அய்தராபாத், ஆக.6 பணியிடங் களில் அளிக்கப் படும் பாலியல் துன் புறுத்தல்கள் குறித்து, 70 சதவீத பெண்கள் புகார் அளிப்பதில் லை என்று தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
அய்தராபாத்தில் தெலங்கானா மாநில மகளிர் ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் ஆகியவை சார்பாக, 2013ஆம் ஆண்டில் இயற்றப் பட்ட பணியிட பாலியல் துன்புறுத் தல்கள் தடுப்புச் சட்டம் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் தேசிய மகளிர் ஆணைய செயலாளர் சத்பீர் பேடி பேசியதாவது: பணியிடங்களில் அளிக்கப்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து, 70 சதவீத பெண்கள் புகார் அளிப்பதில்லை. அதேபோல், சட்டத்தில் இருக்கும் தங்களுக்குச் சாதகமான அம்சத்தை பயன்படுத்தி, சிலர் அத்தகைய துன்புறுத்தல்களை அளிக்கும் நபர்களை மிரட்டும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
பெண்களை பாலியல் ரீதியிலான துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்கு ஏராளமான சட்டங்கள் மற்றும் திட்டங்கள் உள்ளன. அந்தச் சட்டங்களிலோ, திட்டங்களிலோ, எந்த குறைபாடும் கிடையாது.
அதுகுறித்த விழிப்புணர்வுதான் பெண்களிடையே இல்லை. எனவே, அந்த சட்டங்கள், திட்டங்கள் குறித்து பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் சத்பீர் பேடி.
ராகுல் கார் மீது தாக்குதல்: பாஜக பிரமுகர் கைது
தனேரா, ஆக.6 குஜராத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக பாஜக இளை ஞரணியைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை
பார்வையிடுவதற்காக பனஸ்கந்தா மாவட்டம், தனேரா நகருக்கு ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை சென்றிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் சிலர் அவரது கார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆர்எஸ்எஸ் அமைப்பினரும், பாஜகவினரும்தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்தச் சூழலில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜெயேஷ் டார்ஜி (எ) அனில் ரதோட் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து பனஸ்கந்தா மாவட்ட காவல் துறைக் கண் காணிப்பாளர் நீரஜ் பட்குஜார் கூறியதாவது: ராகுல் காந்தி பயணித்த காரில் கல்லை வீசித் தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஜெயேஷ் டார்ஜி என்பவரைக் கைது செய்துள்ளோம். விசாரணையின்போது காங்கிரஸ் கட்சியினர் ஜெயேஷின் பெயரைக் குறிப்பிட்டனர். அதனடிப்படையில் அந்த நபரைக் கைது செய்திருக்கிறோம். தாக்குதல் நடத்திய மர்ம நபர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் நீரஜ் பட்குஜார். இதனிடையே, கைது செய்யப்பட்டுள்ள ஜேயேஷ் டார்ஜி பாஜகவின் இளைஞரணியைச் சேர்ந்தவர் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
இதுகுறித்து அக்கட்சியின் பனஸ்கந்தா மாவட்ட பொதுச் செயலர் பிருத்விராஜ் கத்வாடியா கூறியதாவது: பனஸ்கந்தா மாவட்ட பாஜக இளைஞரணியின் செயலர்தான் ஜெயேஷ் டார்ஜி.
ராகுல் காந்தி கார் மீது கல்லை வீசித் தாக்குதல் நடத்தியது அவர்தான். தாக்குதல் நடத்திய மேலும் சிலரது பெயர்கள் அடங்கிய பட்டியலை காவல் துறையிடம் சமர்ப்பித்திருக்கிறோம் என்று பிருத்விராஜ் கத்வாடியா தெரிவித்தார்.
குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு தேர்வு
புதுடில்லி, ஆக.6 நாட்டின் 13ஆவது குடியரசு துணைத் தலை வராக முன்னாள் மத்திய அமைச் சர் வெங்கய்ய நாயுடு தேர்ந்தெ டுக்கப்பட்டார்.
அவர், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி பொது வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தியைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமான வாக்கு களைப் பெற்று வாகை சூடினார். புதிய குடியரசுத் துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு வரும் 11ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
நடுத்தர விவசாயக் குடும் பத்தில் இருந்து வந்து, நாட்டின் உயரிய அரியணையில் அமரப் போகும் வெங்கய்ய நாயுடுவுக்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகிக்கப் போகும் அவரது தலைமையின் கீழ் புதிய தேசம் மலரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அந்தத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தமக்கு வாக் களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள வெங்கய்ய நாயுடு, அரசியல் சாசனத்தைக் கட்டிக் காத்து கண்ணியத்தை நிலைநாட்டுவேன் என்று உணர்வுப்பூர்வமாக உறுதி யளித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல், சனிக் கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வெங்கய்ய நாயுடுவும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் சார்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. வெங்கய்ய நாயுடு காலை 10.05 மணிக்கு வாக்க ளித்தார். மாலை 5 வாக்குப் பதிவு முடிந்த பிறகு, பதிவான வாக் குகள் எண்ணப்பட்டு, இரவு 7 மணியளவில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது.
அதில், மொத்தம் பதிவான 771 வாக்குகளில், வெங்கய்ய நாயுடு 516 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த் துப் போட்டியிட்ட கோபால கிருஷ்ண காந்தி 244 வாக்குளை மட்டுமே பெற்றார்.
-விடுதலை,6.8.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக