செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

அரசுப் பேருந்துகளில் கடவுளர் படங்களை அகற்றிவிட்டு திருவள்ளுவர் படம்

திராவிடர் தொழிலாளர் சங்கக்கூட்டத்தில் தீர்மானம்!!

காரைக்குடி, பிப். 9- காரைக் குடி என்.ஆர்.சாமி மாளிகை கட்டடத்தில் பிப். 2ஆம் நாள் செவ்வாய் கிழமை யன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி திராவிட மணி தலைமையிலும், மாவட்டக் கழகத் தலைவர் ச.அரங்கசாமி முன்னிலை யிலும் தி.தொ.ச. மண்டலக் கூட்டம் நடந்தது.
பேரவைத் தலைவர் அ.மோகன் பொதுச் செய லாளர் பெ.செல்வராஜ் ஆகி யோர் சிறப்புறையாற்றி னார்கள். தேவக்கோட்டை ஒன்றியத் தலைவர் கொ.மணிவண்ணன், நகர கழகச் செயலாளர் பெ.செகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத் தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விரைவுப் போக்குவரத்துக் கழக அனைத்துப் பேருந் துகளிலும் திருவள்ளுவர் படமும், திருக்குறளும் காணப்படாமல், அரசு விதிகளுக்கு மீறி கடவுள் படங்களும், வாசகங்களும் ஸ்டிக்கர்களாக ஒட்டப்பட் டுள்ளதை அகற்றிவிட்டு, மீண்டும் திருக்குறளும் திருவள்ளுவர் படங்கள் மட்டுமே புதிதாக பொருத் தப்பட வேண்டும்.
2) அரசுப்போக்குவரத் துக் கழக கும்பகோணம் கோட்டம் தற்போது விரிந்து மேலும் பல கிளைகள் உருவாக்கியதால் நிர்வாகம் செய்வதில் தகவல் பரிமாற்றம், நிர்வாக நிலைப்பாடு போன்றவை யில் கால விரயம் மற்றும் சிரமங்கள் இருப்பதை மாற்றி சீராக இயங்கிட கும்பகோணம் கூட் டாண்மை அலுவலகத்தில் உள்ள கரூர், திருச்சி, நாகப் பட்டணம், கும்பகோணம், புதுக்கோட்டை, காரைக் குடி மண்டலங்கள் உள் ளது. இதில் மேலும் இராம நாதபுரம் பகுதியை  ஒரு புதிய மண்டலமாக்கிவிட்டு மறுபடியும் காரைக்குடி மண்டலத்தை புதிதாக கோட்ட மேலாண்மை அலுவலகமாக்க வேண்டும்.
3) காரைக்குடி மண்ட லத்திலுள்ள 68 தொழி லாளர்களிடம் வீடுகட்டும் சங்கம் சார்பில் முத்துப் பட்டி கிராமத்தில் வீட்டு மனை ஒதுக்கீடு செய்ய ரூபாய் 25 ஆயிரம் பெற்று பாண்டுபத்திரம் வழங்கியதற்கு 6 வருடமா கியும் வீட்டுமனை வழங் கப்படாமல் உள்ளதற்கு நிர்வாகம், தொழிலாளர் சங்கம் இணைந்து ஒருங் கிணைப்புக் குழு அமைத்து தீர்வு காணப்பட வேண்டும்.
4) போக்குவரத்துக்கழக ஊழியருக்கான மருத்துவ மனை காரைக்குடியில் செயல்படாமல் இருப்ப தால் தகுதியான மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர் களை நியமித்து மருத்துவ வசதியை ஏற்பாடு செய்க. ஊதிய ஒப்பந்தத்தில் ஏற் றுக்கொண்ட டிஎம்இ, பிஇ பட்டப்படிப்புள்ள பராமரிப்பு பணியாளர் களுக்கு ஜேஇ/ஏஇ பதவி உயர்வு வழங்கிட வேண் டும். மேலும் பல தீர்மா னங்கள் நிறை«ற்றப்பட் டன. மண்டலத் தலைவர் கோ.இராமசாமி நன்றி கூறினார்.
-விடுதலை,9.2.16

திங்கள், 8 பிப்ரவரி, 2016

கோத்ரேஜ் தி.தொ.க.பொறுப்பாளர்-2016




07.02.16 முற்பகல்11.00மணி அளவில் சென்னை அசோக் நகர் உவமைக் கவிஞர் சுரதா சிலை அருகில் உள்ள தந்தை பெரியார் நினைவு சுயமரியாதை சுடர் பூங்காவில் கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க 2016ம் ஆண்டுக்காண புதிய பொறுப்பாளர் தேர்வு நடைபெற்றது.
2016ம் ஆண்டுக்காண புதிய பொறுப்பாளர்
தலைவர் - த.ரமேஷ்
செயலாளர் - செ.ர.பார்த்தசாரதி
பொருளாளர் - கா.நாகராஜ்
துணைத் தலைவர் - கோ.குமாரி
துணைச் செயலாளர்- 1.கோ.கணேஷ்,2.ம.கருணாநிதி
செயற்குழு உறுப்பினர்கள்
1.வ.வசந்தி
2.எம்.கே.சூரியகலாவதி
3.கே.சிவகாமி

வியாழன், 4 பிப்ரவரி, 2016

க.தமிழினியன்¢ பணிநிறைவு பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்று வாழ்த்து



சென்னை, பிப். 3- திராவிடர் தொழிலாளர் கழகத்தின் செயலாளர் க.தமிழினியன் பணிநிறைவு பாராட்டு விழா மற்றும் அவர் எழு திய தமிழ் தமிழர் தமிழ் நாடுÕ என்ற புத்தகம் வெளி யீட்டு விழா 31.1.2016 அன்று காலை அன்னை மணியம் மையார் அரங்கத்தில் நடை பெற்றது.
எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பயிற்சியாளராக சேர்ந்து பணிநிறைவின்போது தர ஆய்வாளராக பணியாற்றி யவர் க.தமிழினியன். அசோக் லேலண்ட் நிறுவனத்தில் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் செயலாளராக தொடர்ந்து பணியாற்றி வந்தவர் ஆவார்.
விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் மாநில தொழி லாளர் அணி துணைத் தலைவர் பெ. செல்வராசு வரவேற்றார்.  தலைமை செயற்குழு உறுப்பினர் க. பார்வதி முன்னிலை வகித் தார்.
திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்கள், பணிநிறைவு பெற்ற தமிழினியன் மற்றும் அவர் வாழ் விணையர் சி.விஜயலட்சுமி இருவருக்கும் பயனாடை அணிவித்து பாராட்டி, சிறப்புரையாற்றினார்.  விழாவில் தமிழினியன் எழுதிய Ôதமிழ்_தமிழர்_தமிழ்நாடுÕ நூலை வெளியிட்டார். போக்குவரத்துத் துறை மேனாள் சார்புச் செயலாளர் சோ.ஆறுமுகம் பெற்றுக்கொண்டார்.
க.தமிழினியன் பணி நிறைவுவிழாவில் அசோக் லேலண்ட் சேமநலநிதி அறங்காவலர் எஸ். உமா காந்தன், அசோக் லேலண்டு தொழிலாளர் சங்க உப தலைவர் முருகப்பிரேமன்-, மேனாள் செயற்குழு உறுப் பினர்  சுரேஷ்குமார்-, அசோக் லேலண்ட் தொழிலாளர் நலமன்ற மேனாள் பொரு ளாளர் ராம்குமார், தொழி லாளர் நலமன்ற மேனாள் செயல்முறைத் தலைவர் சண்முகக்கனி-, தொழிலா ளர் நலமன்ற மேனாள் செயலாளர் வெங்கடேஷ் ராஜன், அசோக் லேலண்டு தொழிலாளர் கல்வி ஆசிரி யர் தமிழரசன்-, உரிமைக் குரல் இதழ் ஆசிரியர்குழு கி.சுரேஷ், அசோக் லேலண்டு திராவிடர் தொழிலாளர் கழக மேனாள் தலைவர் மதிவாணன், அசோக் லேலண்டு திராவிடர் தொழிலாளர்கழக மேனாள் செயலாளர் அறி வழகன், கருப்புச்சட்டைக் காரர் ஜம்புலிங்கனார் அவர்களின் மருமகனும்  நங்கநல்லூர் திராவிடர் கழகச் செயலாளர் பெ. மோகன், வடசென்னை மாவட்ட திராவிடர் கழ கத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், எழுத்தா ளர் கெஜராஜ், அசோக் லேலண்டு செயற்குழு உறுப் பினர் சதீஷ்குமார், வெற்றி வீரன், பணியாளர்கள் வி.எஸ்.பாண்டியன், உதய குமார், ஜெகன்னாதன் இராஜேந்திரன், இராம சாமி, இராஜ்குமார், லட் சுமி நரசிம்மன். வள்ளுவன், பக்கிரிசாமி உள்ளிட்ட பல ரும் விழாவில் குடும்பத்தின ருடன் பங்கேற்று வாழ்த் துரை ஆற்றினார்கள்.
விழாவில் பங்கேற்ற ஏராளமானவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளுக்கு  பயனாடை அணி வித்து மகிழ்ந்தனர்.
அசோக் லேலண்டு தொழி லாளர் நலமன்றத்தின் சார் பில் பி.கிருஷ்ணமூர்த்தி சண்முகக்கனி உள்ளிட்ட நிர்வாகிளும், மறுமலர்ச்சி தொழிலாளர் பேரவை சார்பில் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளும், நங்கைநல்லூர் திராவிடர் கழகம் சார்பில் பெ.மோகன் மற்றும் மணிவண்ணன் ஆகியோரும் சால்வை அணி வித்தனர்.
திராவிடர் தொழிலா ளர் கழக மேனாள் தலை வர் தி.வ.விசுவநாதன் நன்றி யுரை ஆற்றினார்.
-விடுதலை,3.2.16