செவ்வாய், 13 ஜூன், 2017

பணி நிறைவு பாராட்டு விழா- கடலூர்


கடலூர், பிப். 11- கடலூர் மாவட் டம் உணவு பாதுகாப்பு (ம) மருந்து நிர்வாகத்துறை அலு வலர்கள் சார்பாக நெல்லிக் குப்பம் நகராட்சி மற்றும் அண்ணாகிராமம் வட்டாரம் உணவுப்  பாதுகாப்பு அலுவ லர் இரா.கந்தசாமி அவர்க ளுக்கு பணி நிறைவு பாராட்டு விழா 31.1.2017 அன்று மாலை கடலூர் மஞ்சக்குப்பம் அபி நயா ஓட்டலில் நடைபெற்றது.
அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளரும், கடலூர் வட் டார உணவு பாதுகாப்பு அலு வலர் இரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னதாக உணவு பாதுகாப்பு அலுவலர் ப.நல்ல தம்பி வரவேற்புரை ஆற்றி னார். திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் அவர்கள் இரா. கந்தசாமி அவர்களது பணிக் காலத்தில் தொழுநோய், பொது சுகாதாரம், உணவுப் பாது காப்பு ஆகிய துறைகளில் அவர் சிறப்பாக பணியாற்றிய நிகழ்வுகளை சுட்டிக்காட்டி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சிவக்குமார், பண்ருட்டி தொகுதி முன்னாள் செயலா ளர் க.இராமசாமி, முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் சீ. பாலசுந்தரம், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் டி. புருசோத்தமன், அரசு ஊழியர் சங்க மு.மாவட்ட செயலாளர் காசிநாதன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இல.அரிகிருஷ்ணன், நெல் லிக்குப்பம் வணிகர் சங்க தலைவர் இராமலிங்கம், திருக்கோவிலூர் உணவு பாது காப்பு அலுவலர் சரவணன், அஞ்சல் துறை மாவட்ட செயலாளர் இரட்சகர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் டி. மகாலிங்கம், கோவி.சுப்பிர மணியன், ஞானமணி ஆகி யோர் உரையாற்றினர்.
விழாவில் மாவட்ட கழக முன்னாள் செயலாளரும், பண்ருட்டி ஜோதி ஸ்டியோ உரிமையாளருமான கோ.புத் தன், அண்ணா கிராம ஒன்றிய கழக செயலாளர் இ.இராசேந் திரன், கிளை செயலாளர் ப. நாகமுத்து, சாத்திப்பட்டு பால முருகன், அருள்குமார், இரா. கந்தசாமி அவர்களது துணை வியார் க.அமுதா, மகன் க. திராவிடமணி, மகள் பகுத் தறிவு, மருமகன் செ.நவீன் மற்றும் உறவினர்கள், உடன் பணியாற்றுபவர்கள்.
ஓய்வு பெற்ற அரசு ஊழி யர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சீ.செந்தாமரைக் கண்ணன் நன்றி கூறினார். முன்னதாக விழா நாயகர் இரா.கந்தசாமி ஏற்புரை வழங்கினார்.
-விடுதலை,11.2.17

சனி, 10 ஜூன், 2017

கோத்ரேஜ் நிறுவன ஊழியர் பணி நிறைவு பாராட்டு-5.5.17

 மறைமலைநகர், மே 15- கோத் ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச்சங்க செயற்குழு உறுப் பினர் எம்.கே.சூரியகலாவதி அவர்கள் கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்டு நிறுவனத்தில் (மறை மலை நகர்) 34ஆண்டுகள் பணி யாற்றி 5.5.2017இல் ஓய்வு பெற் றார்.
5.5.2017 பிற்பகல் 4 மணி அளவில் தொழிற்சாலை வளா கத்தில் தொழிலாளர்கள் சார்பி லும், அலுவலர்கள் சார்பிலும் தொழிற்சாலை மேலாளர் பசுபதி அவர்கள் தலைமையில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற் றது. சங்க துணைச் செயலாளர் ம.கருணாநிதி வாழ்த்து மடல் அளித்தார்.  சங்க செயற்குழு  உறுப்பினர்கள் க.சிவகாமி, வ. வசந்தி, பா.இயேசுராஜா மற் றும் தொழிலாளர்களும் அலுவ லர்களும் பெருவாரியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். கோத் ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டு, அன்பளிப் புடன் பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தொழிற் சாலை மேலாளர் பசுபதி, மனித வள அலுவலர் ஜோசப் மரியதாஸ் இராஜசோகர், சங்க தலைவர் த.ரமேஷ், துணச் செயலாளர் கோ.கணேஷ், செய லாளர் செ.ர.பார்த்தசாரதி பொரு ளாளர் க.நாகராஜ் மற்றும் துணைத் தலைவர் கோ.குமாரி ஆகியோர் பங்கேற்று சிறப்பித் தனர்.
-விடுதலை,15.5.17