
ரூ.8 லட்சமாக உயர்வு அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு
சென்னை, ஏப்.11- விபத்தில் உயிரிழக்கும் கட்டுமானத் தொழிலாளர் குடும்பத்திற்கு வழங்கும் உதவித்தொகை ரூ.8 லட்ச மாக உயர்த்தப் படுவதாக அமைச்சர் சி. வி. கணேசன் தெரிவித்தார்.
முதியோர் இல்லங்கள்
சட்டமன்றத்தில் தொழிலாளர் திறன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானிய கோரிக் கையின்போது அமைச்சர் சி.வி.கணேசன் புதிய அறிவிப்புகளை வெளி யிட்டார். அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலா ளர்களின் திறனை மேம்படுத்த, கட்டுமான வேலை, கம்பி வளைப்பு வேலை,தச்சு வேலை, மின் பணியாளர் வேலை, பிளம்பர், வெல்டர், வர்ணம் பூசுதல், ஏசி மெக்கானிக், கண்ணாடி அறுத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட பல தொழில் இனங்களில் 7 நாட் கள் திறன் மேம்பாட்டு பயிற்சி, நாள் ஒன்றுக்கு ரூ.800 ஊதியத்து டன் 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.45 கோடியே 21 லட்சம் செலவில் வழங்கப்படும்.
கட்டுமானத் தொழி லாளர்கள் அவர்களது அன்றாடப் பணி தொடர்பாக அதிக அளவில் காலையில் கூடி காத்திருக்கும் இடங்களில், கட்டுமானத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், குடிநீர் மற்றும் இதர அடிப்படை வசதிகளுடன் கூடிய 50 வசதி மய்யங்கள் ரூ.20 கோடியே 25 லட்சம் செலவில் அமைக்கப்படும். ஆதரவற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்காக சென்னையில் 2 முதியோர் இல்லங்கள் தொடங்கப் படும்.
மரண உதவித் தொகை
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பணியிடத்து விபத்து மரண உதவித் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முறையான பட்டப்படிப்பு, முறையான பட்ட மேற் படிப்பு, தொழிற் கல்வி பட்டப் படிப்பு மற்றும் தொழிற் கல்வி பட்ட மேற்படிப்பு போன்ற உயர் கல்வி பயில தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை கூடுதலாக ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.
கல்வி உதவித் தொகை
பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர் களின் குழந்தைகளுக்கு பி.எச்டி. பயிலும்போது ஒரு கல்வி ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப் படும். இவ்வாறு அறிவிப்புகள் வெளியிடப் பட்டன.