திங்கள், 18 ஜூலை, 2016

ஆயத்த ஆடை தொழிலாளர்களுக்கு 64 சதவீத ஊதிய உயர்வு உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை, ஜூலை 17- ஆயத்த ஆடை நிறுவன தொழி லாளர்களுக்கு 64 சதவீத ஊதிய உயர்வை 6 சதவிகித வட்டியுடன் 2 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழிலாளர் நலச்சட்டத் தின்படி ஒவ்வொருதுறை யிலும் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். இந்த குறைந்தபட்ச ஊதி யத்தை ஒவ்வொரு 5 ஆண் டுக்கு ஒருமுறை திருத்தி அமைக்கவேண்டும். ஆனால் திருப்பூரை மய்யமாகவைத்து தமிழகம் முழுவதும் செயல் படும் ஆயத்த ஆடை நிறுவ னங்கள் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தங்களதுதொழி லாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய் யாமலும், ஊதிய உயர்வு வழங்காமலும் இழுத்தடித்து வந்தன.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ஆயத்த ஆடை தொழி லாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை 64 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு அர சாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்துதனி யார் ஆயத்த ஆடைதயா ரிப்பு நிறுவனங்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றது.இந்த தடையை நீக்கக்கோரி அரசு தரப்பிலும், ஆயத்த ஆடை தொழிலாளர்கள் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் `ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் விசாரித்து, ஆயத்த ஆடை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வை 64 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு கடந்த 2014 இல் பிறப்பித்த உத்தரவு செல்லும்.

கடந்த 2004 இல் இருந்து ஆயத்த ஆடை தொழிலாளர் களுக்கு ஊதிய உயர்வு வழங் கப்படாத காரணத்தால்இந்த உயர்வை தமிழக அரசு அளித் துள்ளது. இது நியாயமான உத்தரவுதான். எனவேஇந்த உத்தரவு முறைப்படி அறி விக்கப்பட்ட நாளில் இருந்து ஆண்டுக்கு 6 சதவிகித வட்டியுடன் நிலுவைத் தொகையை 64 சதவிகித ஊதிய உயர்வை ஆயத்த ஆடை நிறுவனங்கள், தங்களது ஊழி யர்களுக்கு 2 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
-விடுதலை,17.
-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக