திங்கள், 18 ஜூலை, 2016

பணி நிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


நெய்வேலி, ஜூலை 17
 பணி நிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழி லாளர்கள் நெய்வேலியில் ஆர்ப் பாட்டம் நடத்தினர். ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி குடும்பத்துடன் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் அறிவித்தனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஒப்பந்த தொழிலாளர்களை என்.எல்.சி. நிர்வாகம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், இந்த கோரிக்கையை நிறை வேற்ற மத்திய, மாநில அரசு கள் தலையிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலியில் உள்ள அம் பேத்கர் சிலை முன்பு அரை நிர்வாண போராட்டம் நடத்தப் போவதாக என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.
அதன்படி போராட்டம் நடத் துவதற்காக நேற்று (16.7.2016) ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் அம்பேத்கர் சிலை முன்பு கூடினர். இது பற்றி தகவல் அறிந்ததும் நெய்வேலி காவல் துறையினர் விரைந்து சென்று, ஜீவா ஒப்பந்த தொழிலாளர் களிடம் அரை நிர்வாண போராட் டத்துக்கு அனுமதி கிடையாது என்றனர்.
இதையடுத்து கோரிக்கை களை வலியுறுத்தி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப் பாட்டம் நடத்தினர். இதற்கு சங்க சிறப்பு தலைவர் ராம மூர்த்தி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சிறப்பு செயலாளர் சேகர் கூறு கையில், என்.எல்.சி. நிறுவனத் தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாகவே பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்தும் கூட, என்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றால், காவல் துறை தடுக்கிறது.
எனவே ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு ஆதரவாக தமிழக அரசும், மத்திய அரசும் விரைந்து தலையிட்டு ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந் தரம் செய்ய வேண்டும், மத்திய பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வருகிற செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடக்க உள்ளது. இந்த போராட்டத்தில் என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களும், நிரந்தர தொழிலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15ஆம் தேதி நெய் வேலியில் என்.எல்.சி. சார்பில் நடைபெறும் சுதந்திர தின விழாவை புறக்கணித்து ஒப் பந்த தொழிலாளர்கள் குடும்பத் துடன் ரயில் மறியல் போராட் டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-விடுதலை,17.7.16

ஆயத்த ஆடை தொழிலாளர்களுக்கு 64 சதவீத ஊதிய உயர்வு உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை, ஜூலை 17- ஆயத்த ஆடை நிறுவன தொழி லாளர்களுக்கு 64 சதவீத ஊதிய உயர்வை 6 சதவிகித வட்டியுடன் 2 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழிலாளர் நலச்சட்டத் தின்படி ஒவ்வொருதுறை யிலும் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். இந்த குறைந்தபட்ச ஊதி யத்தை ஒவ்வொரு 5 ஆண் டுக்கு ஒருமுறை திருத்தி அமைக்கவேண்டும். ஆனால் திருப்பூரை மய்யமாகவைத்து தமிழகம் முழுவதும் செயல் படும் ஆயத்த ஆடை நிறுவ னங்கள் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தங்களதுதொழி லாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய் யாமலும், ஊதிய உயர்வு வழங்காமலும் இழுத்தடித்து வந்தன.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ஆயத்த ஆடை தொழி லாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை 64 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு அர சாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்துதனி யார் ஆயத்த ஆடைதயா ரிப்பு நிறுவனங்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றது.இந்த தடையை நீக்கக்கோரி அரசு தரப்பிலும், ஆயத்த ஆடை தொழிலாளர்கள் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் `ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் விசாரித்து, ஆயத்த ஆடை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வை 64 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு கடந்த 2014 இல் பிறப்பித்த உத்தரவு செல்லும்.

கடந்த 2004 இல் இருந்து ஆயத்த ஆடை தொழிலாளர் களுக்கு ஊதிய உயர்வு வழங் கப்படாத காரணத்தால்இந்த உயர்வை தமிழக அரசு அளித் துள்ளது. இது நியாயமான உத்தரவுதான். எனவேஇந்த உத்தரவு முறைப்படி அறி விக்கப்பட்ட நாளில் இருந்து ஆண்டுக்கு 6 சதவிகித வட்டியுடன் நிலுவைத் தொகையை 64 சதவிகித ஊதிய உயர்வை ஆயத்த ஆடை நிறுவனங்கள், தங்களது ஊழி யர்களுக்கு 2 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
-விடுதலை,17.
-

வெள்ளி, 8 ஜூலை, 2016

ஓய்வூதியம் பிடித்தம் செய்வதற்கான உச்சவரம்பு முழுமையாக நீக்கம்


புதுடில்லி, ஜூலை 8 -பி.எப். திட்டத் தின் கீழ், ஓய்வூதியம் பிடித்தம் செய்வதற்கான சம்பள உச்சவரம்பு முழுமையாக நீக்கப்பட்டு உள்ளது.

அதாவது ரூ. 15 ஆயிரம் வரையி லான சம்பளத்திற்கு மட்டுமே, நிறு வனங்கள் செலுத்தும் வருங்கால வைப்புநிதியிலிருந்து, 8.33 சதவி கிதத் தொகை பிடித்தம் செய்யப் பட்டு, அது சம்பந்தப்பட்ட தொழி லாளரின் ஓய்வூதியக் கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது.

தற்போது ரூ. 15 ஆயிரம் என்ற சம்பள வரம்பு நீக்கப்பட்டு, இனிமேல் ஒரு தொழி லாளர் பெறும் சம்பளம் எவ்வளவாக இருந்தாலும், அந்த முழுத் தொகை மீதும் ஓய்வூதியம் கணக்கிடப்பட்டு, பிடித்தம் செய்யப்படும். வருங்கால வைப்பு நிதிச் சட்டப்படி, நிறு வனங்களில் பணியாற்றும் தொழிலாளர் களின் சம்பளத்தில் ஒரு பகுதி, வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்பட வேண்டும். அதே அளவிற்கான தொகையை நிறுவனங்களும் தொழிலாளர்களின் பெயரில் தங்களின் பங்களிப்புத் தொகை யாக செலுத்த வேண்டும். இதில், நிறுவனங்கள் செலுத்தும் பங்களிப்புத் தொகையில் 8.33 சதவிகிதத் தொகை மட்டும் தனி யாக கணக்கிடப்பட்டு, அது தொழிலாளியின் ஓய்வூதிய நிதிக் கணக்கில் சேர்க்கப்படும்.
இந்த நிதியிலிருந்து, 58 வயது நிறைவடைந்து பணி ஓய்வுபெறும் தொழிலாளிக்கு, அவரது இறுதிக்காலம் வரை மாதந்தோறும் ஓய்வூதியம் வழங் கப்படும்.கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்ட விதிகளில் 2 மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வுத்தொகையை ரூ.ஆயிரமாக நிர்ணயித் தும், சம்பளத் தொகையில் ரூ. 6 ஆயிரத்து 500-க்கு மட்டுமே 8.33 சதவிகிதம் ஓய்வூதியக் கணக்கில் சேர்க்கப்படும் என்பதை, ரூ. 15 ஆயிரம் வரையிலான சம்பளத் தில் 8.33 சதவிகிதம் என்று மாற் றியும் விதிகள் திருத்தப்பட்டன.

இதன்மூலம் மாதாந்திர ஓய் வூதியத் தொகை ரூ. 541 என்பதிலிருந்து, ரூ. 1250 ஆக உயர்ந் தது. அதிகபட்சம் ரூ. 3 ஆயிரத்து 250 வரை ஓய்வூதியம் பெறலாம் என்றும் ஆனது.தற்போது, இந்த விதிகளிலும் திருத்தம் செய்து, மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சகம் புதிய அரசா ணையை ஜூலை 1-ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
இதன்படி, தொழிலாளர்கள் பெறும் சம்பளத்தில் ரூ. 15 ஆயி ரம் வரையிலான தொகைக்கு மட்டுமே, ஓய்வூதிய நிதி கணக் கிடும் என்பது மாற்றப்பட்டு, எவ்வளவுசம்பளம் பெற்றாலும் அந்த முழுத் தொகைக்கும் 8.33 சதவிகிதம் ஓய்வூதிய நிதிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-விடுதலை,8.7.16

சனி, 2 ஜூலை, 2016

பெல்’ தேர்தல்: ஆறு சங்கங்களுக்கு அங்கீகாரம்


திருச்சிராப்பள்ளி, ஜூன் 30 -திருச்சி திருவெறும்பூரில் உள்ள பாரத் ஹெவி எலெக்ட் ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவன தொழிற்சங்க அங்கீ காரத் தேர்தலில் சிஅய்டியு உள்ளிட்ட 6 சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பெல் நிறுவனத்தில் அங் கீகரிக்கப்பட்ட தொழிற்சங் கங்களை தேர்வு செய்ய 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். அதன் படி, இங்கு கடந்த திங்களன்று தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. சிஅய் டியு, ஏஅய்டியுசி, அய்என்டி யுசி, தொமுச, அண்ணா தொழிற்சங்கம்,
அம்பேத்கர் எம்ப்ளாயீஸ் யூனியன், பிஎம்எஸ், பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், பிஎன் எஸ்யு, பிபியு ஆகிய 10 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன. தேர்தலில் மொத்தம் 5594 வாக்குகள் பதிவாகின. வாக்குப் பதிவு முடிந்ததும், அன்றிரவே வாக்குகள் எண் ணும் பணி துவங்கியது.
இதில், தொமுச 891 வாக் குகளும், அம்பேத்கர் எம்ப்ளாயிஸ் யூனியன் 814 வாக்கு களும், அண்ணா தொழிற் சங்கம் 730 வாக்குகளும் பெற் றன. சிஅய்டியு 655 வாக்கு களும், பிஎம்எஸ் 634 வாக்கு களும், ஏஅய்டியுசி 559 வாக்கு கள் பெற்றன. 10 சதவிகித வாக்குகளைப் பெறும் தொழிற்சங்கங்கள் அங்கீகாரம் பெறும் என்ற அடிப்படையில்,
மேற்கண்ட 6 தொழிற்சங் கங்களும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக அறிவிக் கப்பட்டன. இதன்மூலம் தொழிலாளர்கள் தரப்பில், இந்த 6 சங்கங்கள் மட்டுமே பெல் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள முடியும்.
-விடுதலை,30.6.16