அக். 18- மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக சுரங்க ரயில் பாதை அமைக்கும் அனைத்துப் பணிக ளும் அடுத்த 3 மாதத்துக்குள் முழுமை யாக நிறைவு பெறும் என மெட்ரோ ரயில் நிறுவன முதன்மை பொது மேலா ளர் அரவிந்த் ராய் திவேதி கூறினார்.
மே தினபூங்கா முதல் தேனாம் பேட்டை (ஏஜி-டி.எம்.எஸ்) வரை நடை பெற்று வந்த 2 சுரங்கப்பாதை பணி களில் முதல் சுரங்கப் பாதைக்கான இறு திக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை செவ்வாய்க்கிழமை, தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருட் டிணன், தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜெயகவுரி, முதன்மை பொது மேலாளர் விஜயகுமார் சிங் உள்ளிட்டோர் பார் வையிட்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ ரயில் நிறுவன முதன்மை பொது மேலாளர் அரவிந்த் ராய் திவேதி கூறியதாவது: சென்னையில் நடைபெற்று வரும் சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு கட் டத்தை எட்டியுள்ளன. அடுத்த 3 மாத காலத்துக்குள் அனைத்து சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணிகளும் நிறைவ டைந்து விடும். மே தின பூங்கா முதல் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையிலான பாதையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றார்.
இரண்டாம் கட்ட பணிகளுக்காக மாநில அரசு, மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அடுத்த மாதம் (நவம்பர்) மாநில அரசு ஜப்பான் நிதி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
மாநகர போக்குவரத்து கழகத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இணைந்து பொதுவான பயண அட் டையை பயணிகளுக்கு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்படும் ரயில் சேவையை முற்றிலுமாக மெட்ரோ ரயில் நிறுவனத் தின் பொறுப்பில் கொண்டு வந்து இயக் குவது தொடர்பான பணிகள் நடை பெற்று வருகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் மெட்ரோ ரயிலுக் கான சென்னை சதுக்கம் கட்டப்பட வுள்ளது. அந்த பகுதியில் பாரம்பரியக் கட்டடங்களான ரிப்பன் மாளிகை, விக்டோரியா அரங்கம், அரசு மருத்துவ மனை, தெற்கு ரயில்வே தலைமையகம், சென்ட்ரல் ரயில் நிலையம் இருப்பதால், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழு மத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை சதுக்கம் கட்ட பாரம் பரிய கட்டடங்களைப் பாதுகாக்கும் அமைப்பின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றார் அவர்.
மே தின பூங்கா முதல் தேனாம் பேட்டை (ஏ.ஜி - டி.எம்.எஸ்.) இடையே உள்ள 3 ஆயிரத்து 616 மீட்டர் நீளம் (3.5 கிலோ மீட்டர்) கொண்ட 2 சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகள் நடை பெற்று வந்தன. இதில் முதல் சுரங்கப் பாதை பணியில் ஈடுபட்டிருந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் எல்.அய்.சி, ஆயிரம் விளக்கு ரயில் நிலையங்களின் வழியாக தேனாம்பேட்டை பகுதிக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் வர வில்லை. இயந்திரத்தில் உள்ள வெட் டுக்கருவிகளின் தேய்மானமே தாமதத் துக்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும், அதனை சரிசெய்து, பணி கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதே தடத்தில் உள்ள இரண்டாவது பாதையில் இன்னும் 450 மீட்டர் வரை தோண்ட வேண்டியுள்ளது.-விடுதலை,18.10.17

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

பிஎஃப் கணக்கு… கவனிக்க வேண்டிய 10 முறைமைகள்!


மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் எவை என்பதை சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி. பிரசாத் விளக்குகிறார்.

நாமினி!
"முதலீடு செய்யும்போது நாமினி என்பது முக்கியமான விஷயம். பிஎஃப் முதலீட்டுக்கும் நாமினி என்பது மிகவும் முக்கியம்.  வேலைக்குச் சேரும்போது பலரும் திருமணம் ஆகாமல் இருப்பார்கள். அப்போது  பெற்றோரின் பெயரை நாமினி யாகக் காட்டியிருப்பார்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு நாமினியின் பெயரை மாற்றுவது முக்கியம். அதேபோல, நாமினியாக நாம் காட்டியவர் திடீரென இறந்துவிட்டால் புதிதாக வேறு ஒரு நாமினியை உடனடியாக நியமிப்பது அவசியம். வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்கோ சென்று புதிய நாமினியை நியமிக்கலாம்.
பென்ஷன்!
பத்து வருடத்துக்கு மேல் ஒருவர் பிஎஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தி யிருந்்தால் அவருக்கு பிஎஃப் பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் தொகையை 50 முதல் 58 வயதுக்குள் எப்போது வேண்டு மானாலும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். 10 வருடத்துக்கு முன்பு வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது பென்ஷன் தொகை அட்டவணை D-யின்படி கிடைக்கும். இந்தத் தொகைக்கு வட்டி கிடையாது.
மேலும், 1.9.2014-க்கு பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்கள், மாதச் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர் களுக்கு பென்ஷன் கிடையாது. பிஎஃப் செலுத்தும் தொகையில் அதிகபட்சமாக பென்ஷனுக்காக ரூ.1,249 பிடிக்கப்படும். இந்தப் பென்ஷன் தொகை பிஎஃப் உறுப்பினரின் ஆயுட்காலம் முழுவதும் வழங்கப்படும். பென்ஷன் காலத்தில் உறுப்பினர் இறந்துவிட்டால் அவரது  வாரிசு தாரருக்கு இந்த பென்ஷன் தொகை கிடைக்கும்.
இடையில் பணம் எடுத்தல்!
பிஎஃப் தொகையை சில காரணங்களுக்கு மட்டும் இடையில் எடுக்க முடியும்.    இதற்கு குறைந்தபட்சம் 5 வருடம் பிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதாவது, பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின்   திருமணத்துக்கு, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்குப் பணம் எடுக்கலாம்.
மேலும் வீடு வாங்கவும், வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்க முடியும். எந்தெந்த செலவு களுக்கு எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதை http://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணைய தளத்தில் பார்க்கலாம்.
பிஎஃப் கணக்கை முடிப்பது!
பிஎஃப் கணக்கில் செலுத்தும் தொகை முழுவதும் இடையில் எடுக்க முடியாது. அதாவது, நிரந்தரமாக வேலையை விட்டுச் செல்லும்போதுதான் பணத்தை எடுக்க முடியும். 58 வயதுக்குமுன் சொந்த தொழில் செய்வதற்காக அல்லது மருத்துவ ரீதியான பிரச்னையினால் பணியிலிருந்து விலகும்போது, நிரந்தர ஊனம் ஏற்படும்போது, நிறுவனத்தை மூடும்போது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுக்க முடியும்.
இன்ஷூரன்ஸ்! (Employees’Deposit-Linked Insurance Scheme)
பிஎஃப் உறுப்பினராக இருப்பவர்களுக்கு தொழிலாளர் வைப்பு சார் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டத்தில் கவரேஜ் கிடைக்கும். இதில் பணிக் காலத்தில் இறப்பு ஏற்பட்டால் இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்து க்ளெய்ம் பெற முடியும். இந்த பாலிசிக்கான பிரீமியத்தை நிறுவனம் செலுத்தி விடும். இந்த பாலிசியில் அதிகபட்சம் ரூ. 3.6 லட்சம் வரை கவரேஜ் கிடைக்கும். அனைத்து நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் பாலிசி பிரீமியத்தைக் கட்டாயம் செலுத்த வேண்டும்.
அனைத்தும் ஆன்லைன்!
பிஎஃப் அமைப்பில் உள்ள பெரும்பாலான சேவைகளுக்கு ஆன்லைன் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இ-பாஸ்புக், பிஎஃப் பேலன்ஸ் செக் செய்து கொள்வது, பிஎஃப் ஸ்டேட்மென்ட் எடுப்பது என அனைத்தும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். மேலும், உங்களுடைய செல்போன் எண்ணைப் பதிவு செய்து வைத்தால், ஒவ்வொரு மாதமும் உங்களின் கணக்கில் பிஎஃப் தொகை வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரும். http://www.epfindia.com/site_en/என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.
எதற்கு எந்தப் படிவம்?
பிஎஃப் தொகையை வெளியே எடுப்பதற்கு, கடன் வாங்குவதற்கு என ஒவ்வொரு நடைமுறைக்கும் ஒரு படிவம் உள்ளது. அதாவது, பிஎஃப் வழங்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகையைப் பெறுவதற்குப் படிவம் 5 சமர்பிக்க வேண்டும். பிஎஃப் கடன் வாங்குவதற்குப் படிவம் 31 உள்ளது. எதற்கு எந்தப் படிவம் என்பதை http://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணையதளத்தில் பார்க்க முடியும். அதற்கான படிவத்தை http://www.epfindia.com/site_en/Downloads.php?id=sm8_index டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.
புகார் தெரிவிக்க!
பிஎஃப் தொடர்பான பிரச்னைக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை அல்லது வேலை பார்க்கும் நிறுவனத்தில் பிஎஃப் தொடர்பான பிரச்னை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க முடியும். இந்தப் புகாரை கடிதம் மூலமாகவும் தெரிவிக்கலாம். அல்லது ஆன்லைனிலும் தெரிவிக்க முடியும். http://epfigms.gov.in/grievanceRegnFrm.aspx?csession=2b4n9lQYhr1& என்ற இணையதளத்தில் பிஎஃப் சம்பந்தமான புகார்களைத் தெரிவிக்க முடியும். ஆன்லைனில் புகார் தெரிவிக்கும்போது அந்தப் புகார் மீதான நடவடிக்கை அடுத்த 15 நாட்களுக்குள் எடுக்கப்படும். அப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனில் அடுத்தடுத்த அதிகாரிகளுக்கு அந்தப் புகார் செல்லும்.
டிடிஎஸ்!
பிஎஃப் கணக்கி லிருந்து பணத்தை வெளியே எடுக்கும்போது டிடிஎஸ்  (TDS)செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, ஐந்து வருடத்துக்கு குறைவாகப் பணியாற்றி, வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது வெளியே எடுக்கும் பிஎஃப் தொகை 30 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், அந்தத் தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இது 1.6.2015-லிருந்து நடைமுறையில்  உள்ளது. டிடிஎஸ் குறித்த விரிவான கட்டுரையை படிக்க இங்கே செல்லவும். http://www.vikatan.com/personalfinance/article.php?aid=10541
நிரந்தரக் கணக்கு எண்!
பிஎஃப் அமைப்பு UAN(Universal  Account Number) என்ற 14 இலக்க எண்ணை நிரந்தரக் கணக்கு எண்ணை வழங்கி உள்ளது. பணிக்காலத்தில் எத்தனை முறை வேலை மாறினாலும் இந்த எண்தான் பிஎஃப் நிரந்தர எண்ணாக இருக்கும். இந்த எண் ஒருவருக்கு ஒருமுறைதான் வழங்கப்படும். கேஒய்சி விதிமுறைகளைப் பூர்த்திச் செய்து தந்து இந்த எண்ணைப் பெற முடியும்.
இந்த எண்ணை நேரடியாக வாங்க முடியாது. பணிபுரியும் அலுவலகத்தின் மூலமாகவே  வாங்க முடியும். இந்த எண்ணை http://uanmembers.epfoservices.in/uan_reg_form.php என்ற இணைய தளத்தில் கேட்கும் தகவல்களைத் தந்து ஆக்டிவேட் செய்து கொள்வது அவசியம்.
இதை ஆக்டிவேட் செய்யும் போது தரும் செல்போன் எண்ணை மாற்ற பிஎஃப் அலுவலகத்தின் உதவி தேவைப்படும். எனவே, உங்களின் நிரந்தரச் செல்போன் எண் கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்வது நல்லது.”
Advertisements

பி.எப்., தொகை விபரங்கள் அறிய எளிய நடைமுறை அறிமுகம்


சென்னை, ஆக.8 சம்பளம் பெறும் ஊழியர்கள், பி.எப்., நிலவரம் அறியவும், தொகை பெறவும், 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன. மாத சம்பளம் பெறும் ஊழியர்களிடம், பி.எப்., தொகை பிடித்தம் செய்யப்பட்டு, சேமிக்கப்படுகிறது. இதில், 4.5 கோடி சந்தாதாரர்கள், 45 லட்சம் ஓய்வூதியர்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த சேமிப்பு கணக்கு விபரங்கள், முந்தைய ஆண்டு செலுத்திய தொகை, அதற்கான வட்டி மற்றும் இருப்பு விபரங்கள் ஆகியவை, ஊழியர்களுக்கு, நிறுவனம் மூலம், பிப்ரவரி மாதம் வழங்கப்படும்.

தற்போது, 'இ--கவர்னன்ஸ்' முறையில், எளிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. 'ஆன்ட்ராய்டு' போன் மூலம், இ.பி.எப்.ஓ., என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனத் தின் இணையதளத்தில் நுழைந்தால், சந்தாதாரருக்கு வழங்கப்பட் டுள்ளன, யு.எ.என்., எண் மூலம் தங்கள் வைப்பு நிதி பாஸ் புக்கை காணலாம். கடைசியாக செலுத்தப்பட்ட, பி.எப்., தொகை மற்றும் இருப்பு தொகை விபரங்களையும் பெற முடியும். தற்போது, பி.எப்., தொகை திரும்ப பெறுதல் மற்றும் கடன் பெற, இந்த செயலி வழியாக விண்ணப்பிக்கும் வகையில், நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது.
-விடுதலை,8.8.17

“பணியிட பாலியல்” துன்புறுத்தல்கள் குறித்து 70 சதவீத பெண்கள் புகார் அளிப்பதில்லை




அய்தராபாத், ஆக.6 பணியிடங் களில் அளிக்கப் படும் பாலியல் துன் புறுத்தல்கள் குறித்து, 70 சதவீத பெண்கள் புகார் அளிப்பதில் லை என்று தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

அய்தராபாத்தில் தெலங்கானா மாநில மகளிர் ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் ஆகியவை சார்பாக, 2013ஆம் ஆண்டில் இயற்றப் பட்ட பணியிட பாலியல் துன்புறுத் தல்கள் தடுப்புச் சட்டம் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் தேசிய மகளிர் ஆணைய செயலாளர் சத்பீர் பேடி பேசியதாவது: பணியிடங்களில் அளிக்கப்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து, 70 சதவீத பெண்கள் புகார் அளிப்பதில்லை. அதேபோல், சட்டத்தில் இருக்கும் தங்களுக்குச் சாதகமான அம்சத்தை பயன்படுத்தி, சிலர் அத்தகைய துன்புறுத்தல்களை அளிக்கும் நபர்களை மிரட்டும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

பெண்களை பாலியல் ரீதியிலான துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்கு ஏராளமான சட்டங்கள் மற்றும் திட்டங்கள் உள்ளன. அந்தச் சட்டங்களிலோ, திட்டங்களிலோ, எந்த குறைபாடும் கிடையாது.

அதுகுறித்த விழிப்புணர்வுதான் பெண்களிடையே இல்லை. எனவே, அந்த சட்டங்கள், திட்டங்கள் குறித்து பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் சத்பீர் பேடி.

ராகுல் கார் மீது தாக்குதல்: பாஜக பிரமுகர் கைது 

தனேரா, ஆக.6 குஜராத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக பாஜக இளை ஞரணியைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை

பார்வையிடுவதற்காக பனஸ்கந்தா மாவட்டம், தனேரா நகருக்கு ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை சென்றிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் சிலர் அவரது கார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆர்எஸ்எஸ் அமைப்பினரும், பாஜகவினரும்தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்தச் சூழலில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜெயேஷ் டார்ஜி (எ) அனில் ரதோட் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து பனஸ்கந்தா மாவட்ட காவல் துறைக் கண் காணிப்பாளர் நீரஜ் பட்குஜார் கூறியதாவது: ராகுல் காந்தி பயணித்த காரில் கல்லை வீசித் தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஜெயேஷ் டார்ஜி என்பவரைக் கைது செய்துள்ளோம். விசாரணையின்போது காங்கிரஸ் கட்சியினர் ஜெயேஷின் பெயரைக் குறிப்பிட்டனர். அதனடிப்படையில் அந்த நபரைக் கைது செய்திருக்கிறோம். தாக்குதல் நடத்திய மர்ம நபர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் நீரஜ் பட்குஜார். இதனிடையே, கைது செய்யப்பட்டுள்ள ஜேயேஷ் டார்ஜி பாஜகவின் இளைஞரணியைச் சேர்ந்தவர் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

இதுகுறித்து அக்கட்சியின் பனஸ்கந்தா மாவட்ட பொதுச் செயலர் பிருத்விராஜ் கத்வாடியா கூறியதாவது: பனஸ்கந்தா மாவட்ட பாஜக இளைஞரணியின் செயலர்தான் ஜெயேஷ் டார்ஜி.

ராகுல் காந்தி கார் மீது கல்லை வீசித் தாக்குதல் நடத்தியது அவர்தான். தாக்குதல் நடத்திய மேலும் சிலரது பெயர்கள் அடங்கிய பட்டியலை காவல் துறையிடம் சமர்ப்பித்திருக்கிறோம் என்று பிருத்விராஜ் கத்வாடியா தெரிவித்தார்.

குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு தேர்வு 

புதுடில்லி, ஆக.6 நாட்டின் 13ஆவது குடியரசு துணைத் தலை வராக முன்னாள் மத்திய அமைச் சர் வெங்கய்ய நாயுடு  தேர்ந்தெ டுக்கப்பட்டார்.
அவர், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி பொது வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தியைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமான வாக்கு களைப் பெற்று வாகை சூடினார். புதிய குடியரசுத் துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு வரும் 11ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
நடுத்தர விவசாயக் குடும் பத்தில் இருந்து வந்து, நாட்டின் உயரிய அரியணையில் அமரப் போகும் வெங்கய்ய நாயுடுவுக்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகிக்கப் போகும் அவரது தலைமையின் கீழ் புதிய தேசம் மலரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அந்தத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தமக்கு வாக் களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள வெங்கய்ய நாயுடு, அரசியல் சாசனத்தைக் கட்டிக் காத்து கண்ணியத்தை நிலைநாட்டுவேன் என்று உணர்வுப்பூர்வமாக உறுதி யளித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல், சனிக் கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வெங்கய்ய நாயுடுவும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் சார்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. வெங்கய்ய நாயுடு காலை 10.05 மணிக்கு வாக்க ளித்தார்.  மாலை 5 வாக்குப் பதிவு முடிந்த பிறகு, பதிவான வாக் குகள் எண்ணப்பட்டு, இரவு 7 மணியளவில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது.

அதில், மொத்தம் பதிவான 771 வாக்குகளில், வெங்கய்ய நாயுடு 516 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த் துப் போட்டியிட்ட கோபால கிருஷ்ண காந்தி 244 வாக்குளை மட்டுமே பெற்றார்.
-விடுதலை,6.8.17

ஞாயிறு, 2 ஜூலை, 2017

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. நல்.இராமச்சந்திரன் பணி நிறைவு பாராட்டுவிழா








வல்லம், ஜுலை 2- பெரியார் மணியம்மை பல்கலைக்கழ கத்தில் துணைவேந்தர் பேரா.நல்.இராமச்சந்திரன் அவர்கள் தனது 33 ஆண்டு கால சேவை யில் 10 ஆண்டுகளாக துணை வேந்தர் பொறுப்பு வகித்து 30.6.2017 அன்று பணி நிறைவு செய்தார்.
அவர் சேவையை பாராட் டும் விதமாக பல்கலைக்கழக கூட்டு நல பணியாளர் மன் றம்  பாராட்டு விழாவிற்கு ஏற் பாடு செய்திருந்தது. நிகழ்ச் சிக்கு பல்கலைக்கழக கூட்டு நல பணியாளர் மன்ற தலை வர் முனைவர் கே.லட்சுமி அவர்கள் வரவேற்புரை ஆற்றிட அதனை தொடர்ந்து பேராசிரியர்கள் மற்றும் பணி யாளர்கள் துணைவேந்தர் அவர்களிடம் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.  விழாவில் பல் கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தலை மையேற்று சிறப்பித்து உரை யாற்றும் போது பேரா.நல்.இராமச்சந்திரன் அவர்கள் தன் பணிக் காலம் முழுவதும் பல் கலைக்கழகத்திற்கென்றே முழு அர்ப்பணிப்புடன் செயல் பட்டார் என்று பாராட்டினார்.
புதிய துணைவேந்தர் பங் கேற்று வாழ்த்துரை வழங் கினார். விழாவில் பதிவாளர் முனைவர்  சொ.ஆ.தனராஜ், அவர்களின் வாழ்த்துரையில் முன்னாள் துணைவேந்தர் வகுத்த பாதையில் மற்றும் புதிய துணைவேந்தர் அவர் களின் வழிகாட்டுதலின்படி யும் இப்பல்கலைக்கழகத்தை இன்னும் சிறந்த நிலைக்குக் கொண்டு செல்வோம் என்று உறுதி அளித்தார். விழாவில் திட்டமிடுதல் மற்றும் வளர்ச்சி துறையின் ஆலோசகர் முனை வர் எஸ்.தேவதாஸ், பேராசிரி யர் மோகன்,  கல்விப்புல முதன்மையர் பேரா.பி.கே.சிறீவித்யா, முனைவர் செந் தமிழ்குமார் மற்றும் இயக்கு நர்கள், பேராசிரியர்கள், பணி யாளர்கள் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினார்கள். பல் கலைக்கழக வேந்தர் அவர்கள் முன்னாள் துணைவேந்தர் பேரா.நல்.இராமச்சந்திரன் அவர்கள் மற்றும் வாழ்விணை யர் பேரா.உ.பர்வின் ஆகியோ ருக்கு பொன்னாடை அணி வித்தார்.
அதனை தொடர்ந்து பல் கலைக்கழக கூட்டு நல பணியாளர் மன்றம் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட் டது. முன்னாள் துணைவேந்தர் பேரா.நல்.இராமச்சந்திரன் அவர்கள் பெரியார் புராவிற்கு ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் பெயரில் அறக்கட்டளை நிறுவி ரூ.1,00,000 -லட்சம் மற்றும் நிர் வாக மேலாண்மையில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ ருக்கு பரிசு வழங்குவதற்கு தனது தாயார் மாரிக்கண்ணு பெயரில் அறக்கட்டளை நிறுவி ரூ.1,00,000 வழங்கினார்.
இறுதியாக முனைவர் ஆர்.ஜெயந்தி நன்றியுரையாற் றினார்.
-விடுதலை,2.7.17

செவ்வாய், 13 ஜூன், 2017

பணி நிறைவு பாராட்டு விழா- கடலூர்


கடலூர், பிப். 11- கடலூர் மாவட் டம் உணவு பாதுகாப்பு (ம) மருந்து நிர்வாகத்துறை அலு வலர்கள் சார்பாக நெல்லிக் குப்பம் நகராட்சி மற்றும் அண்ணாகிராமம் வட்டாரம் உணவுப்  பாதுகாப்பு அலுவ லர் இரா.கந்தசாமி அவர்க ளுக்கு பணி நிறைவு பாராட்டு விழா 31.1.2017 அன்று மாலை கடலூர் மஞ்சக்குப்பம் அபி நயா ஓட்டலில் நடைபெற்றது.
அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளரும், கடலூர் வட் டார உணவு பாதுகாப்பு அலு வலர் இரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னதாக உணவு பாதுகாப்பு அலுவலர் ப.நல்ல தம்பி வரவேற்புரை ஆற்றி னார். திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் அவர்கள் இரா. கந்தசாமி அவர்களது பணிக் காலத்தில் தொழுநோய், பொது சுகாதாரம், உணவுப் பாது காப்பு ஆகிய துறைகளில் அவர் சிறப்பாக பணியாற்றிய நிகழ்வுகளை சுட்டிக்காட்டி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சிவக்குமார், பண்ருட்டி தொகுதி முன்னாள் செயலா ளர் க.இராமசாமி, முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் சீ. பாலசுந்தரம், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் டி. புருசோத்தமன், அரசு ஊழியர் சங்க மு.மாவட்ட செயலாளர் காசிநாதன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இல.அரிகிருஷ்ணன், நெல் லிக்குப்பம் வணிகர் சங்க தலைவர் இராமலிங்கம், திருக்கோவிலூர் உணவு பாது காப்பு அலுவலர் சரவணன், அஞ்சல் துறை மாவட்ட செயலாளர் இரட்சகர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் டி. மகாலிங்கம், கோவி.சுப்பிர மணியன், ஞானமணி ஆகி யோர் உரையாற்றினர்.
விழாவில் மாவட்ட கழக முன்னாள் செயலாளரும், பண்ருட்டி ஜோதி ஸ்டியோ உரிமையாளருமான கோ.புத் தன், அண்ணா கிராம ஒன்றிய கழக செயலாளர் இ.இராசேந் திரன், கிளை செயலாளர் ப. நாகமுத்து, சாத்திப்பட்டு பால முருகன், அருள்குமார், இரா. கந்தசாமி அவர்களது துணை வியார் க.அமுதா, மகன் க. திராவிடமணி, மகள் பகுத் தறிவு, மருமகன் செ.நவீன் மற்றும் உறவினர்கள், உடன் பணியாற்றுபவர்கள்.
ஓய்வு பெற்ற அரசு ஊழி யர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சீ.செந்தாமரைக் கண்ணன் நன்றி கூறினார். முன்னதாக விழா நாயகர் இரா.கந்தசாமி ஏற்புரை வழங்கினார்.
-விடுதலை,11.2.17

சனி, 10 ஜூன், 2017

கோத்ரேஜ் நிறுவன ஊழியர் பணி நிறைவு பாராட்டு-5.5.17

 மறைமலைநகர், மே 15- கோத் ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச்சங்க செயற்குழு உறுப் பினர் எம்.கே.சூரியகலாவதி அவர்கள் கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்டு நிறுவனத்தில் (மறை மலை நகர்) 34ஆண்டுகள் பணி யாற்றி 5.5.2017இல் ஓய்வு பெற் றார்.
5.5.2017 பிற்பகல் 4 மணி அளவில் தொழிற்சாலை வளா கத்தில் தொழிலாளர்கள் சார்பி லும், அலுவலர்கள் சார்பிலும் தொழிற்சாலை மேலாளர் பசுபதி அவர்கள் தலைமையில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற் றது. சங்க துணைச் செயலாளர் ம.கருணாநிதி வாழ்த்து மடல் அளித்தார்.  சங்க செயற்குழு  உறுப்பினர்கள் க.சிவகாமி, வ. வசந்தி, பா.இயேசுராஜா மற் றும் தொழிலாளர்களும் அலுவ லர்களும் பெருவாரியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். கோத் ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டு, அன்பளிப் புடன் பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தொழிற் சாலை மேலாளர் பசுபதி, மனித வள அலுவலர் ஜோசப் மரியதாஸ் இராஜசோகர், சங்க தலைவர் த.ரமேஷ், துணச் செயலாளர் கோ.கணேஷ், செய லாளர் செ.ர.பார்த்தசாரதி பொரு ளாளர் க.நாகராஜ் மற்றும் துணைத் தலைவர் கோ.குமாரி ஆகியோர் பங்கேற்று சிறப்பித் தனர்.
-விடுதலை,15.5.17












ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராடத் தடை


லக்னோ, ஏப். 2 உத்தரப்பிரதேசத்தில் மாநில பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்களும், ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அம்மாநில பாஜக அரசு தடை விதித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்கள் 18 உள்ளன. அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை உள்ளன. இந்நிலையில், மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரிபவர்களை, எஸ்மா எனப்படும் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் ஆதித்யநாத் அரசு கொண்டுவந்துள்ளது.
இதன் மூலம் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களோ, ஊழியர்களோ வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தடை செய்யப் பட்டுள்ளது. மேலும், இதனை மீறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், வாரண்ட் இல்லாமல் அவர்களை கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 -விடுதலை,2.4.17

109 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்



சென்னை,ஏப்.2 அம்பத்தூர் எஸ்.ஆர்.எம். மேல் நிலைப் பள்ளியில் விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான நியமன ஆணை வழங்குதல், பல்வேறு கல்வித் திட்டங்கள் தொடக்க விழா நேற்று (1.4.2017) நடந்தது. இதில் பங்கேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 109 பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 13 மாவட்டங்களில் ரூ. 36 கோடியே 14 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 36 கூடுதல் பள்ளிக் கட்டடங்கள்; கரூர் மாவட்டத்தில் ரூ. 3 கோடியே 25 லட்சத்து 54 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு கூடுதல் பள்ளிக் கட்டடங்கள். அனைவருக்கும் இடை நிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 21 மாவட்டங்களில் 236 கோடியே 92 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 140 பள்ளிக் கட்டடங்கள்.
286 பள்ளிகளில் 6 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப் பட்டுள்ள மெய்நிகர் வகுப்பறைகள் என 284 கோடியே 9 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப் பீட்டிலான பள்ளிக் கல்வித் துறை கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
கோயம்புத்தூர், பெரம்பலூர், தருமபுரி ஆகிய மூன்று மாவட்டங்களில் தொடங்கப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி,பயிற்சி நிறுவனங்களுக்கு ரூ. 10 கோடியே 5 லட்சம் செலவில் கட்டடங்கள் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.
 -விடுதலை,2.4.17

போராட்டங்களில் சங்கங்கள் ஒன்றிணையக் கூடாதாம்!



 தொழிலாளர்களை அச்சுறுத்தும் மத்திய அரசு நிறுவனம்
டில்லி, ஏப்.3- இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவன மான பிஎஸ்என்எல் நிறுவனத் தின் வெவ்வேறு  தொழிற்சங் கத்தினர் ஒன்றிணைந்து போராடக் கூடாது என்று மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு நிர்வாகத் தின் சார்பில் அளித்துள்ள அறி விக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
கடந்த ஓராண்டாக பணி புரிந்து வருகின்ற  சங்கங்களின் அங்கீகாரம்குறித்த சரிபார்ப்புப் பணிகள் முடிந்துள்ளன. அதன் படி, நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் நிர்வாகம் சாராத பணியாளர்கள் சங்கத் துக்கு அங்கீகாரம் அளிக்கப் பட்டுள்ளது.
இதன்பிறகு, நிர்வாக அலு வலர்கள் சங்கத்தைச் சேர்ந்த வர்களும், பணியாளர்கள் சங் கத்தைச் சேர்ந்தவர்களும் அவர வர்களுக்குரிய விதிமுறை களைக் கொண்டு தனித்தனியே இயங்கிடவேண்டும்.
அண்மைக்காலமாக இரு அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொண்டு  செயல்பட்டுவருவது தெரிய வந்துள்ளது. ஆகவே, பின்கூறப்பட்டுள்ளவற்றை கவனத்தில் கொள்ள வேண் டும்.
பிஎஸ்என்எல்லில் பணி யாற்றுவோர் பிரதிநிதிகளுக் கான விதிமுறைகளின்படி,  பிஎஸ்என்எல் நிர்வாகம் சாராத பணியாளர்கள் சங்கம் என்றும், பிஎஸ்என்எல் நிர்வாக அலு வலர்கள் சங்கம் என்றும் 2014ஆம் ஆண்டு விதிகளின் கீழ் உள்ளவர்கள் ஆவர்.
நிர்வாக அலுவலர்கள் சங் கத்தின்கீழ் உள்ளவர்கள்  பணி யில் தங்கள் சங்க உறுப்பினர் களிடம் சேவை ஆர்வத்தை முன்னெடுப்பவர்களாக இருக்க வேண்டும்.
நிர்வாக அலுவலர்கள் சங்கம், நிர்வாகம் சாராத பணி யாளர்கள் சங்கத்துடன் சங்கப் பணிகளிலும், பிரச்சினைகளி லும் கைகோர்க்கக் கூடாது. இரு அமைப்புகளும் எந்தப் பிரச்சினைகளிலும் ஒன்றி ணைந்து போராட்டத்தை முன் னெடுக்கக் கூடாது.
இரு சங்கங்களும் தங்கள் பணியாளர்களின் பிரச்சினை களை தனித்தனியே கையாண்டு கொள்ள வேண்டும் என அறி வுறுத்தப்படுகிறார்கள். இன் னும் சொல்லப்போனால், நிர் வாக அலுவலர்களுக்கான பிரச் சினைகளில் பணியாளர்கள் சங்கத்தினர் தலையிடக்கூடாது. பணியாளர்களுக்கான பிரச்சி னைகளில்  நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் தலையிடக்கூடாது.
நிர்வாக அலுவலர்கள் தரப்பும், நிர்வாகம் சாராத பணியாளர்கள் தரப்பும் என ஒருவர் பிரச்சினையில் மற்றவர் தலையிடாமல் விலகியே இருக்கவேண்டும்.
இவ்வாறு தென்னக பிராந் தியத்துக்கான துணை பொது மேலாளர் ஏ.கே.சின்கா குறிப் பிட்டுள்ளதாக அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கடந்த சில காலமாகவே தொழிலா ளர்கள், அலுவலர்கள் சங்கத் தினரை பிரித்தாளும் சூழ்ச்சி யுடன் மத்திய அரசு  அச்சுறுத் தும் வகையில் உள்ள பி.எஸ்.என்.எல் நிர்வாகத்தின் போக்கினை இருசங்கத்தினரும் கடுமையாக கண்டித்துள்ளனர்.
-விடுதலை,3.4.17

ரூ.2 கோடியில் ரயில்வே தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள்


ஜோலார்பேட்டை, ஏப்.3 ஜோலார்பேட்டையில் ரயில்வே தொழிலாளர்களுக்கு ரூ.2 கோடியில் கட்டப்பட்ட குடியிருப்பை தெற்கு ரயில்வே பொது மேலாளர் வஷிஸ்டா ஜோரி அண்மையில் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு ஜோலார் பேட்டை ரயில்வே உதவி கோட்டப் பொறியாளர் முகமது அஸ்லம் தலைமை வகித்தார். முதுநிலை பகுதி பொறியாளர் பி.கணேசன் முன்னிலை வகித் தார். ரயில் நிலைய மேலாளர் பி.பழனிசாமி வரவேற்றார்.
இதில், சிறப்பு அழைப் பாளராக தெற்கு ரயில்வே பொது மேலாளர் வஷிஸ்டா ஜோரி கலந்து கொண்டு, குடியி ருப்புக் கட்டடத்தையும், கால் பந்து விளையாட்டு மைதானத் தையும் திறந்து வைத்தார். விழாவில், சென்னை கோட்ட மேலாளர் அனுபம் சர்மா, உள்பட ரயில்வே அதிகாரிகள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர். ரயில் நிலைய உதவி மேலாளர் லியோ டால்ஸ்டாய் நன்றி கூறினார்.
இதைத்தொடர்ந்து செய்தி யாளர்களிடம் வஷிஸ்டா ஜோரி கூறுகையில், 'மங்களூரு, திருப்பதி விரைவு ரயில்கள் ஜோலார்பேட்டையில் நின்று செல்லவும், இந்த ரயில் நிலை யத்தில் பயணிகளுக்கு பொதுக் கழிப்பறை கட்டித்தரவும் நட வடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
-விடுதலை,3.4.17

.

வியாழன், 30 மார்ச், 2017

கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க புதிய பொறுப்பாளர்கள் தேர்வு


12.03.17 நண்பகல் 12.00மணி அளவில் குரோம்பேட்டை, இலட்சுமி புரத்திலுள்ள பெரியார் மன்றத்தில் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ப.முத்தையன் அவர்கள் மேற்பார்வையில் கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க 2017ம் ஆண்டுக்காண புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது.
கீழ் கண்டோர் 2017ம் ஆண்டுக்காண புதிய பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் - த.ரமேஷ்
செயலாளர் - செ.ர.பார்த்தசாரதி
பொருளாளர் - கா.நாகராஜ்
துணைத் தலைவர் - கோ.குமாரி
துணைச் செயலாளர்- 1.கோ.கணேஷ், 2.ம.கருணாநிதி
செயற்குழு உறுப்பினர்கள்
1.பா.இயேசுராஜா
2.வ.வசந்தி
3.கே.சிவகாமி
செயற்குழு உறுப்பினராக இருந்த எம்.கே.சூரியகலாவதி அவர்கள் 'மே' மாதம் பணி ஓய்வு பெறுவதால் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, பாராட்டப்பட்டார்,

26 வார கால மகப்பேறு விடுப்பு: புதிய சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

புதுடில்லி, மார்ச் 30 இந்திய மகப்பேறு உதவிச்சட்டம் 1961- இன்படி பணிபுரியும் பெண்களுக்கு 12 வாரம் பேறுகால விடுப்பு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த கால அளவை 26 வாரங்களாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக மேற்படி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு வகை செய்யும் மகப்பேறு உதவி சட்டத்திருத்த மசோதா-2016, கடந்த மார்ச் 9- ஆம் தேதி மக்களவையிலும், 20- ஆம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த மசோதாவுக்கு கடந்த திங்கட்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி 55 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த 12 வாரகால பிரசவ விடுமுறை தற்போது 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே இந்த 26 வாரகால விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு பிரசவ விடுமுறை அளிப்பதில் கனடா (50 வாரங்கள்), நார்வே (44 வாரங்கள்) நாடுகளுக்கு அடுத்த இடத்தை இந்தியா (26 வாரங்கள்) பிடித்துள்ளது.
-விடுதலை,30.3.17

புதன், 1 மார்ச், 2017

பாலியல் புகார்களை விசாரிக்கும் குழுக்களுக்குப் புதிய வழிகாட்டும் முறைகள் மத்திய அரசு அறிவிப்பு


புதுடில்லி, ஜூலை 18_ பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் களுக்கு ஊதியத்துடன் 3 மாத விடுப்பு வழங்கப் படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு நிறுவனத்தி லும் புகார் குழு என்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள் ளது.
இந்தக் குழுவின் தலைவராக ஒரு பெண் இருப்பார். ஒருவேளை ஒரு நிறுவனத்தின் உயர் பதவியில் பெண் அதிகாரி இல்லையெனில், வேறு நிறுவனத்தில் பணியாற் றும் பெண் அதிகாரி, குழு வின் தலைவராக இருப் பார்.  மேலும், அந்தக் குழு வில் உள்ளவர்களில் பாதி யளவுக்கும் மேற்பட் டோர் பெண்களாக இருப் பார்கள்.
இந்நிலையில், இந்தப் புகார் குழுக் களுக்கு புதிய வழிகாட் டும் விதிமுறைகளை மத் தியப் பணியாளர், பயிற் சித் துறை வெள்ளிக் கிழமை அறிவித்தது. அந்த அறிவிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:
பாலியல் புகார்களை அலட்சியமாகவோ, யதேச் சாதிகாரத்துடனோ விசா ரிக்கக் கூடாது. பாதிக்கப் பட்ட பெண் அல்லது குற்றம்சாட்டப்பட்ட அலுவலருக்கு பணியிட மாறுதல் அளிக்குமாறு பரிந்துரைக்க புகார் குழுவுக்கு அதிகாரம் உள் ளது. மேலும், பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு ஊதி யத்துடன் 3 மாத விடுப்பு வழங்குவதற்கு பரிந்து ரைக்கவும் அதிகாரம் உள்ளது.
பாலியல் புகார் தொடர்பான விசாரணை களில், தன்னார்வ அமைப்பு அல்லது பாலியல் குற்றங் களுக்காக போராடும் பிரபல அமைப்பை மூன் றாவது நபராக புகார் குழு அனுமதிக்க வேண் டும். பாலியல் தொந்தர வுக்குள்ளான 3 மாதங் களுக்குள் பாதிக்கப்பட்ட வர் புகார் தெரிவிக்க வேண்டியது அவசியம். குற்றம்சாட்டப்பட்ட நபரின் ஊதியத்தைப் பிடித்தம் செய்ய பரிந்து ரைக்கவும், அந்தத் தொகையை பாதிக்கப் பட்டவருக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கவும் புகார் குழுவுக்கு அதி காரம் உள்ளது.
ஒரு வேளை, உள்நோக்கத் துடனோ, தவறாகவோ, போலி ஆதாரங்களைக் காட்டியோ பாலியல் புகார் கொடுத்தால், அவர் களுக்கு எதிராக நட வடிக்கை எடுக்கப்படும். குற்றம் சாட்டப்பட்ட வர், தனக்கு எதிரான ஆதாரங்களை கொடுக்க விரும்பும் சாட்சிகளை மிரட்டினோலா, அச் சுறுத்தினாலோ அந்தப் புகார்களைக் கொடுத்த வர்களுக்கு எதிராக கடு மையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், புகார் குழுவுக்கோ, அந்தக் குழுவின் உறுப்பினர் களுக்கோ, விசாரணை அதிகாரி உள்ளிட்டோ ருக்கோ மிரட்டல் விடுத் தாலும் கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-விடுதலை,18.7.15

தொழிற்சாலைகளில் இரவில் வேலை செய்ய ஆந்திர பெண்களுக்கு மாநில அரசு அனுமதி


அய்தராபாத், ஏப்.6_ தொழிற்சாலைகளில் இரவு நேரத்தில் பெண்கள் வேலை செய்ய இருந்த தடையை நீக்கி ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திராவை சேர்ந்த முன்னணி நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பெண்கள் இரவில் வேலை பார்க்க இருந்து வரும் தடையை நீக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து மாநில தெழிற்சாலைகள் இயக்கு நரகத்தைத் தொடர்பு கொண்டு தடையை நீக்க உத்தரவிட்ட அவர் தகுந்த பாதுகப்பு வசதி களுடன் பெண்களை இரவில் வேலை செய்ய அனுமதிக்கும்படி தெரிவித்துள்ளார்.
மேலும் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவேண்டும், ஆண்களுக்கு சமமான வாய்ப்புகள், சாப்பாட்டு அறைகள், போதுமான கழிவறை வசதிகள் கட்டிக்கொடுக்க வேண்டும்,
அவர்களின் குழந்தைகளுக்கு காப்பக வசதி, பாலியல் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க குழுக்களை அமைப்பது, முக்கியமாக போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என நிறுவனங்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.
-விடுதலை,6.4.15

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

1970ஆம் ஆண்டின் சட்டத்தை நீக்காமல் ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்க முடியாது


உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்
சென்னை,பிப்.26- நிரந்தரத் தொழிலாளர்களும், நிரந்தர மற்ற தொழிலாளர்களும் இணைந்து போராடினால்தான் கோரிக் கைகள் நிறைவேறும் என்று சென்னை உயர்நீதிமன்ற முன் னாள் நீதிபதி அரிபரந்தாமன் கூறினார்.
சிஅய்டியு, ஏஅய்டியுசி, அய்என்டியுசி உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் சார்பில் வியாழனன்று (மார்ச் 23) சென் னையில் ஒப்பந்தத் தொழிலா ளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அரிபரந்தா மன் பேசியது வருமாறு:
1970ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர் ஒழுங்குமுறைப் படுத்தும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இத னால் தொழிற்கூடங்களில் ஒப் பந்தம், தினக்கூலி உள்ளிட்ட பெயர்களில் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
இதனால் நிரந்தரத் தொழி லாளர்களின் பேரம் பேசும் வலிமை குறைந்தது. எனவே தான், 1970ஆம் ஆண்டின் காலகட்டத்தை விட அதிகமான சுரண்டல் தற்போது நடந்தாலும், வலுவான போராட்டங்களை தொழிற்சங்கங்களால் நடத்த முடியவில்லை.துப்புரவுத் தொழிலாளர்களில் ஒப்பந்த முறை கூடாது என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்து விட் டது. இதேபோன்று 1976ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப் பித்திருந்த ஆணையை 2001இல் உச்சநீதிமன்றம் ரத்து செய்து தொழிலாளர்களுக்கு அநீதி இழைத்தது. நிரந்தரமற்ற தொழி லாளர் முறையை ஒழிக்க உத்தர விட்டாலும், நீதிமன்றங்கள் அதனை ரத்து செய்து விடுகின்றன. இதுதான் இன்றைய நிலை.
மாருதி சுசூகி கார் தொழிற் சாலையில் தொழிற்சங்கம் அமைத்ததற்காக 2300 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் 1800 பேர் நிரந்தர மற்ற தொழிலாளர்கள். 2012ஆம் ஆண்டு அத்தொழிற் சாலையில் ஏற்பட்ட மோதலில் மேலாளர் உயிரிழந்தார். 147 பேர் சிறை யில் அடைக்கப்பட்டனர். இரண் டரை ஆண்டுகளுக்குப் பிறகே 113 பேருக்கு பிணை கிடைத் தது. 5 ஆண்டுகளாகியும் 34 பேருக்கு பிணை கிடைக்க வில்லை. கோடிகோடியாக ஊழல் செய்தவர்களுக்கு 21 நாளில் நீதிமன்றங்கள் பிணை கொடுத்து விடுகின்றன. இந்தச் சூழலில் 1970ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர் ஒழுங்குமுறைப் படுத்தும் சட்டத்தை முழுமை யாக நீக்காமல் ஒப்பந்தத் தொழி லாளர் முறையை ஒழிக்க முடி யாது. இவ்வாறு அவர் பேசினார்.
சிஅய்டியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்ம நாபன் பேசுகையில், பன் னாட்டு நிறுவனங்களும், உள் நாட்டு நிறுவனங்களும் சங்கம் அமைக்கும் உரிமையை மறுக் கின்றன. அந்நிய முதலீடுகள் வருவதாகக் கூறி சட்டங்கள் திருத்தப்படுகிறது. தொழிற்சங் கங்கள் தொழில்வளர்ச்சியை ஒருபோதும் எதிர்க்கவில்லை. அந்நிய முதலீடுகள் வேலை வாய்ப்பை உருவாக்கினால், இந்திய சட்டங்களை மதித்தால் எதற்காக எதிர்க்கப் போகி றோம்? என்று கேள்வி எழுப் பினார். தொழிலாளர் துறையின் செயலாளர்களே தொழிலாளர் களின் நலனுக்கு மாறாக செயல்படுகின்றனர். இந்தியா வில் உள்ள 44 தொழிலாளர் சட்டங்களை இணைத்து 4 சட் டங்களாக மாற்றப்போவதாக மத்திய அரசு கூறுவது, முதலாளி களுடைய நலனுக்கானது. இதற்கெதிராகத்தான் தொழி லாளர்களின் நலனுக்காக தற் போது உள்ள சட்டங்களையும், நீதிமன்ற தீர்ப்புகளையும் அமல் படுத்தக் கோருகிறோம் என்றும் ஏ.கே.பத்மநாபன் கூறினார்.
-விடுதலை,26.2.17