இலங்கையில் தோட்ட தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் முதல்முறை யாக தங்களின் உரிமைகளுக்காக தொழிற்சங்கத்தைத் தொடங்கி உள்ளனர். இத்தொழிற்சங்கத்துக்கு பெண்கள் ஒற்றுமை ஒன்றியம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
பெண்கள் ஒற்றுமை ஒன்றியம் தொழிற்சங்கத்தை ஏற்படுத்தியுள் ளவர்களில் ஒருவரான பத்மினி விஜயசூரிய கூறுகையில், இலங்கையில் தொழில் ரீதியாக பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நோக்குடன், முதல் முறையாக பெண்களுக்காக, பெண் களால் நடத்தப்படும் தொழிற்சங்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் உரிய முறையில் பதிவு செய்யப்படும்.
நாட்டிலுள்ள ஏனைய தொழிற் சங்கங்கள் பெண்களின் தொழில்சார் உரிமைகளை பெரிய அளவில் கண்டு கொள்ளாத காரணத்தாலேயே பெண் களுக்கு என்று தனியான தொழிற் சங்கத்தை தொடங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்கெனவே செயல்பட்டுவரக்கூடிய தொழிற்சங்கள் தொழிலாளர்களின் பொதுவான அல்லது முக்கியமான பிரச்சினைகளுக் காகப் போராட்டங்களை நடத்து கின்றன. ஆனால், அவை தொழில் புரியும் பெண்களின் உரிமைகளைப் பெரிதாக கருத்திற்கொள்வதில்லை.
குறிப்பாக, தொழில் செய்யும் பெண் களில் பலர் பாலியல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதோடு, தொழில் புரியும் இடங்களில் அடக்குமுறைகளையும் எதிர்கொள்கின்றனர்.
குறிப்பாக, தொழில் செய்யும் பெண் களில் பலர் பாலியல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதோடு, தொழில் புரியும் இடங்களில் அடக்குமுறைகளையும் எதிர்கொள்கின்றனர்.
இந்த முயற்சி என்பது பிற தொழிற் சங்கங்களை பலவீனப்படுத்துவதற்காக அல்ல. தொழில் ரீதியாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முற் றுப்புள்ளி வைப்பதே இதன் நோக்கம்.
முதற்கட்டமாக ஏற்றுமதிக்காகவே அமைக்கப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் புரியும் பெண்கள் மற்றும் தோட்டத்துறையில் தொழில் புரியும் பெண்களுக்கு குரல் கொடுப்பது முக்கியமான இலக்காக இருக்கிறது.
அதேவேளை, இவ்வமைப்பு வீட்டு வேலை செய்யும் பெண்கள் மற்றும் வெளிநாடுகளில் பணி புரியும்போது பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் பெண்கள் தொடர்பான வைகளில் கவனம் செலுத்தவுள்ளது. இந்த புதிய தொழிற்சங்கத்தினூடாக தொழில் புரியும் பெண்கள் அதிக நன்மையடைவர் என்று நம்பிக்கை யுடன் பத்மினி விஜயசூரிய குறிப்பிட் டுள்ளார். _பிபிசி தமிழோசை
அதேவேளை, இவ்வமைப்பு வீட்டு வேலை செய்யும் பெண்கள் மற்றும் வெளிநாடுகளில் பணி புரியும்போது பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் பெண்கள் தொடர்பான வைகளில் கவனம் செலுத்தவுள்ளது. இந்த புதிய தொழிற்சங்கத்தினூடாக தொழில் புரியும் பெண்கள் அதிக நன்மையடைவர் என்று நம்பிக்கை யுடன் பத்மினி விஜயசூரிய குறிப்பிட் டுள்ளார். _பிபிசி தமிழோசை
-விடுதலை ஞா.ம.,8.8.15