செவ்வாய், 9 ஜூலை, 2024

பழங்குடியின இளைஞர்களை தொழில் முகவர்களாக உயர்த்துவதில் தனி கவனம் -தமிழ்நாடு அரசு தகவல்

 


விடுதலை நளேடு

சென்னை, ஜூன் 11- தமிழக பழங்குடியின இளைஞர்கள் தொழில் முகவர்களாக உயர்ந்து சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
“தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலினின் திரா விட மாடல் அரசு 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு புத்தொழில் நிறுவனங்களுக்கு அளித்துவரும் ஊக்கம் காரணமாகத் தமிழ்நாட்டில் 6,384 புத்தொழில் நிறுவ னங்கள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெருக்கிட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப் படையில் முதலமைச்சரால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் உருவாகியுள்ளதோடு பலருக்கு வேலைவாய்ப்பு களும் கிடைத்துள்ளன.

திராவிட மாடல் அர சால் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை 20.9.2023இல் முதலமைச்சரால் வெளியிடப்பட்டது.

2021ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அந்நிறுவனங்களின் எண்ணிக்கை 2,032. இன் றைய நிலவரப்படி இது 4 மடங்கிற்கும் மேல் அதிகரித்து 8,416-அய் எட்டியுள்ளது.

மகளிர் ஸ்டார்ட் அப்க ளின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டில் 966 ஆக இருந்தது தற்போது மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்து 3,163 ஆக உயர்ந்துள்ளதே இந்த அரசின் செயல்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும்.

ஸ்டார்ட் அப் நிறுவ னங்களுக்கு உகந்த சூழ லைக் கட்டமைத்துச் செயல்படும் மாநிலங்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டது. இதில் தமிழ்நாடு முதல் நிலையை பிடித்திருப்பதிலிருந்தே இந்த அரசின் சாதனை யைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

முதலமைச்சரின் திராவிட மாடல் அரசு அனைத்துச் சமூகத்தி னரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் மிகுந்த அக்கறை செலுத்தி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரால் நிறுவப் படும் புத்தொழில் நிறுவ னங்களை ஊக்குவித்து ரூ.80 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

38 நிறுவனங்களுக்கு ரூ.55.20 கோடி பங்கு முதலீடுகள் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அனைவரை யும் உள்ளடக்கிய புதுயுகத் தொழில் முனைவு வளர்ச் சியினை அடையும் நோக் கத்தில் தமிழ்நாடு அரசால் தாழ்த்தப்பட்டோர் பழங் குடியினர் புத்தொழில் நிதித் திட்டமானது 2022- 2023ஆம் நிதி ஆண்டில் கொண்டுவரப்பட்டது.

கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில், நாட்டின் முன்மாதிரியாக விளங் கும் இத்திட்டத்தின் வாயிலாக 38 புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.55.2 கோடி பங்கு முதலீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மட்டு மல்லாது சேலம், கன்னி யாகுமரி, மதுரை, திருச்சி, கோயமுத்தூர், ஈரோடு, நீலகிரி ஆகிய பல்வேறு மாவட்டத்தினை சேர்ந்தோர் இதன் வாயிலாக பயன்பெற்றுள்ளனர்.

ஸ்டார்ட்அப் திருவிழா

புத்தாக்கத் தொழில் வளர்ச்சிக்காக கோவையில் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் நடத்திய தமிழ்நாடு புத்தொழில் திருவிழா 2023 மாபெரும் வெற்றி கண்டது.

21 ஆயிரம் பார்வை யாளர்களோடு, 450 புத்தொழில் நிறுவனங் கள் பங்கேற்ற கண் காட்சி அரங்கமும் இத் திருவிழாவில் இடம்பெற்றது.

இந்த விழாவில் 3 கோடியே 64 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு வணிகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு முயற்சிகளை முனைப்புடன் மேற் கொண்டு வருவதன் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் புத்தாக்கத் தொழில்கள் வளர்ச்சியில் தாழ்த்தப்பட்ட மலைவாழ் இன இளை ஞர்களுக்கு ஊக்கம் தந்து உற்சாகப்படுத்தி, அவர்களை தொழில் முகவர்களாக உயர்த்துவதில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். இதனை தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் பாராட்டி வரவேற்கிறார்கள்.
– இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் தொழிலாளர் கூட்டத்தில் பெரியார் முழக்கம்!

 

அந்நாள் – இந்நாள் : 

விடுதலை நாளேடு

தொழிலாளர் கூட்டம் ஒன்று மேக்ஸ்ப்ரேதா (பான்சிலே) லேக்பார்க்கில் 20.6.1932ஆம் தேதி கூடியது. கூட்டத்தில் சுமார் 20, 30 ஆயிரம் பேர்கள் இருந்தார்கள். பக்கத்தில் பிரிட்டிஷ் தொழில் கமிட்டி தலைவர் தோழர் லான்ஸ்பரி அவர்கள் பேசினார். அதற்கு பதில் என்கின்ற முறையில் தோழர் ஈ.வெ.ராமசாமியால் இந்த உபன்யாசம் செய்யப்பட்டதாகும்.

தோழர்களே!
இந்தியர்களாகிய எங்களை நீங்கள் ஒரு பரிகசிக்கத் தகுந்த சமூகமாகக் கருதலாம். ஆனால் நாங்கள் பிரிட்டிஷ் தொழில் கட்சியை மிக மிகப் பரிகசிக்கத்தக்க விஷயமாய் கருதுகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
ஏனெனில், தொழில் கட்சித் தலைவராகியத் தோழர் லான்ஸ்பரி அவர்கள் சிப்பாய்கள் சுடுவதையும், கொல்லுவதையும் தாம் சிறிதும் விரும்புவதில்லை என்று பெருமை பேசிக் கொள்ளுகிறார். ஆனால் எங்கள் கார்வாத் (Gharwath) சேனைகள் நிராயுதபாணி களான மக்களைச் சுடுவதற்கு மறுத்தற்காகத் தோழர். லான்ஸ்பரியின் தொழிற்கட்சி கவர்ன்மெண்டானது அந்தச் சிப்பாய்களுக்கு 15 வருஷ கடின காவல் தண்டனை விதித்திருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.

2. தொழிலாளர் சங்கமாகிய டிரேட் யூனியனை ஆதரிப்பதாகவும், அதில் சேர்ந்து உழைப்பதாகவும் பறை சாற்றுகிறீர்கள். ஆனால், எங்கள் ஏழை இந்திய சுரங்க வேலைக்காரர்களும் மற்ற தொழிலாளர்களும் சேர்ந்து ஒரு ட்ரேட் யூனியன் சங்கம் ஸ்தாபித்ததற்காக அதன் அதிகாரிகளையும், அதற்கு உதவி செய்த பிரிட்டிஷ் தோழர்களையும் வெளியில் இருக்க விடாமல் உங்கள் தொழில் கட்சி அரசாங்கமானது மீரத்து சிறையில் அடைத்துப் போட்டு விட்டது.

3. தோழர் லான்ஸ்பரி அவர்கள் இந்தியர்கள் விஷயத்தில் மிக்க அனுதாப மிருப்பதாகவும், இந்தியர்கள் சுடப்படுவதையும் அடிக்கப்படுவதையும், சிறையில் அடைக்கப்படுவதையும், தாம் விரும்புவதில்லை என்றும் சொல்லிக் கொள்வதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் தோழர் லான்ஸ்பரியுடைய தொழில் கட்சி அரசாங்க கேபினட்டானது சுமார் 80,000 பேர் வரை இந்திய ஆண் பெண்களை ஜெயிலில் அடைத்திருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்களை சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறது.
ஆப்ரிக்கன் கிராமங்களின்மீது ஆயிரக்கணக்கான தடவை ஆகாயப்படை மூலம் கொடுமை செய்யப்பட்டிருக்கிறது.
நூற்றுக்கணக்கான பர்மியர்களையும் கிராமத் தாரையும் சுட்டுக் கொன்று இருக்கிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்?

4. இந்திய சுரங்கங்களில் 10 மணி நேர வேலைக்கு 8 அணா கூலிக்கு இந்தியர்களிடம் வேலை வாங்கப் படுகின்றது. சுமார் 40 ஆயிரம் பெண்கள் தினம் அய்ந்தணா கூலிக்கு பூமிக்குள் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த கொடுமையையும், ஆபாசத்தையும் நிறுத்த தொழில் கட்சி அரசாங்கம் என்ன செய்தது?

5. தோழர் லான்ஸ்பரி அவர்கள் இங்கிலாந்தில் தொழிலாளிகளை ஆதரிக்க வேண்டும் என்று பேசுகிறார். ஆனால் இந்திய விஷயத்தில் தோழர் காந்தியையும், இர்வின் பிரபுவையும் கொடுமையான வட்ட மேஜை மகாநாட்டையும் ஆதரிக்கிறார். அவ்வளவோடு மாத்திரமல்லாமல் இந்தியாவானது இந்திய அரசர்களும், ஜமீன்தார்களும், முதலாளிமார்களும், அய்ரோப்பிய வியாபரிகளுமே ஆதிக்கம் வகிக்கும் படியானதும் தொழிலாளிகளுக்கும் குடித்தனக்காரர்களுக்கும் பாத்தியமும் – பொறுப்பும், இல்லாததுமான ஒரு அரசியல் சபை மூலம் இந்திய நிர்வாகம் நடக்கும் படியான காரியத்திற்கு உதவி செய்கிறார். இதற்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்?

6. தோழர் லான்ஸ்பரி அவர்கள் யுத்தத்தையும். யுத்த மூஸ்தீபையும் வெறுக்கிறதாக சொல்லுகிறார்கள். ஆனால் இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் துருப்புகளையும், பிரிட்டிஷ் வைசிராயையும் திருப்பி அழைத்துக் கொள்ள மறுக்கிறார்.

7. கடைசியாக இருந்த தொழிற் கட்சி அரசாங்கமானது இரண்டு வருஷகாலத்தில் அனுப்பிய ஆகாய சண்டைக் கப்பல்களையும், வெடிகுண்டுகளையும், மோட்டார் பீரங்கி வண்டிகளையும் கவசார் செய்த மோட்டார் வண்டிகளையும், யந்திரத் துப்பாக்கிகளையும், பிரிட்டிஷ் பட்டாளங்களையும் கணக்கு பார்த்தால் பால்ட்வின் அரசாங்கமானது தனது 5 வருஷம் ஆட்சியில் அனுப்பப்பட்டதை விட அதிகமாகவே இருக்கிறது. தோழர்களே!! இவற்றிலிருந்து பிரிட்டிஷ் தொழிலாளர் பார்ட்டி என்று சொல்லப்படும் சமதர்ம பார்ட்டி யின் யோக்கியதையை அறிந்து கொள்வது என்பது எங்களுக்கு மிக கஷ்டமாகவே இருக்கிறது.
ஆதலால் யாக்ஷையார் தொழிலாளிகளே! நீங்கள் இந்தப் போலி கட்சிகளையும், கொள்கைகளையும், நம்பாமல் மனித சமூக விடுதலைக்கும், சுதந்திரத்துக்கும் சமத்துவத்திற்கும் உண்மையாகவே போராட உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை எதிர் நோக்கிக் கொண்டிருங்கள்.
(20.6.1932)

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதம் விடுப்பு

 


புதுடில்லி ஜூன் 25 வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு 180 நாள்கள் மகப்பேறு விடுப்பு வழங்கி ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக 50 ஆண்டுகால விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ஒன்றிய சிவில் சர்வீஸ் (விடுப்பு) விதிகள் 1972 சட்டம் திருத்தப்பட்டு இந்த 6 மாத விடுப்பு விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் தாய்க்கு 180 நாள்கள் (6 மாதங்கள்) மகப்பேறு விடுப்பும், குழந்தையின் தந்தைக்கு 15 நாட்கள் விடுப்பும் அளிக்கப்படும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.

இந்த முறையில், வாடகைத் தாய் மற்றும் அவர் மூலம் குழந்தையைப் பெறும் தாய், இருவரில் ஒருவர் அல்லது இருவருமே அரசு ஊழியர்களாக இருந்து, 2 குழந்தைகளுக்கும் குறைவாக இருப்பவர்களுக்கு மகப்பேறு விடுப்பு 180 நாள்கள் வழங்கப்படும் என்றும் ஒன்றிய அரசு பணியாளர் நலன் அமைச்சகத்தால் அறிவிக்கப் பட்டுள்ளது. வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெறும் தந்தை அரசு ஊழியராகவும், 2 குழந்தைகளுக்கு குறைவாகப் பெற்றவராகவும் இருந்தால், குழந்தை பிறந்த 6 மாத காலத்துக்குள் அவர்15 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்ள புதிய விதிகளில் அனுமதி தரப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், வாடகை தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் தாய்க்கு 2 குழந்தைகளுக்குக் குறைவாக இருந்தால் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு எடுக்க ஒன்றிய சிவில் சர்வீஸ் (விடுப்பு) புதிய விதிகள் 2024-ன்படி அனுமதி வழங்கப்படுகிறது.
தற்போதுள்ள விதிகளின்படி, பெண் அரசு ஊழியர் மற்றும் தனி பெற்றோராக இருக்கும் ஆண் அரசு ஊழியருக்கு குழந்தைகள் பராமரிப்பு விடுப்பாக, இரண்டு குழந்தைகளின் கல்வி, உடல்நலம் மற்றும் இதரத் தேவைகளுக்கு என அவர்களுடைய மொத்தப் பணிக் காலத்தில் 730 நாள்கள் விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.


புதன், 29 மே, 2024

298 ரூபாய்க்கும் குறைந்த வருமானத்தில் 40 விழுக்காட்டினர் மோடிக்கு வெட்கமாக இல்லையா? – மனோ தங்கராஜ்


விடுதலை நாளேடு

 சென்னை, மே 20- ஒரு நாளைக்கு 298 ரூபாய்க்கும் குறைந்த வருமா னத்தில் 40% பேர் இருக்கிறார்கள் என்றும், இது பிரதமர் மோடிக்கு வெட்கமாக இல்லையா என்றும் திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக சாடியுள்ளார்.

மக்களவை தேர்தல் 7 கட்டங் களாக நடைபெற்று வரும் நிலை யில், 4 கட்ட வாக்குப்பதிவு வெற்றி கரமாக நடைபெற்று முடிந் துள்ளது.
அடுத்து, 5ஆவது கட்டத் தேர் தல் இன்று நடைபெறுகிறது. அனல் பறக்கும் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் களம் அனல்பறந்து கொண்டிருக்க அரசியல் தலைவர்களுக்கு இடையே வார்த்தை யுத்தம் நடைபெற்று வருகிறது.
எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலை வர்கள் கடுமையாக சாடி வரு கிறார்கள். இதற்கு பதிலடியாக இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்களும் பிரதமர் மோடியை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவை சேர்ந்த அமைச்சரான மனோ தங்கராஜ், ஒன்றிய அரசை கடுமையாக தேர் தல் தொடங்கியதில் இருந்தே சாடி வருகிறார்.

குறிப்பாக ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை புள்ளி விவரங்களுடன் தாக்கி பேசி வருகிறார். அந்த கையில், “இந்தியாவில் 40%க்கும் அதிகமா னோர் ஒரு நாளைக்கு 298 ரூபாய்க் கும் குறைவான வருமானத்தில் வாழ்கிறார்கள்.
இது பிரதமர் மோடிக்கு வெட்கமாக இல்லையா? என கடுமையாக விமர்சித்து பதிவிட் டுள்ளார். மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்ப தாவது:-
இந்தியாவில் 40%க்கும் அதிக மானோர் ஒரு நாளைக்கு 298 ரூபாய்க்கும் குறைவான வருமானத் தில் வாழ்கிறார்கள். ஆனால் பெரும் பணக்காரர்களின் வருவாய் உயர்ந்து கொண்டே வருகிறது. இது பிரதமர் மோடிக்கும் ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் வெட்கம் இல்லையா? மோடி அரசு கார்ப்ப ரேட் வரியை 2019இல் 30% லிருந்து 22% ஆக குறைத்தது, இது இரண்டு ஆண்டுகளில் அரசிற்கு ரூ.1.84 லட்சம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியது.

இந்தத் தொகை 2020-2021ஆம் ஆண்டில் விநிழிஸிணிநிகி மற்றும் ழிதிஷிகி ஆகிய இரண்டு திட்டங்களுக் கான பட்ஜெட்டுகளை விட அதிகமானது. இந்தியாவின் முதல் 1% பணக்காரர்களின் சொத்து மதிப்பு வரலாற்று உச்சத்தில் உள்ளது- இது பிரிட்டிஷ் ஆட்சி நடந்த போது இருந்த அளவை விட அதிகம்.
0.001% மேல் தட்டு மக்கள் (10 ஆயிரத்திற்கும் குறைவான நபர் கள்) 50% கீழ் தட்டு மக்களை விட மூன்று மடங்கு அதிக சொத்து வைத்துள்ளனர்.
இந்த இடைவெளியை குறைக்க வேண்டும் எனபதற்காக தான் சமத்துவத்தை வலியுறுத்தும் திமுக தொடர்ந்து நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது என்ற உண்மை இப்போதாவது புரிகிறதா?” என்று சாடியுள்ளார்.

அயலக தமிழர் நல வாரியம் மூலம் வெளிநாடு, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள்: தமிழ்நாடு அரசு தகவல்


விடுதலை நாளேடு

 சென்னை, மே 19 அயலகத் தமிழர் நல வாரியம் மூலம் அயலகத்தில் உள்ள தமிழர் களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் செயல் படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை நேற்று (18.5.2024) வெளியிட்ட அறிவிப்பு: வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக தமிழர்கள் அயல் நாடுகளுக்கு புலம்பெயர்வது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி ‘அயலகத் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாரியம் மூலம் அயலகத்தில் உள்ள தமிழர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. 18 முதல் 55 வயது வரை உள்ள அயலகத் தமிழர்கள், அயலகத் தமிழர் நலத்துறையின் வலைதளத்தில்(https://nrtamils.tn.gov.in) ஒரு முறை பதிவு கட்டணமாக ரூ.200 செலுத்தி இரண்டு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் வாரியத்தில் உறுப்பினராக இணைந்து அடையாள அட்டையினை பெறலாம்.

அயலகத் தமிழர் (வெளிநாடு): இந்திய கடவுச்சீட்டு மற்றும் தகுந்த ஆவணங்களுடன் அயல்நாடுகளில் பணிபுரியும்/கல்வி பயிலும் தமிழர்கள் மற்றும் Emigration Clearanceபெறப் பட்டு அயல்நாடு செல்ல உள்ள தமிழர்கள் இப்பிரிவில் உறுப்பினராக தகுதியுடையவர்கள் ஆவர்.
அயலகத் தமிழர் (வெளிமாநிலம்): இந்தியாவின் பிற மாநிலங்களில் (தமிழ்நாட்டிற்கு வெளியே) ஆறு மாதங்களுக்கு மேல் வசிக்கும் தமிழர்கள் இப்பிரிவில் உறுப்பினராக தகுதி யுடையவர்கள் ஆவார்கள். இந்த அடையாள அட்டை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும். உறுப்பினர் பதிவை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 15ஆம் தேதி முதல் 15.08.2024 வரையிலான மூன்று மாதங்களில் பதிவு செய்யும் நபர்களுக்கு பதிவு கட்டணம் ரூ.200 செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினர் பதிவு பெற்ற நபர்கள், வாரியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் கீழ்க்கண்ட திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்களிலும் பயன் பெறலாம்.

விபத்துக் காப்பீடு: அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள நபர் இவ் விபத்து காப்பீட்டில் சந்தா (மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை) ரூ. 5,00,000 காப்பீட்டு தொகைக்கு, மூன்றாண்டுக்கு ஒரு முறை சந்தா ரூ.395+ ஜிஎஸ்டி தேர்வு செய்து கொள்ளலாம். ரூ.10,00,000 காப்பீட்டு தொகைக்கு மூன்றாண்டுக்கு ஒரு முறை சந்தா ரூ.700+ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இந்த சந்தாக்களில் தங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
தீவிர மற்றும் தொடர் சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கான இக்காப்பீடு திட்டத்தில் விருப்பத்தின் பேரில் விபத்து காப்பீட்டு திட்டத்துடன் கூடுதலாக ஆண்டுக்கு ஒரு முறை சந்தா செலுத்தி இணையலாம். இத்திட்டத்தின் கீழ் புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, முதன்மை நுரையீரல் தமனி உயர் ரத்த அழுத்தம், மல்டிபிள் ஸ்களீரோசிஸ், முக்கிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, கரோனரி ஆர்டரி பை-பாஸ் கிராப்ட்ஸ், இதய வால்வு அறுவை சிகிச்சை, பக்கவாதம், மாரடைப்பு, கோமா, நோய்கள் வரும்.

கல்வி உதவித் தொகை திட்டம்: இத் திட்டத்தின் கீழ் அயல்நாடுகளுக்கு பணியின் பொருட்டு சென்று உறுப்பினராக உள்ள தமிழர் இறக்கும் நிலையில் அவர்களின் குடும்பத்தி லுள்ள மகன்/மகளுக்கு (அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு) அவர்களின் கல்வி நிலைக் கேற்ப கல்வி உதவித் தொகை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு ரூ.3000 உதவித் தொகை, 11 மற்றும் 12ஆம் வகுப்பு (மேல்நிலைக் கல்வி) -ரூ.4000, தொழிற் பயிற்சி கல்வி, பொறியியல் பட்டயப் படிப்பு, மருத்துவப் பட்டயப் படிப்பு, ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு, உடற்பயிற்சி கல்வி பட்டயப் படிப்புக்கு ரூ.5,000 உதவி தொகை. பொறியியல் பட்டப்படிப்பு, மருத்துவ பட்டப்படிப்பு, சட்டப் பட்டப்படிப்பு, விவசாய படிப்பு, ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பு, உடற் பயிற்சி கல்வி பட்டப்படிப்புக்கு ரூ.8000 உதவி தொகை, பொறியியல் பட்ட மேற்படிப்பு, மருத்துவ பட்ட மேற்படிப்பு, சட்ட மேற்படிப்பு, விவசாய மேற்படிப்பு, ஆசிரியர் பயிற்சி மேற் படிப்பு, உடற்பயிற்சி கல்வி பட்ட மேற்படிப்புக்கு ரூ.12,000 உதவி தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் அயல்நாடுகளுக்கு பணியின் பொருட்டு சென்று உறுப்பினராக உள்ள தமிழர் இறக்கும் நிலையில் அவர்களின் குடும்பத் திலுள்ள திருமண வயது பூர்த்தியடைந்த மகன், மகளுக்கு (அதிகபட்சம் இரண்டு குழந்தை களுக்கு) திருமண உதவித்தொகையாக ரூ.20,000 வழங்கப்படும். பழங்குடியின பிரிவினர் குறைந்த பட்சம் 5ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண் டும். பிற பிரிவினர் குறைந்த பட்சம் 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

அயல்நாடுகளுக்கு செல்லும் தமிழர்களுக்கு அவர்களுக்கான பாதுகாப்பான, சட்டப்பூர்வ மான, முறையான இடப்பெயர்வை உறுதி செய்ய முன் பயண புத்தாக்கப் பயிற்சியானது ஏழு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தமிழ்நாடு அரசினால் வழங்கப்பட்டு வருகிறது. இம்மையங்களை அணுகும் நிலையில் அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்பான விளக்கங்களும், வாரியத்தில் உறுப்பினர் பதிவும் மேற்கொள்ளப் படும்.
அயலகத் தமிழர்களுக்கான ஒளிப்பட அடையாள அட்டைக்கு பதிவு செய்யும் முறை மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான விரிவான தகவல்களுக்கு இவ்வாணையரக வலைதளத் தினை (https://nrtamils.tn.gov.in) பார்க்கலாம்.
அயல்நாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த மற்றும் புலம்பெயரவுள்ள தமிழர்கள், அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக இணைந்து அரசின் நலத் திட்டங்களை பெற்றிட தமிழ்நாடு அரசின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அயல்நாடுகளுக்கு செல்லும் தமிழர்களுக்கு அவர்களுக்கான பாதுகாப்பான, சட்டப்பூர்வமான, முறையான இடப்பெயர்வை உறுதி செய்ய முன் பயண புத்தாக்கப் பயிற்சியானது ஏழு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தமிழ்நாடு அரசினால் வழங்கப்பட்டு வருகிறது.
எப்படி உறுப்பினர் ஆவது?

அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், வாரியத்தில் உறுப்பினராகுதல் தொடர்பான சந் தேகங்களுக்கும் தீர்வுகாண இவ்வாணையரகத் தின் கட்டணமில்லா தொலைபேசி சேவை மய் யத்தினை தொடர்பு கொள்ளலாம். கட்டண மில்லா உதவி எண் 18003093793 (இந்தியா விற்குள்), 8069009901 (அயல்நாடுகளிலிருந்து தொடர்புக்கு), 8069009900 (Missed Call) கொடுக்க வேண்டும்.

அரசு மருத்துவமனை கடைநிலை ஊழியர்களுக்கு இனி சுழற்சி அடிப்படையில் பணி தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Published May 19, 2024, விடுதலை நாளேடு

சென்னை, மே 19 அரசு மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்கள் இனி 3 பிரிவு முறையில் பணியமர்த்தப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் இதுவரை 2 பிரிவுகளில் பணி அமர்த்தப்பட்டு பணியாற்றி வந்தனர். இனி 3 பிரிவு அடிப்படையில் ஊழியர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும் அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத் துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர் உதவியாளர்கள் (தரம் 2) மற்றும் கடைநிலை ஊழியர்களான மருத்துவ பணி யாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. அதன்படி முதல் பிரிவு காலை 6 மணி முதல் மணி 1 மணி வரையும், 2ஆவது பிரிவு மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரையும் இருக்கும். 3ஆவது பிரிவு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இருக்கும். இந்த மூன்று பிரிவு அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த பணியாளர்களில் பணியில் உள்ள செவிலிய உதவி யாளர் (கிரேடு 2) மற்றும் கடை நிலை ஊழியர்களான மருத்துவமனை பணியாளர்களில் (“டி” குரூப்) 50 சதவீத பேர் முதல் பிரிவிலும், 25 சதவீத ஊழியர்கள் 2ஆவது பிரிவிலும், 25 சதவீத ஊழியர்கள் 3-வது ஷிப்டிலும் பணி அமர்த்தப்படுவார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஊதியம் ரூ.319 ஆக உயர்வு : தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 


விடுதலை நாளேடு

சென்னை, மே 19 மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத் திட்டத்தின்கீழ் பதிவு செய்து கொண்ட வர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது. இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் 5.97 கோடி குடும் பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன.

இந்த வேலைகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்து எழுந்து வந்தது. இந்த நிலையில் மத்திய அதிகாரமளித்தல் குழுவின் கூட்டம் கடந்த மார்ச் 27ஆம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டது. அப்போது மக்களவை தேர்தல் நடத்தை அமலில் இருந்ததால் உடனடியாக அமல்படுத்த முடியாமல் போனது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மக்க ளவை தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளும் சற்று தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 2023-2024 நிதி ஆண்டுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தினசரி ஊதியம் ரூ.294 வழங்கப்பட்டு வந்தது. இந்த அரசாணை யின் மூலம் தற்போது 2024-2025 நிதி ஆண்டுக்கான ஊதியம் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். இது 8.5 சதவீத உயர்வு ஆகும். ரூ.25 கூடுதலாக அளிக் கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.1229 கோடி ஒதுக்கீடு செய்தும் ஊரக வளர்ச்சி துறை அரசாணை வெளியிட்டுள்ளது.