சனி, 28 ஜனவரி, 2023

திராவிட தொழிலாளர் கழக ஆலோசனைக் கூட்டம்

 

தமிழர் தலைவர் தலைமையில் திராவிட தொழிலாளர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் 30.1.2023 அன்று சென்னை பெரியார் திடலில் சிறப்பாக நடத்துவது பற்றிய ஆலோசனைக் கூட்டம் மாநில செயலாளர் மு.சேகர் தலைமையில், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், திராவிட தொழிலாளர் கழகம் மற்றும் பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சங்க பொறுப்பாளர்களான தாம்பரம் ப.முத்தையன், குணசேகரன், மதுரை சிவகுருநாதன், வெ.மு.மோகன், தி.செ.கணேசன், செ.ர.பார்த்தசாரதி, அம்பத்தூர் இராமலிங்கம், க.சுமதி, மா.இராசு மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்தனர் (சென்னை பெரியார் திடல், 23.1.2023).


சனி, 14 ஜனவரி, 2023

ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம்!

 

முதலமைச்சர் அவர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ) நன்றி! 

சென்னை, நவ.4 பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதற்கு அடையாளமாக சென்னை தலைமைச் செயலகத்தில் 31.10.2022 அன்று ஓய்வுபெற்ற 7 பத்திரிகையாளர்களுக்கு அவர்   ஆணை களை வழங்கினார். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் கடந்த  25 ஆண்டுகளில், ஒரே நேரத்தில்  அதிகப் படியானோருக்கு வழங்கப்படுவது இது தான் முதல் முறையாகும். இதற்காக சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ) சார்பாக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தில் வரையறுக்கப் பட்டுள்ள பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு, வருமான உச்சவரம்பு ஏற்கெனவே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பத்திரிகையாளர்களின் ஓய்வூதிய விண்ணப் பங்களைப் பரிசீலிக்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும். பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் பெறுவதில் உள்ள முட்டுக்கட்டைகள் அகற்றப்படுவதுடன், ஓய்வுக் காலத்தில் பத்திரிகையாளர்களின் கண்ணியமான வாழ்வை உறுதிப்படுத்த முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். ஓய்வூ தியம் கோரி விண்ணப்பித்துள்ள பலருடைய விண்ணப் பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவற்றையும்  தமிழ்நாடு அரசு பரிசீ லித்து தீர்வு காண வேண்டும் என சென்னை பத்திரிகை யாளர் யூனியன் கேட்டுக்கொள்கிறது என எல்.ஆர்.சங்கர் (தலைவர்), மணிமாறன் (பொதுச் செயலாளர்)  சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ). தெரிவித்துள்ளனர்.

ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்

 

சென்னை, நவ.2- ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியத்துக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு  வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டில் முதல்முறையாக, உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மேலும்,பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று 2021-_2022-ஆம் ஆண்டுக்கான செய்தி, விளம்பரத் துறை மானியக் கோரிக் கையில் அறிவிக்கப்பட்டு, அதன்படி நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் நலனில் அதிக அக்கறை கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, பணிக்காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர் களின் குடும்பங்களுக்கு முதல மைச்சர் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் குடும்ப நிதி உதவியை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியது. பத்தி ரிகையாளர் நல நிதியத்துக்கென தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.1 கோடி நிரந்தர நிதியாக வைப்பீடு செய்யப்பட்டது. இதில் இருந்து கிடைக்கும் வட் டியைக் கொண்டு, பத்திரிகையாள ருக்கு நிதியுதவி, கரோனா தடுப்பு நடவடிக்கையின்போது பணியாற் றிய பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் வீதம் 5,782 பத்திரிகையாளர்களுக்கு மொத்தம் ரூ.2.89 கோடி சிறப்பு ஊக்கத்தொகை ஆகிய உதவிகள் வழங்கப்பட்டன.

கரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத் துக்கு முதலமைச்சர் பொது நிவா ரண நிதியில் இருந்து வழங்கப்படும் இழப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்ட துடன், 20 வாரிசுகளுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.2 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

பத்திரிகை துறையில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் குறைந்த வாடகையில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பத்திரிகை யாளர் நல நிதியத்தில் இருந்து வழங் கப்படும். மருத்துவ உதவித்தொகை ரூ.2 லட்சத்தில் இருந்துரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் அங்கீகார அட்டை பெற்றுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கட்டணமில்லாப் பேருந்து பயண அட்டை போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

பத்திரிகையாளர்கள் ஓய்வுக்கு பிறகு, எந்த இயலாமைக்கும் ஆளா காமல் இருக்க, அரசு சார்பில் மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதன்படி, நாளி தழ்கள், பருவ இதழ்கள், செய்தி முகமைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதம்ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் அடையாளமாக, இதற்கான உத்தரவுகளை 7 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மைச் செயலகத்தில் வழங்கினார்.

செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை பொறுப்பு செயலர் ம.சு.சண்முகம், செய்தி, மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

ரேஷன் கடை பெண் ஊழியர்களுக்கு 12 மாத மகப்பேறு விடுப்பு தமிழ்நாடு அரசு ஆணை

 

சென்னை, செப்.11  நியாய விலை கடையில் பணிபுரியும் பெண் விற்ப னையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அரசு பெண் பணியாளர் களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதத்தில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர்களுக்கு அரசால் அவ்வப்போது அறிவிக்கப் படும் மகப் பேறு விடுப்பு குறித்த சலுகைகள் கூட்டுறவு நிறுவனங்களில் பணி புரியும் மகளிர் பணியா ளர்களுக்கு பொருந்தும் என கூட்டுறவு சங்கங் களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூட்டு றவு சங்கங்களின் பதி வாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி யுள்ளார். அதில், அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதத்தில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள் ளது. அரசு பணியாளர் களுக்கு அரசால் அவ்வப் போது அறிவிக்கப் படும் மகப்பேறு விடுப்பு குறித்த சலுகைகள் கூட்டுறவு நிறுவனங்களில் பணி புரியும் மகளிர் பணியா ளர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள் ளது. அதன்படி, நியாய விலை கடைகளில் பணி புரியும் பெண் பணியாளர் களுக்கும் 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு பொருந்தும்.

இதற்கென அனைத்து சங்கங்களிலும் தேவை யான சிறப்பு துணை விதி திருத்தம் மேற்கொள்ளப் பட்டு தகுதியுள்ள பெண் பணியாளர்களுக்கு இவ் விடுப்பினை அனுமதிக்க தங்கள் அளவில் தக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். தங்கள் மண்ட லத்தில் செயல்படும் அனைத்து கூட்டுறவு சங் கங்களின் கட்டுப்பாட் டில் உள்ள நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் பெண் விற்பனையாளர் கள் மற்றும் கட்டுநர் களுக்கு அரசாணையின் படி 12 மாதங்கள் மகப் பேறு விடுப்பு அனுமதிக்க தேவையான துணை விதி திருத்தங்கள் மேற்கொள் ளப்பட்டு தகுதியுள்ள அனைத்து பெண் பணி யாளர்களுக்கும் மகப் பேறு விடுப்பு அனுமதிக் கப்படுவதை தங்கள் அளவில் கண்காணித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அரசு பணியாளர் களுக்கு, அரசால் அவ்வப் போது அறிவிக்கப்படும் சலுகைகள் நியாய விலைக் கடை பணி யாளர்களுக்கும் பொருந் தும் என பதிவாளரால் தெரிவிக்கப்பட்ட இனங் களில் அரசு பணியாளர் களுக்கு அரசால் அறிவிக் கப்படும் சலுகைகள் தொடர்பாக உடனுக் குடன் சங்க துணை விதிகளில் உரிய திருத் தங்கள் மேற்கொள்ளப் பட்டு சம்பந்தப் பட்ட பணியாளர்களுக்கு அச்ச லுகைகள் கிடைக்க உட னுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், அவ்வாறு திருத்தங்கள் மேற்கொள் ளப்படாமல் இது போன்ற புகார்கள் பெறப் படுவதை தவிர்க்க வேண் டும். இவ்வாறு அந்த சுற் றறிக்கையில் கூறப்பட் டுள்ளது.


தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை அமைச்சர் தங்கம் தென்னரசு

 


    

கிருஷ்ணகிரி, நவ. 26 தமிழ்நாட்டில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதை இந்த அரசு உறுதி செய்யும் என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

டாடா எலெக்ட்ரானிக்ஸ் தொழிற் சாலையில் புலம்பெயர் தொழிலாளர் களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித் துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டை தாலுகாவில் அமைந் துள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை அளித்த குற்றச்சாட்டு தொடர்பாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "டாடா எலெக்ட் ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமி டெட் நிறுவனம், மின்னணு பொருட் களை உற்பத்தி செய்வதற்காக தனது தொழிற்சாலையை கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள நிவிஸி தொழிற்பூங்காவில், சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்து வருகிறது.

4684 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுவரும் இத்தொழிற் சாலையின் மூலம் ஏறத்தாழ 18 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத் தொழிற்சாலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருவதாக பத்திரிகை செய்திகளும் புகார்களும் அரசிற்கு வந்துகொண்டிருக் கின்றன. இந்நிறுவனம் தற்போது வரை தமிழ்நாட்டைச் சார்ந்த ஏறத்தாழ 5500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. வணிக ரீதியிலான உற்பத்தியினைத் தொடங்கும்போது பணியாளர் தேவை யில் ஏறத்தாழ 80 விழுக்காடு பணியிடங்களுக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த வர்களை நியமிக்க டாடா எலெக்ட் ரானிக்ஸ் நிறுவனம் பொறுப்புறுதி அளித்துள்ளது.பணிநியமனத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த பணியாளர் களின் எண்ணிக்கை அதிகரிக்கப் படுவதை உறுதி செய்யும் பொருட்டு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு (மற்றும்) வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஆகியோர் இந்நிறுவ னத்துடன் கலந்தாலோசனை மேற் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, இந்நிறு வனம் சார்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வாயிலாக நாமக்கல் (14.10.2022), தர்மபுரி (15.10.2022), கிருஷ்ணகிரி (15.10.2022, 16.10.2022, 29.10.2022) (ம) 6.11.2022 (ஓசூர்), விழுப்புரம் (15.10.2022), திருப்பத்தூர் (17.10.2022), சேலம் (19.10.2022), பெரம்பலூர் (20.10.2022), திருவண்ணாமலை (20.10.2022), இராம நாதபுரம் (20.10.2022), மயிலாடுதுறை (21.10.2022), கள்ளக்குறிச்சி (22.10.2022), புதுக்கோட்டை (28.10.2022), ஈரோடு (30.10.2022 (ம) 31.10.2022), சிவகங்கை (2.11.2022), வேலூர் (12.11.2022), மதுரை (15.11.2022), திருநெல்வேலி (17.11.2022), தேனி (17.11.2022), காஞ்சிபுரம் (18.11.2022), திண்டுக்கல் (18.11.2022), தூத்துக்குடி (19.11.2022), செங்கல்பட்டு (19.11.2022), இராணிப்பேட்டை (20.11.2022), விருதுநகர் (22.11.2022), தஞ்சாவூர் (22.11.2022), தென்காசி (23.11.2022), நாகப்பட்டினம் (23.11.2022), நாகர்கோவில் (24.11.2022), திருவள்ளூர் (24.11.2022) ஆகிய மாவட்டங்களில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

மேற்காணும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களில் 7559 நபர்கள் கலந்து கொண்டனர். அவர்களில், 1993 நபர் களுக்கு தற்போது வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந் நிறுவனம் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 3 நாட்கள் நடந்த வேலைவாய்ப்பு முகாம் களில் 895 நபர்கள் கலந்துகொண்டதில், 355 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு நிறுவனத்தால் வேலைவாய்ப்பு வழங்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அமைந்துள்ள பிற தொழில் நிறுவனங்களும் தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கு வதை இந்த அரசு உறுதி செய்யும்" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

 November 26, 2022 • Viduthalai