புதுடில்லி, ஜூலை 18_ பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் களுக்கு ஊதியத்துடன் 3 மாத விடுப்பு வழங்கப் படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு நிறுவனத்தி லும் புகார் குழு என்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள் ளது.
இந்தக் குழுவின் தலைவராக ஒரு பெண் இருப்பார். ஒருவேளை ஒரு நிறுவனத்தின் உயர் பதவியில் பெண் அதிகாரி இல்லையெனில், வேறு நிறுவனத்தில் பணியாற் றும் பெண் அதிகாரி, குழு வின் தலைவராக இருப் பார். மேலும், அந்தக் குழு வில் உள்ளவர்களில் பாதி யளவுக்கும் மேற்பட் டோர் பெண்களாக இருப் பார்கள்.
இந்நிலையில், இந்தப் புகார் குழுக் களுக்கு புதிய வழிகாட் டும் விதிமுறைகளை மத் தியப் பணியாளர், பயிற் சித் துறை வெள்ளிக் கிழமை அறிவித்தது. அந்த அறிவிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:
பாலியல் புகார்களை அலட்சியமாகவோ, யதேச் சாதிகாரத்துடனோ விசா ரிக்கக் கூடாது. பாதிக்கப் பட்ட பெண் அல்லது குற்றம்சாட்டப்பட்ட அலுவலருக்கு பணியிட மாறுதல் அளிக்குமாறு பரிந்துரைக்க புகார் குழுவுக்கு அதிகாரம் உள் ளது. மேலும், பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு ஊதி யத்துடன் 3 மாத விடுப்பு வழங்குவதற்கு பரிந்து ரைக்கவும் அதிகாரம் உள்ளது.
பாலியல் புகார் தொடர்பான விசாரணை களில், தன்னார்வ அமைப்பு அல்லது பாலியல் குற்றங் களுக்காக போராடும் பிரபல அமைப்பை மூன் றாவது நபராக புகார் குழு அனுமதிக்க வேண் டும். பாலியல் தொந்தர வுக்குள்ளான 3 மாதங் களுக்குள் பாதிக்கப்பட்ட வர் புகார் தெரிவிக்க வேண்டியது அவசியம். குற்றம்சாட்டப்பட்ட நபரின் ஊதியத்தைப் பிடித்தம் செய்ய பரிந்து ரைக்கவும், அந்தத் தொகையை பாதிக்கப் பட்டவருக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கவும் புகார் குழுவுக்கு அதி காரம் உள்ளது.
ஒரு வேளை, உள்நோக்கத் துடனோ, தவறாகவோ, போலி ஆதாரங்களைக் காட்டியோ பாலியல் புகார் கொடுத்தால், அவர் களுக்கு எதிராக நட வடிக்கை எடுக்கப்படும். குற்றம் சாட்டப்பட்ட வர், தனக்கு எதிரான ஆதாரங்களை கொடுக்க விரும்பும் சாட்சிகளை மிரட்டினோலா, அச் சுறுத்தினாலோ அந்தப் புகார்களைக் கொடுத்த வர்களுக்கு எதிராக கடு மையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், புகார் குழுவுக்கோ, அந்தக் குழுவின் உறுப்பினர் களுக்கோ, விசாரணை அதிகாரி உள்ளிட்டோ ருக்கோ மிரட்டல் விடுத் தாலும் கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-விடுதலை,18.7.15