வியாழன், 14 மார்ச், 2024

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பூங்காக்களை பராமரிக்கும் பணி நியமன ஆணைகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் Published March 6, 2024

 

Published March 6, 2024, விடுதலை நாளேடு

சென்னை,மார்ச் 6 – மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்கா பராமரிப்புக்கான ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கமான நகர்ப்புறங்களில் உள்ள ஏழைகளை கொண்டு சுய உதவிக்குழுக் கள் மற்றும் கூட்டமைப்புகளை அமைத்து, அவற்றின் உறுப்பினர்க ளுக்கு தொழிற் பயிற்சிகள், வங்கிக் கடன் இணைப்புகள் போன்ற வற்றை பெற்று தந்து அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் முதன்முறை யாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் உருவாக்கப்பட்ட 51 பூங்காக்களை தேர்வு செய்து, அவற்றினை பராம ரிப்பதற்காக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் தகுதி வாய்ந்த, ஆர்வம் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, பூங்காக்கள் பராமரிப்பு முறைகள், நீர்நிலை மேலாண்மை, விளை யாட்டு சாதனங்களை பராமரித் தல், நர்சரி மேம்பாடு போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு, பராம ரிப்பிற்கான உபகரணங்கள், சான்றி தழ், கையேடுகள் போன்றவை வழங்கப் பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் வாயி லாக சுமார் 500 சுய உதவிக் குழுவி னரின் குடும்பங்கள் நேரடியாக பயனடைவர். இந்த திட்டத்தை துவக்கி வைக்கும் வகையில் முதற் கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 6 பூங் காக்களை பராமரிக்கும் பணிக் கான ஆணை மற்றும் உபகரணங் களை நகர்ப்புற சுய உதவிக் குழுக்களி டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 4.3.2024 வழங் கினார்.

நிகழ்ச்சியில், சென்னை மாநக ராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநக ராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் செந் தில்குமார், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவ னத்தின் மேலாண்மை இயக்குநர் திவ்யதர்சினி, செயல் இயக்குநர் ஸ்ரேயா பி சிங் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ‘மேலும் ஒரு மாத அகவிலைப்படி’ உயர்வு

 Published March 7, 2024,விடுதலை நாளேடு

சென்னை, மார்ச் 7 பணியில் உள்ள ஊழியர்களுக்கு நிலு வையில் உள்ள மேலும் ஒரு மாத அகவி லைப்படி உயர்வு வழங்கப்படும் என முத்தரப்பு பேச்சுவார்த்தையில் போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

அரசு போக்குவரத்துக் கழகங் களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை நிதி நிலை அறிக்கையில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதி யர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஅய்டியு, ஏஅய் டியுசி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, அய்என்டியுசி, டிடி எஸ்எஃப், உள் ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த தாக்கீடு வழங்கியிருந்தன.

இதுதொடர்பாக நடந்த பலகட்ட சமரசப் பேச்சு வார்த்தை களில் உடன்பாடு ஏற்படாததை யடுத்து ஜன.9, 10ஆ-ம் தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வேலைநிறுத் தம் கைவிடப்பட் டது. இதற்கி டையே, சென்னை தேனாம்பேட்டையில், தொழி லாளர் துறை தனி இணை ஆணையர் எல்.ரமேஷ் முன்னி லையில் 7-ஆம் கட்ட பேச்சு வார்த்தை நேற்று நடை பெற்றது.

செய்தியாளர்களிடம் சிஅய்டியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறும்போது, பணியில் உள்ள ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள மேலும் ஒரு மாத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தெரிவித் துள் ளனர். அந்த அகவிலைப்படி உயர்வை ஓய்வு பெற்றவர்களுக் கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். மற்ற கோரிக்கைகள் அரசின் பரிசீ லனையில் இருப்ப தாக தெரிவித்தனர். இதில் எங்களுக்கு திருப்தியில்லை.

எத்தனை காலத்துக்குதான் அவர்கள் பரிசீலித்துக் கொண்டிருப் பார்கள். தேர்தல் அறிவிப்பு வெளியானால் நடத்தை விதி களை காரணம் காட்டி எதை யுமே வழங்க முடியாத நிலை ஏற்படும். புதிதாக எந்த முன் னேற்றமும் இல்லை. இடைக் கால நிவாரணத்தை யாவது ஒரு வாரத்துக்குள்ளாக அறி விக்க வேண்டும் என வலி யுறுத்தினோம். ஓய்வூதியர்களின் மருத்துவக் காப்பீட்டுக்கு ரூ.497 கட்ட வேண்டிய இடத்தில் ரூ.1,112 செலுத்த வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள் ளது. இது ஓய்வூதியர்களை வஞ் சிக்கக் கூடிய செயல் என்றார்.
அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் கூறும்போது, முதன்மை கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. தேர்தல் அறிவிப்புக்கு முன் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும். இல்லா விட்டால் இடைக்கால நிவா ரணம் ரூ.5 ஆயிரமும், ஓய்வூதியர்களுக்கு நிலுவை அகவிலைப்படி உயர் வும் வழங்க வேண்டும் என கோரியுள்ளோம்.

11-ஆம் தேதிக்குள் முடிவு சொல்லவில்லையெனில், எங் களது கூட்டமைப்பு சார்பில் அடுத்தகட்ட போராட்டத்தை தொடங்குவோம். ஓய்வு பெற்ற வர்களுக்கான பணப்பலன் வழங்குவதற்காக நிதி திரட் டப்படுவதாக தெரிவித்துள் ளனர் என்றார்.

சனி, 9 மார்ச், 2024

ஓய்வு பெற்ற இஎஸ்அய் காப்பீடுதாரர்களுக்கும் மருத்துவப் பலன்கள் நீட்டிப்பு

 


விடுதலை நாளேடு

இஎஸ்அய் கார்ப்பரேஷனின் 193ஆவது கூட்டம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் மருத்துவ உதவிகளை மீட்பது குறித்து விவாதித்தது.

இஎஸ்அய் காப்பீடுதாரராகவே ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு இப்போது மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது. மாதம் 21 ஆயிரம் ரூபாய்வரை ஊதியம் பெறுபவர் மட்டுமே இஎஸ்அய் காப்பீடுதாரராக இருக்க முடியும்.
அந்த உச்சவரம்பைத் தாண்டி ஊதியம் உயர்ந்ததால், திட்டத்திலிருந்து விடுபட்டு, அதன் பிறகு ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் பொருந்தும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே மருத்துவத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
1.4.2012க்குப் பிறகு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஎஸ்அய் காப்பீடு உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
1.4.2017 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வு – விருப்ப ஓய்வு பெற்று இருக்க வேண்டும்.
ஓய்வு பெறும் போது ரூபாய் 30 ஆயிரத்துக்கு மேற்படாமல் ஊதியம் பெற்றிருக்க வேண்டும்.

சலவைத் தொழிலாளர்களுக்கு “கியாஸ் இஸ்திரி பெட்டி”


விடுதலை நாளேடு

 சலவைத் தொழிலாளர்களுக்கு “கியாஸ் இஸ்திரி பெட்டி” முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, மார்ச்.9- சலவைத் தொழிலாளர் களுக்கு எல்.பி.ஜி. கியாஸ் மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சுற்றுச்சூழலுக்கு கேடு

சலவை தொழிலாளர்கள் கரிக்கட்டை மூலம் பித்தளை இஸ்திரிபெட்டியால் துணிம ணிகளை தேய்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இந்த தொழிலில் கரிக்கட்டை பயன்படுத்துவதால் தொழிலாளர்கள் சுவாசப் பிரச்சினை பாதிப்பை எதிர் கொள்ள வேண்டி உள்ளது. மேலும் சுற்றுச் சூழலுக்கும் கேடு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்தியன் ஆயில் நிறு வனம் எல்.பி.ஜி. கியாஸ் மூலம் இஸ்திரி போடும்வகை யில் நவீன தொழில்நுட் பத்தை புகுத்தியது.

ரூ.29 லட்சத்து 93 ஆயிரம் …

இதனையடுத்து தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட் டோர், மிக பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சலவை தொழிலை மேற் கொள்ளும் தொழிலாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.29 லட்சத்து 93 ஆயிரத்து மதிப் பீட்டில் 500 எல்.பி.ஜி.இஸ்திரி பெட்டிகளை இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் வாங்கியது.
இதில் முதற்கட்டமாக 75 தொழிலாளர் களுக்கு இந்த இஸ்திரிபெட்டி வழங்கப்பட் டது. இந்த திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக சென்னை தலைமை செயலகத்தில் நேற்று (8.3.2024) நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் 10 தொழிலாளர்களுக்கு எல்.பி.ஜி. கியாஸ் மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டி களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் துறை யின் அமைச்சர் ராஜகண் ணப்பன் உள்ளிட்டோர் கலந் துகொண்டனர்.

தமிழறிஞர்களுக்கு குடியிருப்புகள்

இதேபோல் தமிழ் வளர்ச் சித்துறை சார்பில் கனவு இல் லத் திட்டத்தின் கீழ் 10 தமிழ றிஞர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளையும், 2 தமிழறிஞர்களுக்கு குடி யிருப்புக்கான நிர்வாக அனுமதி ஆணை களையும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமி நா நாதன், தமிழ் வளர்ச்சிமற்றும் செய்தித்துறை செயலாளர் இல.சுப்பிர மணியன் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் டாக்டர் இரா. வைத்திநாதன், தமிழ் வளர்ச் சித்துறை இயக்குநர் அவ்வை அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.