வியாழன், 30 ஜூலை, 2015

வருங்கால வைப்புநிதி கணக்கு விவரம் அறிய குறுஞ்செய்தி வசதி


சென்னை, ஏப்.17_ தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரங்களை குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) மூலம் அறிந்துகொள்ளும் வசதி அண்மையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி நிறுவன உறுப்பினர்கள் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்களைப் பெற, தங்கள் பொது கணக்கு எண்ணை (யு.எ.என் நம்பர்) www.uan members.epfoservices.in என்ற இணையதளத்துக்கு சென்று செயல்பாட்டுக்கு கொண்டு வருவது அவசியம்.
தகவல்களைப் பெறுவது எப்படி?: தங்கள் பொது கணக்கு எண்ணை செயல்பாட் டுக்கு கொண்டு வந்த உறுப் பினர்கள், முந்தைய வருங் கால வைப்பு நிதி தொகை யை நடப்பு கணக்குடன் இணைத்தல், வருங்கால வைப்பு நிதிக்கான மாத பங்களிப்புத் தொகை உள்ளிட்டவற்றை தாங்கள் பதிவு செய்துள்ள செல் லிடப்பேசியில் இருந்து குறுந்தகவல் மூலம் அவ ரவர் தாய் மொழியில் தெரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு குறுந்தகவல் மூலம் தமிழில் தகவல் களைப் பெற விரும்பும் உறுப்பினர்கள் EPFOHO UAN TAM என்றும், ஆங்கிலத்தில் தகவல்களைப் பெற விரும்பு பவர்கள்   EPFOHO UAN ENG என்றும் "டைப்' செய்து 7738299899 என்ற செல் லிடப்பேசி எண்ணுக்கு அனுப்பி தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் என, வருங்கால வைப்புநிதி நிறுவன அதிகாரிகள் தெரி வித்தனர்.
கணக்குகள் புதுப்பிப்பு தாம்பரம் மண்டல தொழி லாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் நடப்பு நிதியாண்டின் முதல் நாளான ஏப்ரல் 1-ஆம் தேதியே அனைத்து தொழி லாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன என மண்டல வருங்கால ஆணையர் மூ.மதியழகன் தெரிவித்தார்.
வருங்கால வைப்பு நிதி கணக்குகள் இவ்வாறு ஒரே சமயத்தில் புதுப்பிக்கப் படுவது இது முதல் முறை யாகும்.
தாம்பரம் மண்டலத்தில் மொத்தமுள்ள 24 லட்சத்து 52 ஆயிரம் உறுப்பினர் களின் கணக்குகளும் புதுப் பிக்கப்பட்டு, அதில் 11 லட்சம் உறுப்பினர்களின் கணக்குகள் செயல்பாட்டில் உள்ளவை என்றும், 12 லட்சத்து 52 ஆயிரம் கணக் குககள் செயல்பாட்டில் இல்லாததும் கண்டறியப் பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
-விடுதலை,17.4.15

ஒடிசாவில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் உயர்வு

ஒடிசாவில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் உயர்வு

ஒடிசா, ஜூலை 26_
 தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை ஒடிசா அரசு உயர்த்தியுள் ளது. இதன்மூலம் சுமார் 50 லட்சம் தொழிலாளர் கள் பலன் பெறுவர்.
இது தொடர்பான அறிவிக்கையை தொழி லாளர் மற்றும் இஎஸ்அய் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
நாளொன்றுக்கு...
திறன்பெறாத, பாதி திறன் பெற்ற, திறனுள்ள, மிகுந்த திறனுள்ள என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு முறையே நாளொன்றுக்கு ரூ.200, ரூ.220, ரூ.240, ரூ.260 என குறைந்தபட்ச ஊதி யம் நிர்ணயிக்கப்பட்டுள் ளதாக அறிவிக்கை சுட் டிக் காட்டியிருக்கிறது.
இந்த ஊதிய உயர்வின் மூலம் மாதந்தோறும் ரூ.1,500 அதிகமாகக் கிடைக்கும். இதற்கு முன் னர் மேற்கண்ட 4 பிரிவு களைச் சேர்ந்த தொழிலா ளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நாளொன்றுக்கு ரூ.150, ரூ.170, ரூ.190, ரூ.205 என நிர்ணயிக்கப்பட் டிருந்தது.
இதே குறைந்தபட்ச ஊதியத்தை நாளொன் றுக்கு ரூ.137-இல் இருந்து ரூ.160-ஆக மத்திய அரசு முன்னதாக உயர்த்தியிருந் தது. தொழிலாளர் ஒருவர் நாள்தோறும் அரை மணி நேரம் ஓய்வு போக, 8 மணிநேரம் வேலை பார்ப் பார். இந்த ஊதிய உயர்வு மூலம் தனியார் நிறு வனங்களில் பணிபுரியும் சுமார் 50 லட்சம் தொழி லாளர்கள் பலன் பெறுவர் என்று ஒடிசா கட்டட மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் சுபாஷ் சிங் தெரிவித்தார்.
மாநில அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 2 லட்சம் தாற்காலிகப் பணியாளர்களுக்கும் இந்த ஊதிய உயர்வு கிடைக்கும்.
-விடுதலை,26.7.15

இரவு நேர பணிச்சுமை காரணங்களால் குறைபாடு

இரவு நேர பணிச்சுமை காரணங்களால்
90 சதவீதத்தினருக்கு விட்டமின் டி குறைபாடு
சென்னை, ஜூலை 30_ இந்தியாவில் இரவு நேர வேலை, பணிச்சுமை போன்ற காரணங்களால் மக்கள் தொகையில் 80 _ 90 சதவீதத்தினருக்கு விட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது என ஆய்வில் அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கிறது.
இதனால் எலும்பு வியாதிகள் மட்டுமின்றி, மாரடைப்பு, உடல் சம்பந்தமான கோளாறு, நீரிழிவு, புற்றுநோய் போன்ற பெரிய பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது என ஆய்வின் வாயிலாக தெரியவந்துள்ளது.
எனவே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்திய மருத்துவர்கள் சங்கம், விழித்தெழு மற்றும் ஒளிர்ந்திடு (RISE AND SHINE) பிரச்சாரத்தை நடத்துகிறது. இதன் ஓர் அங்கமாக, சென்னையில் தொடர் மருத்துவ கல்வி முகாம் (CME) நிகழ்வை இந்திய மருத்துவர்கள் சங்கம் நடத்தியது. 70க்கும் மேற்பட்ட பிரபலமான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மேக்னா (MAGNA CODE) உடல் பருமன் நீரிழிவு மற்றும் சுரப்பியல் நிபுணர் டாக்டர் ஜி.சண்முக சுந்தர் பேசுகையில்:- விட்டமின் டி குறைபாடு ஒரு புதிய நோய் அல்ல. இது அனைத்து வயதினரிடமும் குறிப்பாக கருவுற்றுள்ள பெண்கள், பாலூட்டும் பெண்கள், 6 மாதம் முதல் அய்ந்து வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களிடம் காணப் படுகிறது.
சூரிய வெளிச்சத்தை பயன்படுத்தாமல், விட்டமின் டி-_யை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்தால் தேவையற்ற பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித் துள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் விட்டமின் டி குறைபாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் எழுச்சி பிரச்சாரத்தை தீவிரப்படுத்த இந்திய மருத்துவ சங்கம் (IMA) திட்டமிட் டுள்ளது என இதன் தலைவர் டாக்டர் ஏ.மார்த் தாண்ட பிள்ளை மற்றும் கவுரவ பொதுச் செயலாளர் டாக்டர் கே.கே-.அகர்வால் ஆகியோர் தெரிவித்துள்ளனர். வைட்டமின் டி குறைபாடு உலகிலேயே தெற்கு ஆசிய பிராந்தியத்தில் தான் அதிகம் காணப் படுகிறது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன என டாக்டர் அம்பிரிஷ் டாக்டர் சி.ஆறுமுகம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
- விடுதலை,30.7.15

புதன், 8 ஜூலை, 2015

தேசிய அடிநிலை குறைந்த அளவு ஊதியம்(NFLMW)மீண்டும் உயர்வு-W.E.F. 01.07.2015




          இந்தியா முழுவதும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கென்று இதைவிட குறைவாக கூலி கொடுக்கக்கூடாது என்று ஒரு தொகையை இந்திய தொழிலாளர் அமைச்சகம் குறிப்பிட்டு அறிவிக்கும். 

            சென்ற மாதம் 1.7.2013 முதல், நாள் ஒன்றுக்கு ரூ115/-லிருந்து ரூ137/-ஆக உயர்த்தி கூலி தொகையை (நிலுவைத் தொகையுடன்)தர அறிவித்திருந்தது.

           7.7.2015 நாளிட்டு  மீண்டும் தற்போது 1.7.2015 முதல் ரூ137/-லிருந்து ரூ160/-ஆக உயர்த்தி (நிலுவைத் தொகையுடன்)தர அறிவித்திருக்கிறது.

அதன் ஆணை  அப்படியே இங்கு தரப்படுகிறது.

"21"


www.pib.nic.in

Press Information Bureau

Government of India

***

NATIONAL FLOOR LEVEL MINIMUM WAGE ENHANCED FROM RS.137 TO RS.160 PER DAY W.E.F. 01.07.2015

New Delhi:Ashadha 16, 1937

July 07, 2015
National Floor Level Minimum Wage (NFLMU) has been revised upwards from existing Rs. 137/- to Rs. 160/-per day w.e.f. 01.07.2015. In a letter written to all the Chief Ministers and LGs today, Shri Bandaru Dattatraya, the Minister of State(IC) for Labour and Employment has urged to take necessary steps for fixation/revision of the minimum rates of wages in respect of all scheduled employments in State/UT not below the NFLMW of Rs. 160/- per day w.e.f. 01.07.2015. The Minister has also emphasized to ensure implementation of various provisions of the Minimum Wages Act, 1948 so that the objective of ensuring Minimum Wages to workers is fulfilled.

While reviewing the movement of CPI-IW during April 2014 to March 2015 over the period April 2012 to March 2013, it was observed that the average CPI-IW has risen from 215.17 to 250.83, he said. Accordingly, the NFLMW has been revised upwards from existing Rs. 137/- to Rs. 160/-per day w.e.f. 01.07.2015.

In order to have a uniform wage structure and to reduce the disparity in minimum wages across the country, National Floor Level Minimum Wage (NFLMU) is fixed which also requires to be revised from time to time on the basis of rise in Consumer Price Index for Industrial Workers (CPI-IW). The NFLMU was last revised from Rs. 115/- to Rs. 137/- per day with effect from 01.07.2013.

***

AT


''விடுதலை'' நாளேட்டு செய்தி
புதன், 08 ஜூலை 2015 


புதுடில்லி, ஜூலை 8- நாடு முழுவதும் உள்ள கூலி தொழிலாளர்களுக் கான தேசிய தளமட்ட குறைந்தபட்ச கூலி ரூ.137 ஆக இருந்து வந்தது. இதை மத்திய அரசு ரூ.160 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநில முதல்-அமைச்சர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களுக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர், அனைத்து பட்டியலிடப்பட்ட வேலைகளிலும் குறைந்த பட்ச தினக்கூலியை ஜூலை ஒன்றாம் தேதி முதல் ரூ.137-ல் இருந்து ரூ.160-க்கு குறைவில்லாமல் நிர்ணயிக்கவும், மாற்றி அமைக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறி உள் ளார். மேலும், கூலித் தொழி லாளர்களுக்கு குறைந்த பட்ச தினக்கூலியை உறுதி செய்யும் நோக் கத்தை நிறைவேற்றும் வகையில், 1948-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குறைந்த பட்ச கூலிகள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளையும் அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண் டுள்ளார். மேலும் அதில் கூறி இருப்பதாவது:-
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி நடப் பாண்டு மார்ச் மாதம் வரையிலான தொழிற் சாலை தொழிலாளர்கள் விலை குறியீட்டு எண்ணை, 2012 ஏப்ரல் மாதம் தொடங்கி 2013 மார்ச் மாதம் வரையிலான தொழிற்சாலை தொழி லாளர்கள் விலை குறி யீட்டு எண்ணுடன் ஒப் பிட்டு பரிசீலித்ததில், சராசரி தொழிற்சாலை தொழிலாளர்கள் விலை குறியீட்டு எண் ரூ.215.17இ-ல் இருந்து ரூ.250.83 ஆக உயர்ந்துள்ளது. அதற் கேற்ப தேசிய தளமட்ட குறைந்தபட்ச தினக்கூலி, தற்போதைய ரூ.137இ-ல் இருந்து ரூ.160 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ஒரே மாதிரியான கூலி கட்டமைப்பை கொண்டி ருக்கவும், நாடு முழுவதும் குறைந்தபட்ச கூலியில் உள்ள முரண்பாடுகளை குறைக்கவும், தேசிய தள மட்ட குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நேரத்துக்கு நேரம் தொழிற்சாலை தொழி லாளர்கள் விலை குறி யீட்டு எண் அடிப்படை யில் நிர்ணயிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

''தினத்தந்தி'' செய்தி-8.7.15



ஞாயிறு, 5 ஜூலை, 2015

மத்திய அரசு வேலையில் சேர மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு சலுகை: புதிய அறிவிப்பு

      
புதுடில்லி, ஜூன் 30_-        மத்திய அரசு வேலையில் (ஏ மற்றும் பி குரூப்) சேரு வதற்கான வயது வரம்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இப்போது 5 ஆண்டுகள் சலுகை அளிக்கப்படுகி றது. அவர்கள் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியி னராக இருந்தால் 10 ஆண்டுகளும், இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 8 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படுகிறது.
சி மற்றும் டி குரூப்பில் வேலைவாய்ப்பு அலு வலகம் மூலம் தேர்வு செய்யும்போது 10 ஆண்டு சலுகை அளிக்கப்படுகிறது.        இப்போது இதுதொடர் பாக மத்திய அரசு கூடுதல் சலுகைகளை அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு பணியாளர் மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ள உத்தர வில் கூறியிருப்பதாவது:-        கண் பார்வையற்ற வர்கள் அல்லது பார்வை குறைபாடு உள்ளவர்கள், கேட்கும் திறன் குறைபாடு உள்ளவர்கள், தானே இயங்குவதில் குறைபாடு உள்ளவர்கள் மத்திய அரசின் வேலைக்கு நேர டியாக தேர்வு செய்யப்ப டும்போது உச்சவயதுக் கான வரம்பில் 10 ஆண்டு சலுகை அளிக்கப்படுகி றது. அவர்களில் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடி யினராக இருந்தால் 15 ஆண்டுகளும், இதர பிற் பட்ட வகுப்பினராக இருந் தால் 13 வருடங்களும் சலுகை அளிக்கப்படும். மத்திய அரசின் அனைத்து வேலைகளுக்கும் குறிப்பிட்ட மாற்றுத்திற னாளிகளின் குறைபாடுக ளுக்கு ஏற்ப அவர்களுக்கு பொருத்தமான பணி களாக அடையாளம் கூறப்பட்ட பணிகளுக்கு இது பொருந்தும்.        ஆனால் இது மத்திய அரசின் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு பொருந்தாது. எத்தகைய மாற்றுத்திறன் உள்ளவர் களுக்கு என்னென்ன பணி கள் பொருத்தமானது என்ற பட்டியல் குறித்து தனியாக அறிவிப்பு வெளி யிடப்படும்.
மாற்றுத்திறனாளிகள் 40 சதவீத குறைபாடு உள்ளவர்களுக்கு மட் டுமே இந்த சலுகை பொருந் தும். வயது வரம்பில் சலுகை அளிக்கப்பட்டா லும், வேலைக்கு விண் ணப்பிப்பவர்களின் அதிக பட்ச வயதாக 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண் டும். இவ்வாறு அந்த அறி விப்பில் கூறப்பட்டுள்ளது.

-விடுதலை,30.6.15

புதன், 1 ஜூலை, 2015

முழுவதுமாக மாற்றப்படும் தொழிலாளர் சட்டங்கள்


புதுடில்லி, ஜூன் 18- மத்திய அரசால் தொழிலாளர் சட்டங்களில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் நாடாளுமன்றத் தால் அங்கீகரிக்கப்பட்டாலும், மிகப் பெரிய பொருளாதாரச் சீர்திருத்தமாகக் கூறப்பட்டாலும், அவை நாடாளுமன் றத்தில் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு மற்றும் தொழிலாளர்களுக்காக உழைப் பவர்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியுள்ளது.
பிரதமர் மோடி சுதந்திர நாளிலிருந்து தொடர்ந்து பல லட்சம் வேலை வாய்ப் புகளை உருவாக்குவதாகக் கூறி வரு கிறார். அரசியல்ரீதியிலான பின்னடை வுகள் சீர்திருத்தங்கள் செய்ய தடை களாக உள்ளன. மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்தில் அலுவலர்களாக உள்ள மூன்று பேர் கூறும்போது, அமைச்சகத் தின் சார்பில் வரும் நாடாளுமன்றத்துக் கான கூட்டத் தொடரில் சட்ட முன் வரைவு தாக்கல் செய்யப்பட உள்ளது. அச்சட்ட முன்வரைவில் தொழிலாளர் களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ள விதிமுறைகளை தளர்த்தி, தொழிலாளர் கள் சங்கங்களை எளிதாக அமைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். தொழிலாளர் சட்டங்களில் மாற்றங் களை நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டால், இந்தியாவில் 1991 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கப் பட்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற் படலாம். ஆனால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பை யும், மற்றவகையில் தொழிலாளர் நல அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்தியா குறித்து உலக வங்கி கூறும் போது, பன்னாட்டளவில் தொழிலாளர் சந்தையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படாத நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் தற்பொழுதுள்ள தொழி லாளர் சட்டங்கள் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில், மோடியின் மேக் இன் இந்தியா நோக்கத்தில், உற்பத்தித் துறைகளில் 20 கோடி இந்தியர்களுக்கு அடுத்த 20 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறிவருகிறார். ஆனால், மோடி தொழிலாளர் சட்டங் களில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் பெரிய அளவிலான தடைகள் உள்ளன. நாடாளுமன்றத்தில் மக்களவையில் முழு அளவிலான பெரும்பான்மை யைப் பெற்றிருக்கும் அவருக்கு மேலவையில் போதிய அளவில் அவர் நினைக்கும் எதையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாதவராக இருக்கிறார்.
ஊனமுற்ற ஒருவருக்குத் தடைகள் இருப்பதுபோன்று அவருடைய வணி கத்தை எளிதாக்கும் முயற்சிகளாக விவசாய நிலங்களை வாங்கி ஆசியா விலேயே   பொதுச்சந்தையில் மூன்றா வது மிகப்பெரிய பொருளாதார மய்ய மாக மாற்றிட தடைகள் உள்ளன.
அய்எச்எஸ் குளோபல் இன்சைட் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பகுதி களுக்கான பொருளாதார வல்லுநர் ராஜீவ் பிஸ்வாஸ், மோடி எதைச் செய்வதாக இருந்தாலும் அவரால் சிறிதளவே செய்ய முடியும், ஆனால், குறிப்பிட்ட வரையறைகளுக்குள்தான் செய்ய முடியும்.
இதுபோன்ற சீர்திருத்தங்களை செய்யவில்லையானால், பொருளாதா ரம் தேக்கநிலையை அடைந்துவிடும். முதலீட்டாளர்கள் வேறு இடம்தேடிச் சென்றுவிடுவார்கள். உறுதியான முடிவு களை எடுக்கவில்லையானால், அரசிய லில் எதிர்க்கட்சியினராக இருப்பவர்கள் மன்னித்துவிடமாட்டார்கள்.
கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இன்றுவரை மோடி, தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த முனையும்போது, அதன் கடுமையைக் குறைக்க வேண்டியதாக இருக்கிறது. அவர் தலைமையிலான அரசின் அர சியல் ரீதியிலான பின்னடைவுகளால், தொழிலாளர் விவகாரங்களில்  இந்திய மாநிலங்களுடன் உள்ள பிணைப்பு தகர்ந்து அதற்கு அவரே பொறுப்பேற் கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அவர் எடுக்கும் முடிவுகளை அப் படியே ஏற்கச் செய்யவேண்டுமானால், அவர் கட்சியான பாஜக ஆளும் ராஜஸ் தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வேண்டுமானால் முன்னெடுக்கலாம்.
இந்த மாநிலங்களில் வெற்றிகர மாகவும், சத்தமில்லாமலும்  நடை முறைப்படுத்த ஊக்கப்படுத்தப்படுகிறது. அரசின் தொழிலாளர் துறை அமைச் சகம் அதையே முன்மாதிரியாகக் கொண்டு தேசிய அளவில் தொழிலாளர் சட்ட மாற்றங்களை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் என்று தொழிலாளர் அமைச்சகம் கருதுவதாக அமைச்சகத் தின் அலுவலர் ஒருவர் தெரிவித்துள் ளார்.
தொழிலாளர் சட்டங்களில் சீரமைப் புத் திட்டத்தில் 300-க்கும் குறைவாக தொழிலாளர்கள் உள்ள நிறுவனங்கள் அரசின் அனுமதி இல்லாமல் தொழிலா ளர்களை பணியிலிருந்து நீக்கிவிடலாம். ஏற்கெனவே உள்ள தொழிலாளர் சட்டத்தின்படி, நூறு தொழிலாளர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட தொழி லாளர்களைக் கொண்டுள்ள தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களை வேலையைவிட்டு நீக்கவேண்டுமா னால் அரசின் அனுமதியைப் பெற வேண்டியது அவசியமாகும். ஆனால், சீரமைப்புத்திட்டத்தில் பணியிலிருந்து விலக்கப்படும் தொழிலாளர்களுக்கு மூன்று மடங்கு தொகுப்பு நிதியாக வழங்கிட வேண்டும் என்று உள்ளதாக அமைச்சக அலுவலர் கூறினார்.
தொழில் நிறுவனங்கள் நசிவடை யும்போது ஏற்படும் சிக்கல்களின் போதும், ஏற்கெனவே இருந்ததைவிட சிறிய நிறுவனமாக தக்க வைத்துக் கொண்டு தொடர்ந்து நடத்துவதற்கும், தொழில் நிறுவனங்கள் தொழிலாளர் களை பணியிலிருந்து வெளியேற்றுவ தற்கான அரசின் கட்டுப்பாடுகளைத் தளர்த்திடுமாறு நீண்டகாலமாகவே கோரி வந்துள்ளனர்.  தொழிலாளர் சட்டங்களில் சீரமைப்பு குறித்த ஆலோசனைகளை அளித்து வரும் தொழிலாளர் அமைச்சகத்தின் மூத்த அலுவலர் ஒருவர் கூறுகையில், தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளரின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் சமூகப்பாதுகாப்பு ஆகியவைகளை உறுதிப்படுத்தவும் தொழிலாளர் சட்டங்களில் சீரமைப்பு வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றார்.
அடுத்த மூன்று அல்லது நான்கு வாரங்களில் தொழிலாளர் சட்டங்கள் மீதான சீரமைப்பு வரைவு முழுமை யாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுவதாகவும், அதன்பின்னர் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப் பப்பட உள்ளதாகவும் அமைச்சகத்தின் அலுவலர் கூறினார்.
தொழிலாளர் சட்டங்களில் மாற்றங் கள் செய்ய உள்ள திட்டத்தை எதிர்த்து தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங் கங்கள் போராடலாம், வேலைநிறுத்தம் கூட செய்யலாம். ஆனால், இச்சீர மைப்புமூலமாக அனைத்து தொழிலா ளர்களுக்கும் குறைந்தபட்ச கூலி உறுதிசெய்யப்படும்.
பன்னாட்டு வங்கி இந்தியாவின் தொழிலாளர் நிலைகுறித்துக் குறிப்பிடும் போது, பன்னாட்டளவில் மற்ற நாடு களுடன் ஒப்பிடும்போது, தொழிலாளர் களிடையே பெரிய அளவிலான மாற் றங்களை செய்ய முடியாத நிலை உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. சீனாவு டன் ஒப்பிடும்போது, அந்த நாட்டில் 32 விழுக்காட்டினர் இருநூறாயிரம் கோடி அமெரிக்க டாலர் கொண்டுள்ள பெரும் பணக்காரர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் இந்தியாவில் 16 விழுக்காட் டினர் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டில் தொழில் ஆலோ சனை நிறுவனமாகிய மெக்கின்சி நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஆய்வில் 2009ஆம் ஆண்டில் இந்தி யாவில் 84 விழுக்காட்டினர் உற்பத்தி யாளர்கள் 50 பணியாளர்களை மட்டுமே  பணியில் அமர்த்தி இருந்துள்ளனர். சீனாவுடன் ஒப்பிடுகையில் அது வெறும் 25 விழுக்காட்டளவுதான் என்று ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
பொருளாதார வல்லுநர்கள் குறிப் பிடும்போது, தற்போதைய தொழிலாளர் சட்டங் களில் சீரமைப்பு என்பதில்  பெரிய அளவில் தேக்கநிலை உள்ளது. மோடி யின்,  மேக் இன் இந்தியா திட்டத்தில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ள 20 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அடுத்த 20 ஆண்டுகளில் எட்டுவதாகக்கூறுவதில் தேக்கநிலை உள்ளது.
இந்தியாவில் உள்ள தொழில் நிறுவனங்களில் எட்டு விழுக்காட்டினர் மட்டுமே நிரந்தரமான தொழிலாளர் களைக் கொண்டுள்ளனர். மற்றபடி, குறைந்த காலத்துக்கான ஒப்பந்தமுறைத் தொழிலாளர்களாகவே நடத்தப்பட்டு சமூகப் பாதுகாப்பினை குறைந்த அளவிலேயே பெறுகின்றனர்.
அரசியல்ரீதியிலான அழுத்தங் களின் வாயிலாக உரிய பாதையை அமைத்தால்தான் தொழிலாளர் சட்டங் களில் மாற்றங்களை ஏற்படுத்தும் சட்ட சீரமைப்புக்கான முன்வரைவை துரிதப் படுத்த முடியும்.
யூரோசியா தொழில் ஆலோசனைக் கான நிறுவனத்தின் இயக்குநர் கில் பிந்தர் தோசாஞ்ச் கூறுகையில், அவர்கள் அறிமுகப்படுத்தலாம், ஆனால், செயலாக்கம் என்பதில் மிகுந்த சுணக்கம் இருக்கும் என்றார்.

-விடுதலை,18.6.15