ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

ரூ.2 கோடியில் ரயில்வே தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள்


ஜோலார்பேட்டை, ஏப்.3 ஜோலார்பேட்டையில் ரயில்வே தொழிலாளர்களுக்கு ரூ.2 கோடியில் கட்டப்பட்ட குடியிருப்பை தெற்கு ரயில்வே பொது மேலாளர் வஷிஸ்டா ஜோரி அண்மையில் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு ஜோலார் பேட்டை ரயில்வே உதவி கோட்டப் பொறியாளர் முகமது அஸ்லம் தலைமை வகித்தார். முதுநிலை பகுதி பொறியாளர் பி.கணேசன் முன்னிலை வகித் தார். ரயில் நிலைய மேலாளர் பி.பழனிசாமி வரவேற்றார்.
இதில், சிறப்பு அழைப் பாளராக தெற்கு ரயில்வே பொது மேலாளர் வஷிஸ்டா ஜோரி கலந்து கொண்டு, குடியி ருப்புக் கட்டடத்தையும், கால் பந்து விளையாட்டு மைதானத் தையும் திறந்து வைத்தார். விழாவில், சென்னை கோட்ட மேலாளர் அனுபம் சர்மா, உள்பட ரயில்வே அதிகாரிகள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர். ரயில் நிலைய உதவி மேலாளர் லியோ டால்ஸ்டாய் நன்றி கூறினார்.
இதைத்தொடர்ந்து செய்தி யாளர்களிடம் வஷிஸ்டா ஜோரி கூறுகையில், 'மங்களூரு, திருப்பதி விரைவு ரயில்கள் ஜோலார்பேட்டையில் நின்று செல்லவும், இந்த ரயில் நிலை யத்தில் பயணிகளுக்கு பொதுக் கழிப்பறை கட்டித்தரவும் நட வடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
-விடுதலை,3.4.17

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக