சனி, 7 செப்டம்பர், 2024

மருத்துவத்துறையில் 6,744 பேருக்கு பணி ஆணை தி.மு.க. அரசின் மூன்றாண்டு சாதனை!


விடுதலை நாளேடு

 எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி

சென்னை, செப்.7- மருத்துவத்துறையில் கடந்த 3 ஆண்டுகளில் 6,744 மருத்துவ பணியாளர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளதாக எடப் பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிர மணியன் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில்

கூறியிருப்பதாவது:-
தண்டனை இடமாற்றம்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு துறையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு பேசுவது அவசியம். கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு மருத் துவத்துறையில் பொறுப்பேற் கும் போது குளறுபடிகளும், குழப்பங்களும் மிகப்பெரிய அளவில் இருந்தது. 354 என்கின்ற அரசாணையை அமல்படுத்தக்கோரி மருத்துவர்கள் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நடத்திய போராட்டங்களை யாரும் மறுத்து விட முடியாது.
போராட்டங்கள் நடத்தினார்கள் என்பதற்காக 116 மருத்துவர்களுக்கு தண்டனை இடமாற்றத்தை தந்தனர். இதனால், லட்சுமி நரசிம்மன் என்ற மருத்துவர் மன அழுத்தத்தின் காரணமாக இறந்தே போனார். இதுவரை எந்த அரசும் செய்யாத ஒரு கொடும் காரியம் அது.

தி.மு.க. அரசு பொறுப் பேற்ற பிறகு 293, 354 ஆகிய 2 அரசாணைகள் பற்றி மருத்துவர்களுக்கு மாறுபட்ட கருத் துகள் இருந்தது. அந்த மாறுபட்ட கருத்துகளை களைவ தற்கு 2 சங்கங்களை கலந்து பேசி அவர்களுக்குள் ஒரு மித்த கருத்தை உருவாக்கி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
மேலும், முதல்முறையாக 1,021 மருத்துவர்களுக்கும், 977 செவிலியர்களுக்கும் முதல் பணியாணை தருகிற போதே கலந்தாய்வு நடத்தி அவர்கள் விரும்புகிற இடங்களுக்கு பணி ஆணை கள் தரப்பட்டது.

புதிய பணி ஆணை
கடந்த 20 நாட்களுக்கு முன்பு 946 மருந்தாளுனர்கள், 523 உதவியாளர்கள் என்று 1,523 பேருக்கு கலந்தாய்வு நடத்தி பணி ஆணைகளை தந்துள்ளோம். மேலும், மருத்துவ பணியாளர் தேர்வா ணையத்தின் சார்பில் 1,947 உதவி மருத்துவர்கள், 1,291இதர மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், 977 தற்காலிக செவிலியர்களை நிரந்தரப்படுத்தி ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளது.
இதேபோல. 946 மருந்தாளுனர்கள், 127 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் என்று 5,288 புதிய பணி நியமன ஆணைகள் தரப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மருத்துவத் துறைக்கு தேவையான இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள். சுகாதார ஆய்வாளர்கள் போன்ற பணியி டங்கள் 1,583 நிரப்பப்பட்டு உள்ளது.
மருத்துவத்துறையில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 6,744 மருத்துவத்துறை பணியாளர்களுக்கு புதிய பணி ஆணைகள் தரப்பட்டுள்ளது.
கலந்தாய்வுகளின் மூலம் இது வரை 12,147 மருத்துவர்கள், 9,535 செவிலியர்கள், 14,783 மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் என மொத்தம் 36,465 பேர் பணியிட மாற்றம் பெற்றுள் ளார்கள். இந்த தகவல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதை தெரிந்து கொள்ளாமல் பணி நியமனங்கள் இல்லை என்கின்ற ஒரு தவறான தகவலை தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி செய்திருப்பாரா?
எடப்பாடி பழனிசாமி 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இப்படி எத்தனை பணியிட மாற்றங்களை வெளிப்படையாக செய்துள்ளார் என்ற தகவலை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் உள்ள துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங் கள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. இதுபோல, ஏதாவது ஒன்றை தன்னுடைய ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி செய்திருப்பாரா என்று சொல்ல வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திங்கள், 2 செப்டம்பர், 2024

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பதினைந்தாவது ஊதிய உயர்வு ஒப்பந்தம் – பேச்சுவார்த்தை தொடக்கம்!

 

விடுதலை நாளேடு

சென்னை, ஆக. 28- தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் 15ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தையை அரசு தொடங்கி யுள்ளது. அடுத்தகட்ட பேச்சு வார்த்தையில் ஓய்வூதியர்களின் பிரச்சினையை பேச வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலி யுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1.08 லட்சம் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றுக்கு பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படுகிறது. அந்த வகையில் 15ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான முதல்கட்ட பேச்சு வார்த்தையானது, சென்னை, குரோம்பேட்டை, மாநகர போக்குவரத்துக் கழகப் பயிற்சி மய்ய வளாகத்தில் நேற்று (27.8.2024) நடைபெற்றது.

இதில், அரசு தரப்பில் போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, நிதித்துறைச் செயலர் அருண் சுந்தர் தயாளன், ஒப்பந்த கூட்டுநர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோரும், தொமுச, அண்ணா தொழிற்சங்கம், சிஅய்டியு, ஏஅய்டியுசி உள்ளிட்ட 84 தொழிற்சங்கங்கள் சார்பில் கி.நடராஜன், தர்மன், ஆர்.கமலகண்ணன், தாடி ம.இராசு, கே.ஆறுமுகநயினார், வி.தயானந்தம், ஆர்.ஆறுமுகம், முருகராஜ், கே.வெங்கடேசன், டி.வி.பத்மநாபன், திருமலைச் சாமி, வெ.அர்ச்சுணன் உள்ளிட் டோரும் பங்கேற்றனர்.

இதில் விவாதிக்கப்பட்டவை குறித்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:

“முதல்கட்ட பேச்சுவார்த்தை என்பதால் அறிமுகக் கூட்டமாக நடைபெற்றது. எனினும், சங்கங் களை வரன்முறைப்படுத்த வேண்டும் என்பதை பிரதான கோரிக்கையாக முன்வைத்தோம். பெரும்பான்மையான சங்கங்கள் கையெழுத்திட்டால் ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்படும் என்பது விதிமுறை. கடந்த முறை 60-க்கும் மேற்பட்ட சங்கங் கள் பேச்சு வார்த்தைv, தற்போது சங்கங்களின் எண்ணிக்கை 84ஆக உயர்ந்துள்ளது. எனவே, மாநில பிரதிநிதித்துவம் பெற்ற சங்கங்களுக்கு பேச கூடுதல் அவகாசம் வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை தொமுச உள்ளிட்ட சங்கங்கள் வலி யுறுத்தின.

இடைக்கால நிவாரணம் அறிவிக்க வேண்டும், அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளும் அண்ணா தொழிற் சங்கம் தலைமையிலான கூட்டமைப்பால் முன்வைக்கப் பட்டது. அடுத்தகட்ட பேச்சு வார்த்தைக்கு விரைவில் அழைப்பதோடு, அதில் முதன் மையாக ஓய்வூதியர்களின் அக விலைப்படி உயர்வு உள்ளிட்ட விஷயங்களை பேசி தீர்க்க வேண்டும் என சிஅய்டியு உள்ளிட்ட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வலி யுறுத்தப்பட்டது,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை குறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பேச்சு வார்த்தையில் பொது வான கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அடுத்த கூட்டங்களில் தொழிற்சங்கங்களின் கோரிக் கைகள் குறித்து விரி வாக விவாதிக்கப்பட்டு, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டு ஊதிய உயர்வு ஒப்பந்த உடன்படிக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறையின் சாதனைகள்!


விடுதலை நாளேடு

“காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் அவன்

காணத் தகுந்தது வறுமையாம்
பூணத் தகுந்தது பொறுமையாம்”

என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொழி லாளர்கள் வாழ்வின் அவல நிலையைச் சுட்டிக் காட்டி அவர்களின் தியாக உழைப்பைப் போற்றிப் பாடுவார். தொழிற் சாலைகளில் குறைந்த ஊதியத்தில் பல மணி நேரம் வேலை செய்திட வாட்டி வதைக்கப்பட்ட தொழிலாளர் சமுதாயம் எட்டு மணி நேர வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி இரத்தம் சிந்திப் போராடி, உயிர்ப் பலி தந்து தொழி லாளர் சமுதாயம் பெற்ற உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் நாள் தான் மே நாள்! திராவிட முன்னேற்றக் கழகம், தொழிலாளர்களை உயிராக மதிக்கும் இயக்கம்.
தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலா ளர்களின் நலம்நாடிப் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது.

தொழிலாளர் நலத் துறைக்குத் தனி அமைச்சகம்.

1969இல் முதலமைச்ச ராகப் பொறுப்பேற்ற கலைஞர் தலைமையில் அமைந்த திராவிட முன் னேற்றக் கழக அரசுதான் தொழிலாளர் நலனில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தனியே தொழிலாளர் நலத் துறையையும், தொழிலாளர் நல அமைச்சகத்தையும் ஏற்படுத்தியது

மே நாளுக்கு ஊதியத் துடன் விடுமுறை 1969ஆம் ஆண்டில் மே முதல் நாளை ஊதியத்துடன் கூடியபொது விடுமுறை நாளாக அறிவித்துச் சட்டம் இயற்றி தொழி லாளர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டது.
விவசாயத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சக்  கூலி நிர்ணயம்

1969-இல் கணபதியா பிள்ளை பரிந்துரையை ஏற்று, அவசரச் சட்டம் பிறப்பித்து விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்கப் பட்டது. பீடித் தொழில், பனியன் நெசவு, தோல் பதனிடும் தொழில், எண்ணெய் ஆலைகள், செங்கல் சூளை, உப்ப ளம் முதலியவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கப் பலம் இல்லாமையால் போதிய ஊதியம் வழங்கப்படாமல் அல்லல்பட்டு வந்த நிலைகண்டு அத்தொழி லாளர்களுக்குத் தொழில் முகவர்களிடம் பேசி அவர்களுக்கெல்லாம் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கச் செய்தது தி.மு.க. ஆட்சி.

விவசாயத் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு இலவச மனைப் பட்டா

விவசாய நிலங்களில் குடிசைகள் போட்டு வாழ்ந்த தொழிலாளர்கள் நிலச் சொந்தக்காரர்களால் எந்த நேரத்திலும் வெளி யேற்றப்படும் அவலமான சூழ்நிலையில் வாழ்ந்தனர்.

அவர்கள் நலன் காத்திட 1971இல் “குடியிருப்பு அனுபோக தாரர்கள் சட்டம்” கொண்டு வந்து 1 லட்சத்து 73 ஆயிரத்து 748 விவசாயத் தொழிளர் களுக்கு அவர்கள் குடியிருக்கும் வீட்டு மனை களை அவர்களுக்கே சொந்தமாக்கி இலவச மனைப் பட்டா வழங்கி மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டது.

நாங்கள் இரத்தம் சிந்தியும் நிறைவேற்ற முடியாத இந்தச் சாத னையை கலைஞர் ஒரே ஒரு சொட்டு மையினால் நிகழ்த்தியுள்ளார் என்று முதுபெரும் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் மணலி கந்தசாமி கலைஞரை பாராட்டினார்.

15 ஸ்டாண்டர்டு ஏக்கர் நில உச்ச வரம்புச் சட்டம்

15 ஸ்டாண்டர்டு ஏக்கர் நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வந்து, கிடைத்த உபரி நிலங்களை இலட்சக்கணக்கான ஏழை விவசாயத் தொழிலாளர் களுக்கு வழங்க வழிவகை செய்தது; தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல், “பணிக் கொடை” வழங்கும் திட்டம் கண்டது; விபத்து களால் பாதிக்கப்படும் தொழிலாளர்களைக் காப்பதற்காகத் தொழில் விபத்து நிவாரண நிதி திட்டம் உருவாக்கியது; குடும்பங்கள் கையினால் செய்யப்படும் தீப்பெட்டி மீதான 8 சதவீத விற்பனை வரியை ரத்து செய்து இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை தடுத்தது.

மே நாள் நூற்றாண்டு விழாவும் மே தினப் பூங்காவும்

மே நாள் நூற்றாண்டு விழாவினையொட்டி 1990இல் சென்னை நேப்பியர் பூங்காவிற்கு “மே தினப் பூங்கா” எனப் பெயர் சூட்டி, அங்கு மே தின நினைவுச் சின்னத்தை அமைத்தது முதலான பல்வேறு தொழிலாளர் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப் பட்டு வருகின்றன.

இந்த திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர்களின் தோழனாக பல்வேறு புதிய திட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளில் நிறை வேற்றி வருகிறேன்.

ரூ.1,551 கோடியில் 20 நல வாரியங்கள் மூலம் நலத் திட்ட உதவிகள்

20 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற 16 இலட்சத்து 499 உறுப்பினர்கள் புதிதாக பதிவு செய்யப் பட்டுள்ளனர். மொத்தம் 18 இலட்சத்து 46 ஆயிரத்து 945 தொழிலாளர்களுக்கு 1,551 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டுள்ளன.

ரூ.14.99 கோடியில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் நலத் திட்ட உதவிகள்
தமிழ்நாடு தொழிலா ளர் நல வாரியத்தின் மூலம் மட்டும் 26 ஆயிரத்து 649 தொழிலாளர்களுக்கு 14 கோடியே 99 இலட்சம் ரூபாய் மதிப் பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டுள்ளன.