அந்நிய முதலீடுகளின் வரம்பானது 3000 கோடிகளிலிருந்து 5000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தொலைக்காட்சி செய்திசேனல்களிலும் வானொலியிலும் அந்நிய நேரடி முதலீடு 49 விழுக்காடு வரை அதி கரிக்கப்பட்டுள்ளது தீங்கு விளைவிப்ப தாகும். ஏனெனில் இது அந்நிய ஊடக ஏகபோகங்கள் செய்தி ஊடகங்களை முழுமையாக கட்டுப்படுத்த வழி வகுக்கும். நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரையொட்டி இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இன் னும் மோசமாக இவை அமைச்சர வையின் ஒப்புதல் இன்றி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது நமது நாடா ளுமன்ற ஜனநாயகத்தை முழு மையாக முடக்கு வதாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு பிரதமரின் தன்னிச் சையான முடிவுகளுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
லண்டன், ஜி-20,மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடிஅடுத்தடுத்த வெளி நாட்டுப் பயணம் செல்லவிருப்பதை யொட்டி இந்த அறிவிப்புகள் வந்துள்ளன. பிரதமர் மோடி அந்நிய முதலீட்டை கவர்ந்திழுக்கவே இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் சந்தைகளும் வளங்களும் அந்நிய முத லீடுகள் அதிகமான லாபம்அடைய வேண்டி திறந்துவிடப்பட்டுள்ளன. பெரும்பான்மையான இந்தியமக்கள் அதிக பொருளாதாரச் சுமைகளினால் அவதியுறும்போது இப்படி கொள்ளை யடிக்க உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமான பொருள்களின் விலைகள் கட்டுபடுத்தப்படாமல் அதிகரித்துக்கொண்டே செல் கிறது. விவசாய நெருக்கடியும் ஆழ மாகிக் கொண்டே இருக்கிறது. குறைந்த பட்ச ஆதரவு விலைகள் உயர்த்தப் பட்டுள்ளன.
மிகவும் குறைவே அவை உற்பத்தி செலவைகூட எதிர்கொள்ள போது மான தாக இல்லை. இது விவசாயிகள் தற்கொலைகள் அதிகரிக்க காரணமாக இருக்கிறது. பிரதமர் மோடியும் அவரது அமைச்சரவையும் கடந்த 2014 தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி நமது இந்திய மக்களுக்கு நிவாரணம் அளிப்பதில் கவனம் செலுத்துமாறு அரசியல் தலைமைக்குழு கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அந்த அறிக் கையில் கூறியுள்ளது.
மோடி அரசின் 100 விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டு அனு மதிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிஅய் டியு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது பாதுகாப்புத் துறை, விமானப் போக்குவரத்து, வங்கித்துறை, ஊடகம் மற்றும் ஒலிபரப்புத்துறை ஆகியவற் றில் 100 விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ளது எந்த வகையிலும் தேசத்தின் பொருளா தாரத்திற்கு பயன் தராது மாறாக இந்நட வடிக்கை வேலை இழப்புகளை உருவாக்கி தொழிற்சாலைகள் மூடு வதையும் உள்நாட்டு திறன்களை நசி வடையச் செய்வதையும் ஏற்படுத்தும். இந்த நடவடிக்கை அதிகமான வேலை வாய்ப்புகளை அழிக்குமே அன்றி உருவாக்காது. மேலும் முக்கியமான துறைகளில் அந்நிய நேரடி முதலீடு களை அனுமதிப்பது அவற்றை கார்ப் பரேட்டுகள் ஆதிக்கம் செய்வதற்கு வழிவகுக்கும் அபாயத்தை கொண்டுள் ளது. எனவே தேசத்தையும் நாட்டு மக் களையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் இது போன்ற பிற்போக்கு நடவடிக்கைகளை கைவிடுமாறு சிஅய்டியு அரசைக் கேட்டுக் கொள் கிறது.
அரசு வேளாண்மைத்துறை கால் நடை வளர்ப்புத்துறை மற்றும் தோட் டத்துறை உள்ளிட்ட 15 துறைகளில் 100 விழுக்காடு அந்நியநேரடி முத லீட்டை அனுமதித்துள்ளதை அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடுமை யாக எதிர்க்கிறது.இந்த நடவடிக்கை தொலை நோக்கில் நாட்டின் இறை யாண்மை உரிமைகளை பாதிப்பதோடு நாட்டை ஏகாதிபத்தியத்திற்கு அடி பணிந்ததாக மாற்றி விடும். இந்த பிற்போக்கான நடவடிக்கை நாட்டின் உழைக்கும் மக்களுக்கும், விவசாயிகளுக் கும் மிகவும் துயரங்களையும் சிரமங் களையும் அளிக்கும். கடன் சுமையால் ஏராள மான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் நெருக் கடியிலுள்ள விவசாயிகளை மேலும் சுரண்டுவதற்கு வழி வகுக்கும்.அந்நிய நேரடி முதலீடுகள் நாட்டின் வளர்ச் சிக்கு வழிவகுக்கும் என்பதற்கு நேரடியான எதிர்மறை அனுபவங்கள் உள்ள நாடுகள் உள்ளன. ஜிம்பாவே, கென்யா, நமீபியா, தென் ஆப்பிரிக்கா, கௌதமாலா, அர்ஜெண்டினா மற்றும் பிரேசில் நாட்டு அனுபவங்கள் அந்நிய நேரடி முதலீடுகளை வரைமுறையற்று அனுமதித்தால் அந்நாடுகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி அனுபவங்கள் இங்கும் நிகழலாம் என்பதை எச்சரிக் கையாக கொள்ள வேண்டும் என அகில இந்திய விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்பு
இதுபோல், ஆர்.எஸ்.எஸ். ஆதரவு தொழிலாளர்கள் அமைப்பான பாரதீய மஸ்தூர் சங்க், மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் பொதுச்செயலாளர் வர்ஜேஷ் உபாத்யாயா, பிரதமர் மோடிக்கும், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கும் தனித்தனியாக எழுதி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டைஅனுமதிப்பது சில்லறை வியாபாரிகளை வேலை யின்றி அலைய வைத்து விடும். பாது காப்பு துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதும் நல்லதல்ல.
எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும். இம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இதைச் செய்ய தவறினால், தெரு வில் இறங்கி போராட்டம் நடத் துவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
.விடுதலை,13.11.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக