ஞாயிறு, 15 நவம்பர், 2015

குறைந்தபட்ச ஊதியத்துக்கான ஆலோசனை குழு


சென்னை, ஜூலை 12- தொழி லாளர்களுக்கு அவரவர் பணிக் கேற்ற குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதற்காக நடைமுறையில் இருந்த ஆலோசனைக்குழுவின் பணிக்காலம் நிறைவு பெற்று விட்டதால் புதிய ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும்.
அப்போதுதான் மாறி வரும் ஊதி யத்துக்கு ஏற்ப தொழிலாளர் களுக்கான குறைந்தபட்ச ஊதி யத்தை பெற்று அளிக்க முடியும் என்று தொழிலாளர் ஆணையர், தமிழக அரசை கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் அவரது கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு கீழ் கண்ட முத்தரப்பு குழு அமைக் கப்படுகிறது.
அரசு தரப்பு உறுப்பினர்கள்
1. தொழிலாளர் ஆணையர் (ஆலோசனை குழு தலைவர்)
2. தொழிலாளர் துணை ஆணை யர் (குறைந்தபட்ச சம்பள பிரிவு)  ஆலோசனை குழு செயலாளர்
3. தொழிற்சாலைகள் தலைமை ஆய்வாளர் (ஆலோசனை குழு உறுப்பினர்)
வேலையளிப்போர் தரப்பு உறுப்பினர்கள்
1. ஆர்.கோடீஸ்வரன் செயலா ளர் இந்திய தொழில்வர்த்தக கூட்டமைப்பு
2. பி.செல்வராஜ் சிறீ காளீஸ் வரி பயர் ஒர்க்ஸ் பி லிமிடெட்
3. சிறீதரன் தலைவர் தமிழ்நாடு தேயிலை, ரப்பர் உற்பத்தியாளர் சங்க தலைவர்
4. எஸ்.விஜயகுமார் பாப்னா தென்னிந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு.
5. எஸ்.பயாஸ் அகமது அகில இந்திய தோல் தொழில்கள் மற் றும் வர்த்தகர்கள் கூட்டமைப்பு
தொழிற்சங்கங்கள் தரப்பு
1. ஆர். சங்கரலிங்கம், இணை செயலாளர் அண்ணா தொழிற் சங்கம்
2. கே. ரவி, தமிழ்நாடு ஏ.அய்.டி. யூ.சி.
3. எஸ்.அருணாச்சலம், அண்ணா பொது தொழிலாளர் சங்கம். தூத்துக்குடி
4. எம்.குமார், சி.அய்.டி.யூ
5. பி.எழில்மணி இன்பராஜ் இந்திய குடியரசு கட்சி
- இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-விடுதலை,12.7.12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக