ஞாயிறு, 6 நவம்பர், 2016

மகப்பேறு கால விடுப்பை நீடிக்கும் சட்டத்திருத்தம்


புதுடில்லி, பிப்12_ பணிக்கு செல்லும் பெண்களுக்கு அளிக்கப்பட்டுவரும் மகப்பேறு கால ஊதியத்துடன்கூடிய விடுப்பில் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அச்சட்டத்திருத்தத்தில் அரசுப் பணி யாற்றும் பெண்களின்  விடுப்பு காலம் நீட்டிப்பு, வாடகைத்தாய், தத்து எடுக் கும் பெண்களுக்கும் விடுப்பு வாய்ப்பு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
பிள்ளைப்பேற்றின்போது பணியாற் றக்கூடிய பெண்களுக்கு நான்கு மாதங் கள் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு அனுமதி அளிக்கப்படுகிறது.
தற்போது வாடகைத்தாய் மற்றும் பிறந்த குழந்தையைத் தத்து எடுக்கும் பெண்ணுக்கு மூன்று மாதம் ஊதியத்துடன்கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது.
மகப்பேறு பயன் சட்டம் 1961 சட்டத்தில் திருத்தங்கள் பரிந் துரைக்கப் பட்டுள்ளன. அப்பரிந் துரையில் கருவுற்ற பெண்களுக்கு மூன்று மாதங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுவதை ஆறரை மாதங்கள் அளிப்பதற்கான திருத்தங்கள் விரைவில் அமைச்சரவையில் விவாதிக்கப்பட உள்ளது.
குழந்தைகள் மய்யம் கட்டாயம்
மேலும், சட்டத்திருத்தத்துக்கான பரிந்துரையில் 50 அல்லது 50க்கும் மேற் பட்ட பணியாளர்களைக் கொண்டுள்ள அலுவலகங்களில் குழந்தைகள் பராமரிப்பு மய்யம் கட்டாயம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறப் பட்டுள்ளது.  தொழிலாளர் துறை அமைச்சகத்தின் அலுவலர் ஒருவர் கூறும்போது,
“மூன்று மாதம்வரை வயதுள்ள குழந்தைகளைத் தத்து எடுக்கும் பெண்களுக்கு அக் குழந்தையைப் பராமரித்திட 16 வாரங்கள் ஊதியத்துடன்கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது. வாடகைத்தாயாக இருப்பவர்களுக்கும் குழந்தையை ஈன்றளித்தபிறகு 16 வாரங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும்’’ என்று குறிப்பிட்டார்.
தனியார் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவ வல்லுநர் மருத்துவர் சுசீலா குப்தா கூறும்போது, “இது பாராட்டத்தக்க முடிவாகும். ஆறரை மாதங்கள் என்பது  பெண்கள் குழந்தைப்பேறுக்குப் பிறகு இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான சரியான கால அவகாசமாகும்.
ஏற்கெனவே பெண்களின் பங்களிப்புகளை  பணியிடங்களில் ஊக்கப்படுத்திட பல நிறுவனங்கள் மகப்பேறு விடுப்பை ஆறு மாதமாக உயர்த்தி உள்ளன’’ என்றார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி மூன்று மாதங்களாக உள்ள மகப்பேறு விடுப்பை எட்டு மாதங்களாக உயர்த்திட வேண்டும் என்று கோரியுள்ளார்.  மகளிர் சங்கங்கள் அரசின் இந் நடவடிக்கை நல்ல தொடக்கம் என்று  வரவேற்றுள்ளதுடன், அமைப்புசாரா தொழிலாளார்களாக உள்ள பெண்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று கோரியுள்ளனர்.
அனைத்திந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜக்மதி சங்க்வான் கூறும்போது, “இது நேர்மறையாக எடுத்துவைத்துள்ள அடியாகும். அரசை நாங்கள் கேட்டுக் கொள்வதெல்லாம் இந்த பரிந்துரைக்கப்பட்டுள்ள பயன் பாடுகளில் எவ்வித நிபந்தனையையும் சேர்க்கக்கூடாது. இந்த பயன்கள் அமைப்பு சாராத பிரிவுகளுக்கும் முறை யாக சென்றடைய வேண்டும்’’ என்றார்.
2013ஆம் ஆண்டுவரை பன்னாட் டளவில் 98 நாடுகளில் மகப்பேறு கால விடுப்பாக 14 வாரங்கள் அனும திக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு தொழி லாளர் அமைப்பின் அறிக்கையில் மகப்பேறு மற்றும் குழந்தை பரா மரிப்பு பணிகள் என்கிற தலைப்பில் அளிக் கப்பட்டுள்ள அறிக்கையில் 42 நாடுகளில் 18 வாரங்கள் ஊதியத்துடன் மகப்பேறு கால விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில்  அரசு அலுவலகங்களில் பணியாற்றும பெண்களுக்கு மத்திய சிவில் சேவை (விடுப்பு) விதிகள் 1972இன்படி ஆறு மாதங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு கால விடுப்பு  அளிக்கப் படுகிறது.
-விடுதலை,12.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக