வெள்ளி, 8 ஜூலை, 2016

ஓய்வூதியம் பிடித்தம் செய்வதற்கான உச்சவரம்பு முழுமையாக நீக்கம்


புதுடில்லி, ஜூலை 8 -பி.எப். திட்டத் தின் கீழ், ஓய்வூதியம் பிடித்தம் செய்வதற்கான சம்பள உச்சவரம்பு முழுமையாக நீக்கப்பட்டு உள்ளது.

அதாவது ரூ. 15 ஆயிரம் வரையி லான சம்பளத்திற்கு மட்டுமே, நிறு வனங்கள் செலுத்தும் வருங்கால வைப்புநிதியிலிருந்து, 8.33 சதவி கிதத் தொகை பிடித்தம் செய்யப் பட்டு, அது சம்பந்தப்பட்ட தொழி லாளரின் ஓய்வூதியக் கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது.

தற்போது ரூ. 15 ஆயிரம் என்ற சம்பள வரம்பு நீக்கப்பட்டு, இனிமேல் ஒரு தொழி லாளர் பெறும் சம்பளம் எவ்வளவாக இருந்தாலும், அந்த முழுத் தொகை மீதும் ஓய்வூதியம் கணக்கிடப்பட்டு, பிடித்தம் செய்யப்படும். வருங்கால வைப்பு நிதிச் சட்டப்படி, நிறு வனங்களில் பணியாற்றும் தொழிலாளர் களின் சம்பளத்தில் ஒரு பகுதி, வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்பட வேண்டும். அதே அளவிற்கான தொகையை நிறுவனங்களும் தொழிலாளர்களின் பெயரில் தங்களின் பங்களிப்புத் தொகை யாக செலுத்த வேண்டும். இதில், நிறுவனங்கள் செலுத்தும் பங்களிப்புத் தொகையில் 8.33 சதவிகிதத் தொகை மட்டும் தனி யாக கணக்கிடப்பட்டு, அது தொழிலாளியின் ஓய்வூதிய நிதிக் கணக்கில் சேர்க்கப்படும்.
இந்த நிதியிலிருந்து, 58 வயது நிறைவடைந்து பணி ஓய்வுபெறும் தொழிலாளிக்கு, அவரது இறுதிக்காலம் வரை மாதந்தோறும் ஓய்வூதியம் வழங் கப்படும்.கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்ட விதிகளில் 2 மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வுத்தொகையை ரூ.ஆயிரமாக நிர்ணயித் தும், சம்பளத் தொகையில் ரூ. 6 ஆயிரத்து 500-க்கு மட்டுமே 8.33 சதவிகிதம் ஓய்வூதியக் கணக்கில் சேர்க்கப்படும் என்பதை, ரூ. 15 ஆயிரம் வரையிலான சம்பளத் தில் 8.33 சதவிகிதம் என்று மாற் றியும் விதிகள் திருத்தப்பட்டன.

இதன்மூலம் மாதாந்திர ஓய் வூதியத் தொகை ரூ. 541 என்பதிலிருந்து, ரூ. 1250 ஆக உயர்ந் தது. அதிகபட்சம் ரூ. 3 ஆயிரத்து 250 வரை ஓய்வூதியம் பெறலாம் என்றும் ஆனது.தற்போது, இந்த விதிகளிலும் திருத்தம் செய்து, மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சகம் புதிய அரசா ணையை ஜூலை 1-ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
இதன்படி, தொழிலாளர்கள் பெறும் சம்பளத்தில் ரூ. 15 ஆயி ரம் வரையிலான தொகைக்கு மட்டுமே, ஓய்வூதிய நிதி கணக் கிடும் என்பது மாற்றப்பட்டு, எவ்வளவுசம்பளம் பெற்றாலும் அந்த முழுத் தொகைக்கும் 8.33 சதவிகிதம் ஓய்வூதிய நிதிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-விடுதலை,8.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக