புதன், 22 மார்ச், 2023

புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைப்பு தலைவராக கார்த்திகேய சிவசேனாபதி நியமனம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

 

சென்னை, டிச. 20- புலம்பெயர் தமி ழர் நலவாரியம் அமைத்து, அதன் தலைவர் மற்றும் உறுப்பினர் களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கான புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியம னம் செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக் கும் தமிழர்களுக்கென நலத் திட்டங்கள், அவர்களுக்கான தூதரக உதவிகள்,செம்மொழி யாம் தமிழ்மொழியைத் தழைத் தோங்கச் செய்திட வெளிநாடு களில் தமிழ்க் கல்வி, கலை, பண் பாடு மற்றும் கருத்துப் பரிமாற் றத்திற்கென பல்வேறு சீர்மிகு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.

அந்த வகையில், பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்திடவும், அவர்க ளுக்குத் தேவையான உதவிகள் செய்திடவும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உளப் பூர்வமான மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, ‘வெளிநாடுவாழ் தமிழர் நலச்சட்டம்’ 2011ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் நாள் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலை ஞர் அரசால் இயற்றப்பட்டது. அதோடு, "புலம்பெயர் தமிழர் நலவாரியம்" ஒன்று உருவாக்கப் பட்டு, அவர்களுக்கென நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அப்போது அறிவிக்கப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற் பட்டபோது, முந்தைய ஆட்சியா ளர்கள் அதனை நடைமுறைப் படுத்த முன்வரவில்லை.

இந்த நிலையில், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தபிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'வெளிநாடுவாழ் தமிழர் நல வாரியம்' அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார். இந்த அறிவிப்பினைச் செயல் படுத்தும் விதமாக, கீழ்க்காணும் தலைவர், அரசுசார் அலுவலர் கள் மற்றும் அயலகத் தமிழர் பிரதிநிதிகளை உறுப்பினர்க ளாக கொண்டு புலம்பெயர் தமி ழர் நல வாரியத்தினை அமைத் திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தலைவராக கார்த்திகேய சிவசேனாபதி

அதன்படி, புலம்பெயர் தமி ழர் நலவாரியத்தின் தலைவராக திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், பழையகோட்டையைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனா பதி, மொரிஷியஸ் நாட்டில் வசிக்கும் ஆறுமுகம் பரசுராமன், லண்டனில் வசிக்கும் முஹம்மது பைசல், அய்க்கிய அரபு அமீரகத் தில் வசிக்கும் சித்திக் சையது மீரான், வடஅமெரிக்காவில் வசிக்கும் கால்டுவெல் வேள் நம்பி, சிங்கப்பூரில் வசிக்கும் ஜி.வி.ராம் என்கிற கோபால கிருஷ்ணன் வெங்கடரமணன், மும்பையில் வசிக்கும் அ. மீரான் மற்றும் சென்னையில் வசிக்கும் வழக்குரைஞர் புகழ்காந்தி ஆகி யோர் அரசு சாரா உறுப்பினர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு சார்ந்த உறுப்பினர் களாக - பொதுத் துறைச் செயலா ளர், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமனம் செய்யப்படுபவர், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமனம் செய்யப்படுபவர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செய லாளர் அல்லது அவரால் நிய மனம் செய்யப்படுபவர், வெளி நாடுவாழ் தமிழர் தொடர்பான பணிகளைக் கவனித்து வரும் அரசு சிறப்புச் செயலாளர் / அரசு இணைச் செயலாளர் / அரசு துணைச் செயலாளர், பொதுத் துறை, மேலாண்மை இயக்குநர், அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ் வுத் துறை ஆணையரகத்தின் ஆணையர் உறுப்பினர் செயல ராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாரியத்தில் நியமிக்கப் படும் தலைவர் மற்றும் உறுப்பி னர்களின் பதவிக் காலம், ஆணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும். இவ் வாரியம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களுக் கான நலத் திட்டங்களை செம் மையாகச் செயல்படுத்திட ஏது வாக, 5 கோடி ரூபாய் “வெளிநாடு வாழ் தமிழர் நலநிதி” என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும். அதோடு மட் டுமல்லாமல், மூலதனச் செல வினமாக 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மற்றும் தொடர் செல வினமாக, நலத்திட்டங்கள் மற் றும் நிர்வாக செலவினங்களுக் காக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

இவ்வாரியத்தின் வாயிலாகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக, வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுவாழ் தமிழர்களின் விவரங் களைச் சேகரிப்பது அவசியமாத லால், அவர்கள் குறித்த தரவு தளம் (database) ஒன்று ஏற் படுத்தப்படும். இவ்வாரியத்தில் பதிவு செய்பவர்களுக்கு விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம், மருத் துவக் காப்பீடு திட்டம் மற்றும் அடையாள அட்டை வழங்கப் படும். வெளிநாட்டிற்குச் செல் லும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள், அங்கு பணியின்போது இறக்க நேரிடின், அவர்களது குடும்பத்தைப் பாது காக்கும் நோக்குடன், அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந் தைகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் இத்தகைய முனைப்பான நடவடிக்கை, வெளி நாடுகளில் தேமதுரத் தமிழோசை பரவுவதற்கும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் இன்னல்களைப் போக்குவதற் கும், அவர்களுக்கான நலத் திட் டங்களைச் செம்மையுறச் செயல் படுத்துவதற்கும் உறுதுணையாக அமையும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை" என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் இசைக் கலைஞர்கள் உறுப்பினர்களாக சேர தடை இல்லை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

 

சென்னை, ஆக. 11- நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசைக் கலைஞர்கள், கரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளது போல, வாத்திய இசைக் கலைஞர்களுக்கும், பரதநாட்டிய கலைஞர்களுக்கும் தனியாக நலவாரியம் அமைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


இந்த வழக்கிற்கு, தமிழக சுற் றுலா, கலாச்சாரத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-


இசைக்கருவிகளை இசைக்கும் பாரம்பரிய கலைஞர்களுக்கு பல் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு தரப்படுகிறது. மார்கழி மற் றும் அரசு, தியாகராஜர் ஆராதனை விழாக்கள் உள்ளிட்ட விழாக்களில் அவர்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையில் இந்த கலைஞர்களுக்கு நிரந்தர சம்பளத்தில் பணி நியமனம் தரப்படு கிறது.


தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர் கள் நல வாரியத்தில் 35 ஆயிரம் 385 கலைஞர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கும் இவர்களின் குடும் பத்தினருக்கும் பல்வேறு நிதி உதவி திட்டங்கள் உள்ளன. விபத்து நிவா ரணம், குழந்தைகளுக்கான கல்வி உதவி, மகப்பேறு நிதி, திருமண உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட் டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் 58 வயதை கடந்தவு டன் அவர்களுக்கு மாத ஓய்வூதிய மாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.


கரோனா ஊரடங்கால் பாதிக் கப்பட்டுள்ள, நாட்டுப்புற கலைஞர் கள் நல வாரியத்தில் பதிவு செய் துள்ள 24 ஆயிரத்து 736 பேருக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட்டுள் ளது. இரண்டாவது நிவாரண தொகையாக ரூ.1000 ஜூன் மாதம் 26ஆம் தேதி 24 ஆயிரத்து 656 பேருக்கு தரப்பட்டுள்ளது.


அரிதான இசை வாத்தியங்களான சாக்ஸாபோன், மாண்டலின், வீணை, புல்லாங்குழல் போன்றவற்றை இசைப்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதால் இவர்க ளுக்காக தனி நல வாரியம் அமைக்க முடியாது. தெருக்கூத்து கலை நிகழ்ச் சிகளில் பங்கேற்கும் நாதஸ்வரம், தவில், கிளாரினெட், மிருதங்கம், தாள இசைக்கலைஞர்கள், தமிழ் நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர எந்த தடையும் இல்லை. அதனால், இவர்களுக்கு என்று தனி நல வாரி யம் அமைக்க முடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்.


இவ்வாறு பதில் மனுவில் கூறப் பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி கள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

பத்திரிகை நல வாரியம் உருவாக்கம் - செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் குழு அமைப்பு

 

சென்னைடிச. 4- பத்திரிகை யாளர்களின் நலன் காக் கும் வகையில் பத்திரிகை யாளர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளதுசெய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலை மையில் குழுவையும் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட அரசாணையில் கூறியி ருப்பதாவது:

உழைக்கும் பத்திரிகை யாளர்களுக்கு வழங்கப் பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங் கிணைத்து செயல்படுத்து வதுடன்நல வாரிய உதவித் தொகை கள்நலத்திட்ட உதவிகள் அளிக்கும் வகை யில் பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப் படும் என்று சட்டப் பேரவையில் செய்தித் துறை அமைச்சர் கடந்த செப்.6ஆம் தேதி அறிவித் தார்.

இதையடுத்துபத்திரி கையாளர் நல வாரியம் அமைத்து ஆணையிடப்படுகிறதுநலிவுற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளு டன்பின்வரும் நலத் திட்ட உதவிகள் நல வாரி யம் மூலம் வழங்கப்படும்குறிப்பாக கல்வி உதவித் தொகையாக 10ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகள், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்பெண் குழந்தைகள், 11ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும்.

மேலும், 12ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகள், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகன்மகள்முறையான பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,500, விடுதியில் தங்கி பட்டப் படிப்பு படிப்பவர்களுக்கு ரூ,1,750,முறையான பட்ட மேற்படிப்பு பயில் பவர்களுக்கு ரூ.2,000, விடுதியில் தங்கிப் படிப் பவர்களுக்கு ரூ.3,000, தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு ரூ.2,000, விடுதி யில் தங்கிப் படிப்பவர் களுக்கு ரூ.4,000, தொழில் நுட்ப பட்ட மேற்படிப்பு படித்தால் ரூ.4,000, விடு தியில் தங்கிப் படித்தால் ரூ.6,000, அய்டிஅய்பாலி டெக்னிக் படிப்பவர்க ளுக்கு ரூ.1,000,விடுதியில் தங்கி படித்தால் ரூ.1,200 வழங்கப்படும்.

திருமண உதவித் தெகை

இதுதவிரதிருமணத் துக்கு ரூ.2,000, மகப்பே றுக்கு ரூ.6,000, கருக் கலைப்பு,  கருச்சிதைவுக்கு ரூ.3,000, கண் கண்ணா டிக்கு ரூ.500, இயற்கை மறைவு உதவித்தொகை யாக ரூ.50 ஆயிரம்இறுதி நிகழ்வுக்கு உதவித் தொகையாக ரூ.5ஆயிரம் வழங்கப்படும்.

மேலும்பத்திரிகையா ளர் நல வாரிய உதவித் திட்டங்களை பரிசீலித்து செயல்படுத்த செய்தித் துறை அமைச்சரை தலை வராகவும், 7 பேரை அலு வல் சார்ந்த உறுப்பினர் களாகவும்,6 பேரை அலு வல் சாரா உறுப்பினர்க ளாகவும் கொண்ட குழு அமைக்கப்படும்.

விளம்பரக் கட்டணத்தில்..

நல வாரியத்துக்கு நிதி ஆதாரம் திரட்டஅரசு விளம்பரங்களுக்கான விளம்பர கட்டணத்தில் 1 சதவீத தொகைநல வாரியத்துக்கு வழங்கப் படும்நடைமுறையில் உள்ள பத்திகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழு கலைக்கப்பட்டுநல வாரிய உதவித் திட்டங் களுக்கு அமைக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு புதிய பரிசீல னைக் குழு அமைக்கப் படும்இந்த நடவடிக்கை கள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவின்படிஅமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஊடக மன் றத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாகும்இவ் வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பு அரசு ஆணை வெளியீடு

 

சென்னைபிப்.25 தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது

2021-_2022ஆம் ஆண்டிற்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில் 5.9.2021 அன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில்செய்தித்துறை அமைச்சர்தமிழ்நாட்டில் முதன் முறையாகஉழைக்கும் பத்திரிகையா ளர்களை முன்களப் பணியாளர் களாக முதலமைச்சர்அறிவித்து பெருமை சேர்த்துள்ளார்.

அதனடிப்படையில்உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப் பட்டு வரும் அனைத்து திட்டங் களையும் ஒருங்கிணைத்து செவ் வனே செயல்படுத்துவதோடுநல வாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அரசாணை வெளியீடு

அமைச்சரின் அறிவிப்பிற் கிணங்கஉழைக்கும் பத்திரிகையா ளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங் கிணைத்து செவ்வனே செயல்படுத் துவதோடுநலவாரிய உதவித் தொகை கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகை யாளர் நலவாரியம் ஒன்றை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது.

பத்திரிகையாளர் நலவாரியத் திற்கு வரப்பெறும் விண்ணப்பங் களை பரிசீலனை செய்துபயனா ளிகளைத் தேர்வு செய்துநலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு பத்திரிகை யாளர் நலவாரியக் குழு ஒன்றை அமைத்துஅதற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து அரசு ஆணையிடுகிறது.

தலைவர்உறுப்பினர்கள்

செய்தித் துறை அமைச்சர் அதன் தலைவராக இருப்பார்நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர்வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர்,

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலா ளர்தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ஆணை யர்நில நிர்வாகத் துறை ஆணையர்செய்தி மக்கள் தொடர் புத் துறை இயக்குநர் (அல்லதுஇந்த அதிகாரிகளால் நியமனம் செய் யப்படும் அலுவலர்ஆகியோர் அலுவல்சார் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

அலுவல்சாரா உறுப்பினர்கள்

தினத்தந்தி குழுமத்தின் பா.சிவந்தி ஆதித்தன்தினகரன் நாளிதழ் ஆசிரியர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ்தி இந்து நாளிதழ் துணை ஆசிரியர் பி.கோலப்பன்தீக்கதிர் நாளிதழ் செய்தியாளர் எஸ்.கவாஸ்கர்புதிய தலைமுறை தொலைக்காட்சி சிறப்பு நிருபர் எம்.ரமேஷ்தி வீக் செய்தி வார இதழின் முதன்மை சிறப்பு நிருபர் லெட்சுமி சுப்பிரமணியன் ஆகி யோர் அலுவல்சாரா உறுப்பினர் களாக செயல்படுவார்கள்.

1.12.2021 அன்று வெளியிட்ட அரசாணையின்படிபத்திரிகை யாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழு கலைக்கப்படுவதுடன்பத்திரிகை யாளர் நலவாரிய புதிய நல உதவித் திட்டங்களுக்கு அமைக்கப்படும் இந்த குழுவே பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் குறித்த மனுக்களையும் பரிசீலிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்தவர்கள் அரசு துறையில் பதவி உயர்வு பெற முடியாது

 

சென்னைஆக.1 பதவி உயர்வு பட்டியலில் செந்தில் குமாரை சேர்க்க வேண்டு மென்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறையில் இரண்டாம் நிலை சார் பதிவாளராக தேர்வான வேலூர் மாவட்டம் சோளிங் கரைச் சேர்ந்த செந்தில்குமார்துறை ரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளதால் முதல் நிலை சார் பதிவாளராக பதவி உயர்வு வழங்க கோரி அரசுக்கு விண்ணப்பித்தார்.

ஆனால்கல்லூரிக்கு சென்று இளங்கலை பட்டப் படிப்பை படிக்காமல்திறந்த வெளி கல்வி மூலம் பட்ட மேற்படிப்பை முடித்துள்ள தால்பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற தகுதியில்லை என வணிக வரித்துறை அவரது கோரிக்கையை நிராகரித்தது.

இதனை எதிர்த்து செந்தில்குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதிஅரசு நிர்ணயித்துள்ள தகுதி என்பதுபணி நியமனத்திற்கானது தானே தவிரபதவி உயர்வுக்கு அல்ல என கூறிஅந்த உத்தரவை ரத்து செய்ததுடன்பதவி உயர்வு பட்டியலில் செந்தில் குமார் பெயரை சேர்க்கவும் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவுத் துறை தலைவரும்வணிகவரித் துறை செயலாளரும் உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்ய நாராயணா மற்றும் கிருஷ் ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோதுதமிழ்நாடு பத்திரப் பதிவுத் துறை தலைவர்வணிகவரித் துறை செயலாளர் ஆகி யோரின் தரப்பில் அரசு வழக்குரைஞர் இரா.நீலகண் டனும்,  சார் பதிவாளர் செந்தில்குமார் தரப்பில் எம்.ராமமூர்த்தியும் ஆஜரானார்கள்.

நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில்திறந்தநிலை பல் கலைக்கழகம் அல்லது தொலை தூர கல்வி மூலம் பட்டப்படிப்பு முடிக்காமல்பட்ட மேற்படிப்பு படித்தவர் களை பணி நியமனத்துக்கோபதவி உயர்வுக்கோ பரிசீலிக்க முடியாது என உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டிபதவி உயர்வு பட்டியலில் செந்தில்குமாரை சேர்க்க வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு தவறாம்!

 

சென்னை,செப்.9- தமிழ்நாட்டில் அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு பிரத்யேகமாக 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு கடந்த 2016ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது. அதன்படி, 30 விழுக்காடு இடங்கள் பெண்களுக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். எஞ்சிய 70 விழுக்காடு இடங்களிலும் தகுதியான பெண்களை தேர்வு செய்யலாம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

அரசு தலைமை வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம்: 

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப் படையிலேயே பெண்களுக்கு இடஒதுக் கீடு வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்க அரச மைப்பு சட்டமும் வழிவகை செய்துள் ளது. எனவே, தமிழ்நாடு அரசு பணி யாளர் (பணி நிபந்தனை) சட்டத்தின்படி 30 விழுக்காடு இடங்களை பெண் களுக்கு ஒதுக்குவதில் எந்த தவறும் இல்லை. அது சட்டவிரோதமும் இல்லை.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்.சிங்கார வேலன், நளினி சிதம்பரம், வழக்குரைஞர் தாட்சாயினி ரெட்டி:

தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. அதனுடன் இந்த 30 விழுக்காடும் சேர்ந்தால், மொத்த இடஒதுக்கீடு 99 விழுக்காடு ஆகிவிடும். ‘இடஒதுக்கீடு என்பது 50 விழுக்காட்டுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரிதாக கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கலாம்’ என்று உச்ச நீதிமன்ற 9 நீதிபதிகள் அமர்வு கடந்த 1992ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அந்த தீர்ப்புதான் தற்போதுவரை அமலில் உள்ளது.

அதன் அடிப்படையில், தமிழ்நாட் டில் நடைமுறையில் உள்ள சமூக ரீதி இடஒதுக்கீடான 69 விழுக்காடுத்தி லேயே, பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீட்டையும் வழங்க முடியும். ஆனால், இந்த இடஒதுக்கீட்டை தனி யாக வழங்க முடியாது. வேலைவாய்ப் பில், பிற்படுத்தப்பட்ட பிரிவு பெண் களுக்கு மெரிட் அடிப்படையில் 2 இடங்கள் ஒதுக்கப்படுகிறது என்றால், 30 விழுக்காடு இடஒதுக்கீடு அடிப் படையிலும் பெண்களுக்கு 2 இடங்கள் ஒதுக்கினால் மொத்தம் அவர்களுக்கு 4 இடங்கள் ஆகிவிடும். இது சட்ட விரோதம் என்பதால், 30 விழுக்காடு ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாதங்களை கேட்ட பிறகு நீதி பதிகள் பிறப்பித்துள்ள தீர்ப்பு: ‘சமூக ரீதியான இடஒதுக்கீட்டுக்குள்தான் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதை தாண்டி இடஒதுக்கீடு வழங்க கூடாது’ என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இதற்கு எதிராக தமிழ்நாடு அரசும், டிஎன்பிஎஸ்சியும் பெண் களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது கெட்ட வாய்ப்பானது தவறானது.

டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் முதலில் இந்த 30 விழுக்காடு இடஒதுக்கீட்டை பூர்த்தி செய்துவிட்டு, அதன் பிறகுசமூக ரீதியிலான இடஒதுக்கீட்டுக்குள் சென்றுள்ளது. இதனால்,அரசுத் துறை களில் ஏராளமான பெண்களுக்கு வேலை கிடைத்துள்ளது. அதே நேரம், தகுதியானவர்களுக்கான வேலை வாய்ப்பை ஒருபோதும் மறுக்க கூடாது.

முதலில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு நீங்கலாக உள்ள 31 விழுக்காடுபொது பிரிவில் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு, 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த 69 விழுக்காட்டுக்குள்தான் பெண் களுக்கான 30 விழுக்காடு இடஒதுக்கீடும் இருக்க வேண்டுமே தவிர, தனியாக கொடுக்க கூடாது.

30 விழுக்காடு இடஒதுக்கீடு மூலம் இதுவரை பணியில் சேர்ந்த பெண்களின் பணி நியமனத்தை ரத்துசெய்ய விரும் பவில்லை. 

இனிமேல்,இடஒதுக்கீடு தொடர் பாக உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நடைமுறையை பின்பற்றி பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்கேற்ப, திருத்தம் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டு, வழக்கு களை நீதிபதிகள் முடித்துவைத்தனர்.

வெளிநாட்டில் அதிக ஊதியத்தில் வேலையா? காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு எச்சரிக்கை


சென்னை, அக். 15- வெளி நாட்டில் அதிக ஊதியத் துடன் வேலை வாங்கித் தருவதாக ஆசையைத் தூண்டி பல போலி நிறு வனங்கள் வலை விரித்து வருகின்றன. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு எச்சரித் துள்ளார். 

ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், குடும் பத்தை முன்னேற்றத் துடிப்பவர்கள், வாழ்க் கையில் எப்படியாவது முன்னேறி விட நினைப் பவர்கள், விரைவில் பணம் சம்பாதிக்கும் ஆசை கொண்டவர்கள் ஆகியோர் வெளிநாடு செல்ல அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த ஆர்வத்தைப் புரிந்துகொள்ளும் சில தனியார் நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் வெளி நாடுகளில் அதிக ஊதியத் தில் வேலை இருப்பதாக வும், குறிப்பிட்ட நாட்க ளுக்குள் பணத்தை ஏற் பாடு செய்து கொடுத்து விட்டால் உடனடியாக வெளி நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகவும் ஆசையைத் தூண்டுகின் றனர்.

இதை உண்மை என நம்பும் பலர் கையில் இருக்கும் பணத்தை எந்தவித விசாரிப்பும் இல்லாமல் அப்படியே கொடுத்து விடுகின்றனர். இதில், சில நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் தவிர பெரும்பாலானவர்கள் பணத்தைச் சுருட்டிக் கொண்டு தலைமறைவா கின்றனர்.

வெளிநாட்டு மோகத் தில் மோசடி நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து விட வேண்டாம் என காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அறிவுரை வழங்கி யுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,“ வெளிநாடு களில் அதிக ஊதியத்தில் வேலை தருகிறோம் என்று அழைத்தால் அந்த நிறு வனங்களின் உண்மைத் தன்மையை அறியாமல் சுற்றுலா பயண விசாவில் 6 மாத வேலை செய்ய எவரும் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம். இது போன்ற முகவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் தமிழ்நாடு காவல் துறை யில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவை (NRI Cell) nricelltn.dgp@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, 044 28447701 என்ற தொலை பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். வெளிநாட்டுக்கு வேலை செல்வோர் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும். சம்பந்தப்பட் டவர் பதிவு செய்த முகவரா எனச் சந்தேகம் ஏற்பட்டால் காவல் துறையை அணுகலாம். அவர்களுக்குச் சரியான வழிகாட்டல் வழங்கப் படும்” என்றார்.

மேலும், அவர் வெளியிட்ட காட்சிப்பதிவில், “வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லும் நபர்களிடம் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். லட்சக்கணக்கில் ஊதியம் தருகிறோம் என இளை ஞர்களை வேலைக்கு அழைத்துச் சென்று மோசடி செயலிகள், மோசடி லோன் ஆப், க்ரிப்டோ கரன்சி மோசடி ஆகிய வேலைகளில் ஈடு படுத்துவார்கள். உங்கள் செல்போன் எண், இ-மெயில் அய்டியை பயன் படுத்தி உங்களை குற்றங் களைச் செய்ய வைத்து நீங்கள் திரும்பி வர முடியாதபடி செய்து வருகிறார்கள். உங்கள் திறமையை மீறிய அளவு ஊதியத்தோடு வெளி நாடுகளில் வேலை தருவ தாகச் சொன்னால் எச் சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு காவல் துறையில் அண்மையில் உருவாக்கப்பட்ட வெளி நாடு வாழ் இந்தியர் என்ற பிரிவின் கண்காணிப்பாளர் சண் முகப்பிரியா கூறும் போது, “வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் அவர் களை அழைத்துச் செல் லும் நிறுவனம் அல்லது முகவர்கள் தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் 044 28470025 என்ற எண் ணில் தொடர்பு கொள் ளலாம். அவர்களுக்குச் சரியான வழிகாட்டல் வழங்கப்படும். வெளி நாட்டு வேலை தொடர் பாக கடந்த ஜூன் மாதத்திலிருந்து இதுவரை 40 புகார்கள் வந்துள்ளன. எங்களுக்கு வழக்குப் பதிவு செய்யும் அதிகாரம் இல்லை. இருப்பினும் புகார் வந்தால் சம்பந்தப் பட்ட காவல் மாவட்டங் களுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக் கத் தேவையான உதவி செய்வோம்” என்றார்.