வெள்ளி, 15 மே, 2015

ஒரு கோடி கையெழுத்து இயக்கம் வங்கிப் பணியாளர்கள் கூட்டமைப்பின் சமூக நீதி கொள்கைக்கு தமிழர் தலைவர் ஆதரவு


சென்னை, ஏப். 29_ வங்கி பணியாளர்கள் கூட்ட மைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை தடை செய்யக் கோரியும், சுமார் 2.60 லட்சம் கோடி வாராக் கடனை வசூல் செய்ய வலியுறுத்தியும் மக்களுடைய பணம் சுமார் 90 லட்சம் கோடி சேமிப்புக் கணக்கில் உள்ளபடியால் வங்கிகளை தனியார்
மயமாக்கக் கூடாது, மேலும்
1. பொதுத்துறை வங்கிகளை வலிமைப்படுத்துக.
2. பொதுத்துறை வங்கிகளுக்கு உரிய மூலதனம் வழங்குக.
3. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க வேண்டாம்.
4. வங்கித்துறையில் அந்நிய முதலீட்டினை அனுமதிக்க வேண்டாம்.
5. வங்கிகளில் மக்கள் நல சேவைத் திட்டங்களை குறைக்காதே.
6. விவசாயம் மற்றும் முன்னுரிமை கடன் திட்டங்களுக்கு மேலும் கடன் வழங்குக.
7. வங்கிச் சேமிப்பிற்கு வட்டி விகிதத்தினை அதிகப்படுத்துக.
8. பெரு முதலாளிகள் வங்கிகள் துவங்க அனுமதிக்க வேண்டாம்.
9. சிறிய தனியார் மற்றும் பேமென்ட் வங்கிகளை ஊக்குவிக்க வேண்டாம்.
10. நாடு முழுவதும் மேலும் பல பொதுத் துறை வங்கிக் கிளைகளைத் திறந்திடுக.
11. அனைத்துத் தனியார் வங்கிகளையும் பொதுத்துறை வங்கிகளாக மாற்றிடுக.
12. ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைக்காதே.
13. பிராந்திய கிராம வங்கிகளை தனியார் மயப்படுத்த வேண்டாம்.
14. பிராந்திய கிராம வங்கிகளை அவற்றின் ஸ்பான்சர் வங்கியுடன் இணைத்திடுக.
15. கூட்டுறவு வங்கிகளுக்கு புத்துயிரூட்டி வலிமைப்படுத்துக.
16. வங்கிக்கடன் திருப்பிச் செலுத்தாதோர் பட்டியலை வெளியிடுக.
17. வாராக் கடனை வசூலிக்க கடுமையான சட்டங்களை இயற்றிடுக.
18. வங்கிக் கடனைத் திரும்பிச் செலுத்தாமையினை கிரிமினல் குற்றமாக அறிவித்திடுக.
19. வங்கிச் சேவையினை மக்களின் அடிப்படை உரிமையாக்குக.
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் நலம் பேணும் வங்கித் துறை கொள்கைகள் வளமான இந்தியாவை உருவாக்கவும் நமது நாட்டின் வங்கிகள் மேலும் வலுப்பெறவும்,
நாட்டின் பொருளாதார வளச்சிக்கும் சாதாரண மக்களுக்கு வங்கிச் சேவைகள் சென்றடையவும் மேற்கண்ட கோரிக்கைகளை மக்கள் ஆதரிக்கும் வண்ணம் ஏப். 20ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை ஒரு கோடி கையெழுத்துப் பெற்று அவற்றை பிரதமர் அவர்களுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அகில இந்திய வங்கி பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம் இன்று காலை (29.4.2015) திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து பயனாடை அணிவித்து தமது கோரிக்கைகளை முன்வைத்தார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சமூகநீதியின் அடிப்படையில் என்றைக்கும் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அந்த வகையில் உங்களது கோரிக்கைகளுக்கு எங்களது ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு கையொப்பம் இட்டார்.
உடன் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இ.அருணாச்சலம், செயலாளர் ஆர்.விஜயகுமார், இணைச் செயலாளர் சஙகரவடிவேலு, மத்திய குழு உறுப்பினர் வெ.பாண்டு, அலுவலக பணியாளர் தென்சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

-விடுதலை,29.4.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக