ஞாயிறு, 6 நவம்பர், 2016

மகப்பேறு அடைந்ததற்காக ராணுவ மருத்துவப் பிரிவில் பெண்ணுக்கு பணி மறுக்கப்படக் கூடாது


பஞ்சாப்- அரியானா உயர்நீதிமன்றம்
சண்டீகர், பிப்.10_ மகப் பேறு அடைந்திருப்பதை காரணமாக முன்வைத்து, ராணுவ மருத்துவப் படைப் பிரிவில் பெண்ணுக்கு பணி மறுக்கப்படக் கூடாது என்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராணுவ மருத்துவ படைப்பிரிவுக்காக பெண் ஒருவர் கடந்த 2013ஆம் ஆண்டில் விண்ணப்பித்தி ருந்தார்.
இதுதொடர்பான தேர் வுகள், மருத்துவப் பரி சோதனைகளிலும் அவர் தேர்ச்சி பெற்றார். இதை யடுத்து, ராணுவ மருத்துவ படைப்பிரிவில் கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பணிக்குச் சேரும் படி அவருக்கு உத்தரவு அனுப்பப்பட்டது. இத னிடையே, தேர்வுகளில் பங்கேற்றுவிட்டு பணி உத்தரவுக்காக காத்திருந்த காலத்தில் அவர் மகப்பேறு அடைந்தார். இதைப் பணிக் குச் சேர்ந்த நாளன்று அந் தப் பெண் தெரிவித்தார்.
இதனால், அவரை ராணுவ மருத்துவப் படைப் பிரிவில் சேர்த்துக் கொள்ள மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, சண் டீகரில் இருக்கும் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் அந்தப் பெண் வழக்குத் தொடுத் தார். இந்த வழக்கு மீதான விசாரணை முடிவடைந்து, உயர்நீதிமன்ற நீதிபதி ஹரீந் தர் சிங் சித்து செவ்வாய்க் கிழமை தீர்ப்பு வழங்கினார். இதுதொடர்பாக நீதிபதி கூறுகையில்,
“மகப்பேறு அடை வதும், பணியாற்றுவதும் பெண் ஒருவரது தனிப் பட்ட உரிமைகள். அதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யும்படி பெண்ணைக் கட்டாயப்படுத்தும் முறைக்கு நவீன இந்தியாவில் இட மில்லை’ என்று தெரிவித்தார்.
-விடுதலை,10.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக