புதுடில்லி, ஜூன் 18- மத்திய அரசால் தொழிலாளர் சட்டங்களில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் நாடாளுமன்றத் தால் அங்கீகரிக்கப்பட்டாலும், மிகப் பெரிய பொருளாதாரச் சீர்திருத்தமாகக் கூறப்பட்டாலும், அவை நாடாளுமன் றத்தில் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு மற்றும் தொழிலாளர்களுக்காக உழைப் பவர்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியுள்ளது.
பிரதமர் மோடி சுதந்திர நாளிலிருந்து தொடர்ந்து பல லட்சம் வேலை வாய்ப் புகளை உருவாக்குவதாகக் கூறி வரு கிறார். அரசியல்ரீதியிலான பின்னடை வுகள் சீர்திருத்தங்கள் செய்ய தடை களாக உள்ளன. மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்தில் அலுவலர்களாக உள்ள மூன்று பேர் கூறும்போது, அமைச்சகத் தின் சார்பில் வரும் நாடாளுமன்றத்துக் கான கூட்டத் தொடரில் சட்ட முன் வரைவு தாக்கல் செய்யப்பட உள்ளது. அச்சட்ட முன்வரைவில் தொழிலாளர் களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ள விதிமுறைகளை தளர்த்தி, தொழிலாளர் கள் சங்கங்களை எளிதாக அமைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். தொழிலாளர் சட்டங்களில் மாற்றங் களை நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டால், இந்தியாவில் 1991 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கப் பட்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற் படலாம். ஆனால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பை யும், மற்றவகையில் தொழிலாளர் நல அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்தியா குறித்து உலக வங்கி கூறும் போது, பன்னாட்டளவில் தொழிலாளர் சந்தையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படாத நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் தற்பொழுதுள்ள தொழி லாளர் சட்டங்கள் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில், மோடியின் மேக் இன் இந்தியா நோக்கத்தில், உற்பத்தித் துறைகளில் 20 கோடி இந்தியர்களுக்கு அடுத்த 20 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறிவருகிறார். ஆனால், மோடி தொழிலாளர் சட்டங் களில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் பெரிய அளவிலான தடைகள் உள்ளன. நாடாளுமன்றத்தில் மக்களவையில் முழு அளவிலான பெரும்பான்மை யைப் பெற்றிருக்கும் அவருக்கு மேலவையில் போதிய அளவில் அவர் நினைக்கும் எதையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாதவராக இருக்கிறார்.
ஊனமுற்ற ஒருவருக்குத் தடைகள் இருப்பதுபோன்று அவருடைய வணி கத்தை எளிதாக்கும் முயற்சிகளாக விவசாய நிலங்களை வாங்கி ஆசியா விலேயே பொதுச்சந்தையில் மூன்றா வது மிகப்பெரிய பொருளாதார மய்ய மாக மாற்றிட தடைகள் உள்ளன.
அய்எச்எஸ் குளோபல் இன்சைட் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பகுதி களுக்கான பொருளாதார வல்லுநர் ராஜீவ் பிஸ்வாஸ், மோடி எதைச் செய்வதாக இருந்தாலும் அவரால் சிறிதளவே செய்ய முடியும், ஆனால், குறிப்பிட்ட வரையறைகளுக்குள்தான் செய்ய முடியும்.
இதுபோன்ற சீர்திருத்தங்களை செய்யவில்லையானால், பொருளாதா ரம் தேக்கநிலையை அடைந்துவிடும். முதலீட்டாளர்கள் வேறு இடம்தேடிச் சென்றுவிடுவார்கள். உறுதியான முடிவு களை எடுக்கவில்லையானால், அரசிய லில் எதிர்க்கட்சியினராக இருப்பவர்கள் மன்னித்துவிடமாட்டார்கள்.
கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இன்றுவரை மோடி, தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த முனையும்போது, அதன் கடுமையைக் குறைக்க வேண்டியதாக இருக்கிறது. அவர் தலைமையிலான அரசின் அர சியல் ரீதியிலான பின்னடைவுகளால், தொழிலாளர் விவகாரங்களில் இந்திய மாநிலங்களுடன் உள்ள பிணைப்பு தகர்ந்து அதற்கு அவரே பொறுப்பேற் கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அவர் எடுக்கும் முடிவுகளை அப் படியே ஏற்கச் செய்யவேண்டுமானால், அவர் கட்சியான பாஜக ஆளும் ராஜஸ் தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வேண்டுமானால் முன்னெடுக்கலாம்.
இந்த மாநிலங்களில் வெற்றிகர மாகவும், சத்தமில்லாமலும் நடை முறைப்படுத்த ஊக்கப்படுத்தப்படுகிறது. அரசின் தொழிலாளர் துறை அமைச் சகம் அதையே முன்மாதிரியாகக் கொண்டு தேசிய அளவில் தொழிலாளர் சட்ட மாற்றங்களை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் என்று தொழிலாளர் அமைச்சகம் கருதுவதாக அமைச்சகத் தின் அலுவலர் ஒருவர் தெரிவித்துள் ளார்.
தொழிலாளர் சட்டங்களில் சீரமைப் புத் திட்டத்தில் 300-க்கும் குறைவாக தொழிலாளர்கள் உள்ள நிறுவனங்கள் அரசின் அனுமதி இல்லாமல் தொழிலா ளர்களை பணியிலிருந்து நீக்கிவிடலாம். ஏற்கெனவே உள்ள தொழிலாளர் சட்டத்தின்படி, நூறு தொழிலாளர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட தொழி லாளர்களைக் கொண்டுள்ள தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களை வேலையைவிட்டு நீக்கவேண்டுமா னால் அரசின் அனுமதியைப் பெற வேண்டியது அவசியமாகும். ஆனால், சீரமைப்புத்திட்டத்தில் பணியிலிருந்து விலக்கப்படும் தொழிலாளர்களுக்கு மூன்று மடங்கு தொகுப்பு நிதியாக வழங்கிட வேண்டும் என்று உள்ளதாக அமைச்சக அலுவலர் கூறினார்.
தொழில் நிறுவனங்கள் நசிவடை யும்போது ஏற்படும் சிக்கல்களின் போதும், ஏற்கெனவே இருந்ததைவிட சிறிய நிறுவனமாக தக்க வைத்துக் கொண்டு தொடர்ந்து நடத்துவதற்கும், தொழில் நிறுவனங்கள் தொழிலாளர் களை பணியிலிருந்து வெளியேற்றுவ தற்கான அரசின் கட்டுப்பாடுகளைத் தளர்த்திடுமாறு நீண்டகாலமாகவே கோரி வந்துள்ளனர். தொழிலாளர் சட்டங்களில் சீரமைப்பு குறித்த ஆலோசனைகளை அளித்து வரும் தொழிலாளர் அமைச்சகத்தின் மூத்த அலுவலர் ஒருவர் கூறுகையில், தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளரின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் சமூகப்பாதுகாப்பு ஆகியவைகளை உறுதிப்படுத்தவும் தொழிலாளர் சட்டங்களில் சீரமைப்பு வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றார்.
அடுத்த மூன்று அல்லது நான்கு வாரங்களில் தொழிலாளர் சட்டங்கள் மீதான சீரமைப்பு வரைவு முழுமை யாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுவதாகவும், அதன்பின்னர் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப் பப்பட உள்ளதாகவும் அமைச்சகத்தின் அலுவலர் கூறினார்.
தொழிலாளர் சட்டங்களில் மாற்றங் கள் செய்ய உள்ள திட்டத்தை எதிர்த்து தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங் கங்கள் போராடலாம், வேலைநிறுத்தம் கூட செய்யலாம். ஆனால், இச்சீர மைப்புமூலமாக அனைத்து தொழிலா ளர்களுக்கும் குறைந்தபட்ச கூலி உறுதிசெய்யப்படும்.
பன்னாட்டு வங்கி இந்தியாவின் தொழிலாளர் நிலைகுறித்துக் குறிப்பிடும் போது, பன்னாட்டளவில் மற்ற நாடு களுடன் ஒப்பிடும்போது, தொழிலாளர் களிடையே பெரிய அளவிலான மாற் றங்களை செய்ய முடியாத நிலை உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. சீனாவு டன் ஒப்பிடும்போது, அந்த நாட்டில் 32 விழுக்காட்டினர் இருநூறாயிரம் கோடி அமெரிக்க டாலர் கொண்டுள்ள பெரும் பணக்காரர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் இந்தியாவில் 16 விழுக்காட் டினர் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டில் தொழில் ஆலோ சனை நிறுவனமாகிய மெக்கின்சி நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஆய்வில் 2009ஆம் ஆண்டில் இந்தி யாவில் 84 விழுக்காட்டினர் உற்பத்தி யாளர்கள் 50 பணியாளர்களை மட்டுமே பணியில் அமர்த்தி இருந்துள்ளனர். சீனாவுடன் ஒப்பிடுகையில் அது வெறும் 25 விழுக்காட்டளவுதான் என்று ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
பொருளாதார வல்லுநர்கள் குறிப் பிடும்போது, தற்போதைய தொழிலாளர் சட்டங் களில் சீரமைப்பு என்பதில் பெரிய அளவில் தேக்கநிலை உள்ளது. மோடி யின், மேக் இன் இந்தியா திட்டத்தில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ள 20 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அடுத்த 20 ஆண்டுகளில் எட்டுவதாகக்கூறுவதில் தேக்கநிலை உள்ளது.
இந்தியாவில் உள்ள தொழில் நிறுவனங்களில் எட்டு விழுக்காட்டினர் மட்டுமே நிரந்தரமான தொழிலாளர் களைக் கொண்டுள்ளனர். மற்றபடி, குறைந்த காலத்துக்கான ஒப்பந்தமுறைத் தொழிலாளர்களாகவே நடத்தப்பட்டு சமூகப் பாதுகாப்பினை குறைந்த அளவிலேயே பெறுகின்றனர்.
அரசியல்ரீதியிலான அழுத்தங் களின் வாயிலாக உரிய பாதையை அமைத்தால்தான் தொழிலாளர் சட்டங் களில் மாற்றங்களை ஏற்படுத்தும் சட்ட சீரமைப்புக்கான முன்வரைவை துரிதப் படுத்த முடியும்.
யூரோசியா தொழில் ஆலோசனைக் கான நிறுவனத்தின் இயக்குநர் கில் பிந்தர் தோசாஞ்ச் கூறுகையில், அவர்கள் அறிமுகப்படுத்தலாம், ஆனால், செயலாக்கம் என்பதில் மிகுந்த சுணக்கம் இருக்கும் என்றார்.
-விடுதலை,18.6.15