ஆய்வில் தகவல்
புதுடில்லி, ஜூன் 8- ஆசிய- பசிபிக் பிராந்திய நாடுகளில் இந்தியாவில் தான் பணியாளர்களின் ஆண்டுச் சராசரி சம்பளம் குறைவாக உள்ளது என ஆய்வறிக்கை ஒன்று தெரி விக்கிறது.
இதுதொடர்பாக இந்தப் பிராந்தியத்தில் உள்ள இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வரும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 5,500 நிறுவனங்களின் பணியாளர்களிடம், “வில்லிஸ் டவர்ஸ் வாட்சன்’ எனும் நிறு வனம் ஆய்வு மேற்கொண்டது. அண்மையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
இந்தியாவில் உள்ள நிறுவ னங்களில் பணிபுரிவோரின் ஆண்டு சராசரி ஊதியம் ரூ.66 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக (இந் திய மதிப்பில் ரூ.4.4 லட்சம்) உள்ளது. இது, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளில் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் சம்பளத்தை ஒப் பிடும்போது குறைவு என்பது டன்,
சீனாவில் பணியாளர்க ளுக்கு வழங்கப்படும் ஊதியத் தில் பாதியாகும். தொழில் நிறு வனங்களில் பல்வேறு நிலை களில் பணிபுரிவோருக்கு இந்தி யாவில் அளிக்கப்படும் ஊதியத் தைவிட சீனாவில் 64 முதல் 100 சதவீதம் அதிகமாக சம்பளம் வழங்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-விடுதலை,8.6.16
-விடுதலை,8.6.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக