ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

விபத்தில் உயிரிழக்கும் கட்டுமானத் தொழிலாளர் குடும்பத்திற்கு உதவித்தொகை

 


விடுதலை நாளேடு
தமிழ்நாடு

ரூ.8 லட்சமாக உயர்வு அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு

சென்னை, ஏப்.11- விபத்தில் உயிரிழக்கும் கட்டுமானத் தொழிலாளர் குடும்பத்திற்கு வழங்கும் உதவித்தொகை ரூ.8 லட்ச மாக உயர்த்தப் படுவதாக அமைச்சர் சி. வி. கணேசன் தெரிவித்தார்.

முதியோர் இல்லங்கள்

சட்டமன்றத்தில் தொழிலாளர் திறன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானிய கோரிக் கையின்போது அமைச்சர் சி.வி.கணேசன் புதிய அறிவிப்புகளை வெளி யிட்டார். அதன் விவரம் வருமாறு:-

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலா ளர்களின் திறனை மேம்படுத்த, கட்டுமான வேலை, கம்பி வளைப்பு வேலை,தச்சு வேலை, மின் பணியாளர் வேலை, பிளம்பர், வெல்டர், வர்ணம் பூசுதல், ஏசி மெக்கானிக், கண்ணாடி அறுத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட பல தொழில் இனங்களில் 7 நாட் கள் திறன் மேம்பாட்டு பயிற்சி, நாள் ஒன்றுக்கு ரூ.800 ஊதியத்து டன் 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.45 கோடியே 21 லட்சம் செலவில் வழங்கப்படும்.

கட்டுமானத் தொழி லாளர்கள் அவர்களது அன்றாடப் பணி தொடர்பாக அதிக அளவில் காலையில் கூடி காத்திருக்கும் இடங்களில், கட்டுமானத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், குடிநீர் மற்றும் இதர அடிப்படை வசதிகளுடன் கூடிய 50 வசதி மய்யங்கள் ரூ.20 கோடியே 25 லட்சம் செலவில் அமைக்கப்படும். ஆதரவற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்காக சென்னையில் 2 முதியோர் இல்லங்கள் தொடங்கப் படும்.

மரண உதவித் தொகை

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பணியிடத்து விபத்து மரண உதவித் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முறையான பட்டப்படிப்பு, முறையான பட்ட மேற் படிப்பு, தொழிற் கல்வி பட்டப் படிப்பு மற்றும் தொழிற் கல்வி பட்ட மேற்படிப்பு போன்ற உயர் கல்வி பயில தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை கூடுதலாக ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.

கல்வி உதவித் தொகை

பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர் களின் குழந்தைகளுக்கு பி.எச்டி. பயிலும்போது ஒரு கல்வி ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப் படும். இவ்வாறு அறிவிப்புகள் வெளியிடப் பட்டன.

 

வியாழன், 10 ஏப்ரல், 2025

10க்கும் மேற்பட்ட பெண்கள் பணி புரியும் நிறுவனங்களில் உள்ளக புகார் குழுவை அமைக்காவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்

 

விடுதலை நாளேடு

சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சென்னை, ஏப்.8 பத்துக்கும் மேற் பட்ட பெண்கள் பணி புரியும் அனைத்து நிறுவ னங்களிலும் உள்ளக புகார் குழுக்களை அமைக்க வேண்டும். அப்படி அமைக்காவிட்டால் அந்நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்

உள்ளூர் புகார் குழுக்கள்

பெண்களின் பாதுகாப் புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் மூலம் ‘உள்ளூர் புகார் குழு’ அமைக்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனம் போன்ற வற்றில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன் புறுத்தல்களை தடுக்க ‘உள்ளக புகார் குழுக்கள்’ அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இக்குழுவை குறைந்த பட்சம் 4 உறுப்பி னர்களை கொண்டு அமைக்க வேண்டும். அதில் 50 சதவீதம் பெண் உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு நிறுவனங்களி லும் பெண்கள் தங்களது பிரச்சினைகளை தெரிவிக்க புகார் பெட்டி ஒன்றையும் அமைக்க வேண்டும். புகார் பெறப்பட்டவுடன் உள்ளக புகார் குழு உறுப்பினர்களை கொண்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறை அறிக்கை

இந்த குழுவில் பதிவு செய்யப்படும் புகார் மற்றும் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அதேநேரம் புகார் குழுவை அமைக்காமல் இருந்தாலோ, புகாரின் அடிப்படையில் நடவ டிக்கை மேற்கொள்ளப் படாமல் இருந்தாலோ சம்பந்தப்பட்ட நிறுவ னங்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அந்நிறுவனங்களின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே, சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ளக புகார் குழுவை ஏற்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத் தியுள்ளார்.