திருவனந்தபுரம்,பிப்.21 மும் பையை தொடர்ந்து, திருவனந்த புரம் நகரின் குறிப்பிட்ட பகுதி களில் ,24 மணி நேரமும் வர்த்தக நிறுவனங்கள் செயல்படும் சிறப் புப் பகுதிகள் அமைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு தரப்பில் வெளியான அறிக்கை: திருவனந்த புரத்தில், சுற்றுலாத் துறை, காவல்துறை, தொழிலாளர் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட நிரந்தர குழு உருவாக்கப் பட்டு, அந்த குழுவின் கண் காணிப்பில், 24 மணி நேர வர்த்தக நிறுவனங்கள் செயல்படும் சிறப் புப் பகுதிகள் அமைக்கப்படும்.
இத்திட்டம், தலைநகரைத் தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள அனைத்து பெரு நகரங்களுக்கும், வரும், ஏப்ரலுக்குள் விரிவுபடுத்தப் படும்.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மாநகராட்சிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
-விடுதலை நாளேடு 21.2. 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக