வெள்ளி, 11 ஜனவரி, 2019

துபாயில் 2019 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு இரண்டு மடங்கு தேசியமயமாக்கப்படும் ஆட்சியாளர்கள் அறிவிப்பு

துபாய், ஜன.11 2019 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு இரண்டு மடங்கு தேசியமய மாக்கப் படும் என்று துபாயின் ஆட்சியாளர் கூறி உள்ளார். இதனால் இந்திய தொழிலா ளர்களின் வேலை வாய்ப்பு களுக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
வளைகுடா அரபு நாடு களில் வேலைகள் தேசியமய மாக்கப்படும் விகிதம் அதி கரிப்பு  இந்திய தொழிலாளர் களுக்கு  நேரடி அச்சுறுத்த லாக உள்ளது.
சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகியவற்றை தொடர்ந்தது  2019 ஆம் ஆண்டில் மேலும் வேலைவாய்ப்புகள் தேசியமயமாக்கப்படும் என்று துபாயின் எமிரேட் கூறியுள்ளது.
2018 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புகளை தேசியமயமாக்குவது துபாயில் 200 சதவிகிதம் அதிகரித்துள்ளது என அய்க்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் மற்றும் பிரதமர்  ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தும் ட்விட்டரில் கூறியுள்ளார்.
இன்று நான் அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன். அதில் 2018 ஆம் ஆண்டின் விளைவு மற்றும் 2019க்கான திட்டத்தை நாங்கள் ஆய்வு செய்தோம். 2018 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புகளின் உள்ளூர்மயமாக்கல் 200 சதவிகிதம் அதிகரித்தது. 2019 ஆம் ஆண்டில் அதனை இரட்டிப்பாக்க நாங்கள் முயற்சி செய்வோம் என ட்விட்டரில் கூறி உள்ளார்.
அய்க்கிய அரபு அமீரகத்தில் சுமார் 20 லட்சம்  இந்தியர்கள்  வாழ்க்கை மற்றும் வேலை செய்து வருகின்றனர். துபாயின் ஆட்சி யாளர்கள் 1999ஆம் ஆண்டில்  வேலைவாய்ப்பை தேசியமயமாக்கல்  ஆரம்பித் திருந்த போதிலும், அது பல ஆண்டுகளாக அது குறைந்தபட்சமாக இருந்தது.
இருப்பினும் 2008 நிதியியல் நெருக்கடி, பொருளாதாரத்தை பரவலாக்குவதற்கும், தனியார் துறைகளில் வேலைகளை தேர்ந் தெடுப்பதற்கும் அதிக விகிதம் வேலைவாய்ப்பு தேசியமயமாக்கப் பட்டது. வளைகுடா அரபு குடிமக்கள் குறைந்த  ஊதியங்கள் மற்றும் கடுமையான வேலை போன்ற காரணங்களால் தனியார் துறைகளில் சேர விரும்பவில்லை.
- விடுதலை நாளேடு, 11.1.19

வியாழன், 10 ஜனவரி, 2019

பொது சேமநலநிதி கணக்கை புதுப்பிப்பது எப்படி?

மும்பை, ஜன. 8- எதிர்­கால பாது­காப்­பிற்கு உத­வக்­கூ­டிய, பி.பி. எப்., எனப்­படும் பொது சேம­நல நிதி, பர­வ­லாக நாடப் ­படும், முத­லீட்டு வாய்ப்­பாக இருக்­கிறது.
பொது சேமநலநிதி முத­லீட்­டின் முக்­கிய அம்­சங்­களில் ஒன்று, ஆண்­டு­தோ­றும் குறைந்த பட்­சம், 500 ரூபா­யா­வது இந்த கணக்­கில் செலுத்தி வர வேண்­டும் என்­ப­தா­கும். இவ்­வாறு ஓராண்­டுக்கு மேல் குறைந்த பட்ச தொகை செலுத்த தவ­றி­னால், அந்த, பி.பி.எப்., கணக்கு செய­லி­ழந்­த­தாகி விடும்.
பொது சேமநலநிதி கணக்கு செய­லி­ழக்­ கா­மல் இருக்க, மறக்­கா­ மல் ஆண்­டு­தோ­றும் குறைந்த பட்ச தொகையை செலுத்த வேண்­டும். கணக்கு செய­லி­ழப்­ப­தால், அது­வரை முத­லீடு செய்த தொகையை இழக்­கும் நிலை ஏற்­ப­டாது. ஆனால், அதில் தொடர்ந்து பணம் செலுத்த முடி­யாது.
மேலும், கணக்கு செய­லி­ழந்­தால், பொது சேமநலநிதி தொடர்­பான சலு­கை­க­ளை­யும் பெற முடி­யாது. உதா­ர­ண­மாக, உறுப்­பி­னர்­கள் கணக்கு துவங்­கிய மூன்­றாம் ஆண்டு முதல் ஆறாம் நிதி­யாண்டு வரை, 25 சத­வீத தொகையை கட­னாக பெற்­றுக்­கொள்­ள­லாம். கணக்கு செய­லி­ழந்­தால் இந்த வசதி கிடை­யாது.
அதே­போல், ஏழாம் நிதி­யாண்டு நிறை­வுக்­குப்­பின், பகுதி அளவு தொகையை விலக்கிக் கொள்­ளும் வச­தி­யை யும் பயன்படுத்த முடியாது. முன்­கூட்­டியே கணக்கை முடித்­துக்­கொள்­ள­வும் அனு­மதி இல்லை.
ஆனால், செய­லி­ழந்த, பொது சேமநலநிதி கணக்கை புதுப்­பித்­துக்­கொள்­ள­லாம். சம்­பந்­தப்­பட்ட வங்கி கிளை அல்­லது அஞ்­சல் அலு­வ­லகத்­தில் எழுத்து வடி­வில் இதற்­கான கோரிக்­கையை அளிக்க வேண்­டும். அதோடு, கணக்கு செய­லி­ழந்த காலத்­திற்­கான குறைந்­த­பட்ச தொகையை அபராதத்­து­டன் செலுத்த வேண்­டும். அதன் பிறகு கணக்கு சரி­பார்க்­கப்­பட்டு, மீண்­டும் இயக்க அனு­ம­திக்­கப்­படும்.
- விடுதலை நாளேடு, 8.1.19

ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும் சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை

சிவகங்கை, ஜன. 8- சிவகங்கை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் சிவகங்கையில் மாவட் டத் தலைவர் கண்ணுச்சாமி தலைமையிலும் செயலாளர் சீமைச்சாமி முன்னிலையில் நடந்தது.
கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் காலிபணியி டங்களை நிரப்பாததால் பணிப்பளு உள்ளது. எனவே உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியிட மாறுதல்வழங்க வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும். வாரிசு பணியை தாமதம் இன்றி வழங்க வேண்டும். மாத முதல் தேதியில் ஓய்வூதியம், முன் மானியம் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும்.
அமைப்பாளர், சமையலர், உதவியாளர் இல்லாத மய்யங் களில் தற்காலிக ஊழியர்களை நியமிக்க வேண்டும். கோரிக் கைகளை நிறைவேற்றாவிட் டால் பட்டினிப் போராட்டம் நடத்தப்படும். ஒரு மாத ஊதியத்தை பொங்கல் ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர் மானங்களாக நிறைவேற்றப் பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் பானுமதி நன்றி கூறினார்.
- விடுதலை நாளேடு,8.1.19

சனி, 5 ஜனவரி, 2019

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து ஜனவரி 8,9 பொது வேலை நிறுத்தம்: தொழிலாளர்கள் தேசிய மாநாடு அறிக்கை

சென்னை, டிச.30 மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத,தேச விரோதக் கொள்கைகளைக் கண்டித்து 2019 ஜனவரி8,9 ஆகிய இரண்டு நாட்கள் பொது வேலைநிறுத்தம் செய்ய இந்தியத் தொழிலாளர்களின் தேசிய மாநாடு அறை கூவல் விடுத்தது.

அனைத்துத் தொழிலாளர் களுக்கும் மாதம் ரூ.18,000 க்கு குறையாத சம்பளம், 58 வயதான அனைவருக்கும் 6ஆயிரம் ரூபாய்க்கு குறையாத மாத ஓய்வூதியம், காண்ட்ராக்ட், அவுட்சோர்சிங் முறைகளை ஒழித்தல், தொழிலாளர்சட்டங்களை முத லாளிகளுக்கு சாதகமாக திருத்துவதை கைவிடுதல், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், பணிக்கொடையை அதிகரித்தல், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களைத் தனி யாருக்கு விற்பதைநிறுத்துதல் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறு கிறது.வேலைநிறுத்தத்திற்கு தொழிலாளர் களை ஆயத்தப்படுத்த தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டாக கருத்தரங்குகள் நடைபெற்றுள்ளன.

சென்னையில் டிசம்பர் 14ஆம் தேதியும், மதுரையில் டிசம்பர்18ஆம் தேதியும் பெரும் திரளான மாநில மாநாடுகளும் நடந்தன.

வேலைநிறுத்தத் கோரிக்கைகளை விளக்கி ஆலைவாயில் கூட்டங்கள், சங்கப் பேரவைகள், தெருமுனைக் கூட்டங்கள், பரப்புரைப் பயணங்களும் இரண்டு மாதங் களாக நடந்து வருகின்றன. தொழிற் சாலைகளுக்கு வேலைநிறுத்த முன்னறிவிப்புகள் முறையாகத் தரப்பட் டுள்ளன. பலலட்சக்கணக்கான துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், பதாகைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேற்கண்ட பணிகளை நிறைவேற்றிய, பங்கெடுத்த தொழிற்சங்கத் தலைவர்கள், தொழிலாளர்களைப் பாராட்டி வாழ்த்து கிறோம். 2019 ஜனவரி 8,9 தேதிகளில் தமிழகத்திலுள்ள பஞ்சாலைகள், பின்ன லாடை நிறுவனங்கள், போக்குவரத்துக் கழகங்கள், ஆட்டோ, வேன், டாக்ஸி, லாரி, பீடி, சிமெண்ட், சர்க்கரை, இஞ்சினியரிங், சிவில் சப்ளை, மின்சாரம், டாஸ்மாக், காகிதத் தொழிற்சாலைகள், வங்கிகள், காப்பீட்டுநிறுவனங்கள், உள் ளாட்சிகள், மத்திய, மாநில அரசுப்பணிகள் தொலைத் தொடர்பு உள்ளிட்ட அனைத்துத் தொழில்களிலும் முழுமையான வேலை நிறுத்தம் நடைபெறும்.இதே நாட்களில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடத் தொழிலாளர்களும், உடலுழைப்புத் தொழி லாளர்களும் வேலைநிறுத்தம் செய்கின் றனர்.

அவர்களின்பங்கெடுப்பை வெளிக் காட்டுவதற்காக ஜனவரி 9ஆம்தேதி மாவட்ட தலைநகரங்கள் மற்றும் தொழில் மய்யங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.  மறியல் நடைபெறும் நேரம் மற்றும் இடங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொழிற்சங்க கூட்டுக்குழு முடிவுசெய்யும்.

இந்த மறியலில் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களும் பங்கேற்பார்கள்.உள்நாட்டு, வெளிநாட்டுகார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு முகவர்களாகி, இந்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை அழித்து, தொழிலாளர்களையும் விவசாயி களையும் சீரழிக்கிற மத்திய, மாநில அரசு களைக் கண்டித்து நடைபெறும் பொது வேலை நிறுத்தம், மறியல் போராட்டங்கள் வெற்றிபெற அனைத்துப் பொது மக்களும், வெகு மக்கள் அமைப்புகளும் ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள் கிறோம்.

- விடுதலை நாளேடு, 30.12.18