ஞாயிறு, 6 நவம்பர், 2016

தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கு ஊதிய நிர்ணயம்: உச்சநீதிமன்றம் உத்தரவு


புதுடில்லி, பிப்.1_ தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்ய குழு அமைத்து சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
நாடு முழுவதும் தனி யார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர் களுக்கு குறைந்த பட்ச சம்பளம் நிர்ணயம் உள் ளிட்ட கோரிக்கைகளுக் காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது தனியார் மருத்துவமனை செவிலியர் களுக்கான குறைந்த பட்ச சம்பள நிர்ணயம் செய்ய மத்திய அரசு 4 வாரத்தில் குழு அமைக்க வேண்டும்.
செவிலியர்களின் இதர கோரிக்கைகள் குறித்தும் குழு பரிசீலிக்க வேண்டும். குழுவின் பரிந்துரைகளை 6 மாதத்தில் சட்டமாக இயற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-விடுதலை,1.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக