வெள்ளி, 17 மே, 2024

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவை ரூபாய் 1679 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

 


சென்னை, மார்ச் 15- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக்கோரி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊரகப் பகுதிகளில் உள்ள பதிவு செய்யப் பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் முக்கிய மான திட்டங்களில் ஒன்றாகும். மேலும், ஊரக மக்களுக்கு வாழ் வாதார வாய்ப்பை வழங்குவதுடன், நீடித்த மற்றும் நிலையான ஊரக சொத்துக்களை உருவாக்கி, உள் ளூர் மக்களின் முனைப்பான பங் கேற்புடன் கிராமங்களை மேம் படுத்தும் ஒரே திட்டமாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இத்திட்டம் அனைவரையும் உள்ள டக்கி செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களில் 86 விழுக்காடு மகளிர், 29 விழுக்காடு ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். மாற்றுத் திறனாளி களுக்கு வேலைவாய்ப்பு வழங்கு வதில் தேசிய அளவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ் கிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் பல்வேறு அளவீடுகளில் தமிழ்நாடு எப்போதும் திட்ட செய லாக்கத்தில் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.
இதுவரை, மூன்று தவணைகளில் 37 கோடி மனித சக்தி நாட்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள் ளது. 06.03.2024 வரை தமிழ்நாடு 40.51 கோடி மனித சக்தி நாட்களை எட்டியுள்ளது. இதில் 68.68 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 79.28 லட் சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2023-_2024 ஆம் ஆண்டில், 06.11.2024 வரை தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய ஊதியமான ரூ.8,734.32 கோடி நிலுவையில், ரூ.7,712.03 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றும் நவம்பர் 2023 மற்றும் டிசம்பர் 2023 ஆகிய ஆண்டுகளுக்கான ஊதியப் பொறுப்பு 05.01.2024 அன்று ரூ.1,022.29 கோடியாக உள்ளது. இது தொடர்பாக தாம் 10.01.2024 அன்று ஊதியத்தை முன்கூட்டியே வழங்குமாறு ஒன்றிய ஊரக வளர்ச் சித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியதையடுத்து, ஒன்றிய அரசு 15.01.2024 மற்றும் 30.01.2024 ஆகிய நாட்களில் ரூ.1,388.91 கோடி ஊதி யத்தை விடுவித்தமைக்காக தனது நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன்.
மேலும், நவம்பர் 2023 கடைசி வாரத்திலிருந்து திறன்சாரா தொழி லாளர்களுக்கான ஊதியம் தொழி லாளர்களுக்கு வழங்கப்படாததால், அதனுடன் பொறுப்புத் தொகையும் 1,678.83. கோடியாக சேர்ந்துள்ளது. இது டிசம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த 24.21 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது.
எனவே, 05.01.2024 வரை திரட் டப்பட்ட மொத்த ஊதிய பொறுப் புத் தொகையான ரூ.1,678.83 கோடியை தொழிலாளர்களுக்கு உடனடியாக ஒன்றிய அரசு விடு விக்க வேண்டும் இது தொடர்பாக ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கின் தனிப்பட்ட தலையீட்டை தாம் எதிர்பார்க்கிறேன். -இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக